ஞாயிறு, 21 நவம்பர், 2010

பல்வேறு சுவைகளில் பெண் மனசு -TOP TEN பாடல்கள்.

வணக்கம் பெண் மனசை வெளிபடுத்தும் அல்லது பெண் குரலில் பாடிய வரிகளை தொடர்பதிவாக இட அழைப்பு விடுத்திருந்தார்கள் ரோசா பூந்தோட்ட சகோக்கள்
நான் ரசித்த பாடல் வரிகளை தொடுத்துள்ளேன்

சுவாசிக்கும் காற்றோடு
கலந்த தேன்சுவை
கீதங்கள் என் தமிழ்
கவிஞர்கள் தொடுத்த
வரிகள் உறவுகள்
சேர உணர்வுகள்
ஏங்கும்
நஞ்சுன்னும்
போதும் அமுதாக
இனிக்கும் வரிகள்
அலைபோல அழைத்திடும்
ஆனந்தம் இதுவென
விமர்சனம் இல்லாமல்
கொடுத்துள்ளேன்
விமர்சிக்க முடியாத
வரிகளை
நம்ம பாட்டி
கடை இட்லிபோல
என்ன பாக்கறீங்க
சுவைத்து பாருங்கள்
சுடாமல் சுடும்
பசிக்கு ரசிக்க
ருசி பறந்து போகும்
சுவையான வரிகள்


10,மாலையிட்டமங்கை'
T.R.மகாலிங்கம்பாடியது

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே

நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே

நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே....ஆ...ஆ..ஆ..ஆ..ஆ .. "

செந்தமிழ் தேன் மொழியாள்

நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள் (நிலாவென) (2)

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்'

காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ' அவள்

கண்களில் நீலம் விளைத்தவளோ

அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ

பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்
இன்றும் நான் எங்கு சென்றாலும் எனக்கே அறியாமல் நான் முன்னுக்கும் பாடல் இது என்னோட மனசக்கு ஒரு ஊட்டச்சத்து மாதிரின்னு வச்சுக்கலாம் அம்மா இன்றும் சொல்லுவாங்க இந்த பாட்ட எங்காவது கேட்ட என் சின்ன பிள்ளை பாட்டுன்னு

9,படம்: சேரன் பாண்டியன்

சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது
இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது
நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி


குமரி நீயும் குழந்தையடி, மாங்கொழுந்து தானே இதயமடி
பொறந்த பாசம் தவிக்குதடி
உன்னை பார்க்க மனசு துடிக்குதடி
என்ன நடந்ததால் உந்தன் முகம் சிவந்தது
இந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது
இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடி

அண்ணன் தங்கச்சி மேல வச்சிருக்கற பாசம் அண்ணனா இன்னைக்கும் தங்கச்சி எல்லாருக்கும்

8,படம்:இந்திரா

விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
ராரரா…

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

"காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு"
உண்டாகனும்..........


7,படம்: மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
தன்னம்பிக்கை வரிகள்
இது தொடரும் நாளைய பதிவில்..................

23 கருத்துகள்:

சுசி சொன்னது…

ரொம்ப வித்தியாசமான தொடரா இருக்கே..

ஹேமா சொன்னது…

கடைசி இரண்டு பாடல்களும் நான் விரும்பிக் கேட்கும் பாடல்கள் !

வினோ சொன்னது…

நீங்க நடத்துங்க தினேஷ்..

Philosophy Prabhakaran சொன்னது…

நீங்கள் சொன்ன பாடல்களில் அந்த சேரன் பாண்டியன் பட பாடலை மட்டும் இதுவரை கேட்டதில்லை... கேட்க முயல்கிறேன்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தொடர் பதிவு எழுத ஆரம்பிச்சாச்சா?நடக்கட்டும்

NaSo சொன்னது…

நல்ல நல்ல பாடல்களை எல்லோருக்கும் அறிமுகப் படுத்துங்கள் தினேஷ்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எல்லாப் பாட்டு நல்லா இருக்கு மக்கா.. பாட்டுல உங்களுக்கு என்ன புடிச்சது, சிறப்பம்சம் என்ன அப்படின்னு ஒரு ரெண்டு வரி சேத்துக்கலாம்னு நெனக்கிறேன்....!

தமிழ்க்காதலன் சொன்னது…

நண்பா அத்தனையும் நான் நெஞ்சம் நனைய பாடிய பாடல்கள்... அற்புதம். மனித உணார்வுகள் படம் பிடித்த பாடல்கள். பாராட்டுக்கள். வரிகளை வடித்ததற்கு.

karthikkumar சொன்னது…

சேரன் பாண்டியன் பாட்டு நல்லா இருக்கும் பங்காளி பன்னிகுட்டி பங்கு சொன்னதுபோல் உங்க கருத்தையும் எழுதுங்க

சாருஸ்ரீராஜ் சொன்னது…

பாட்டு வரிசை அனைத்தும் சூப்பர். முதல் பாட்டு எனக்கு பிடித்தது.

Unknown சொன்னது…

செந்தமிழ் தேன் மொழியாள்...

karthikkumar சொன்னது…

NICE

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தொடர் பதிவு எழுத ஆரம்பிச்சாச்சா? கங்கிராட்ஸ்

Unknown சொன்னது…

தினேஷ் , இவ்வளவு விரைவில் இது பற்றி பதிவிட வருவீர்கள் எதிர்பார்க்கவில்லை..அருமை..
உங்க ஸ்பீட் ஒன் டெரா பைட் ,,...

Unknown சொன்னது…

//வார்த்தையிலே தெளிவும் வேண்டும்//
//ஞான தீபம் ஏற்ற வேண்டும்//
//சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ//

Unknown சொன்னது…

மீதி பாடல்களுக்காக காத்திருக்கிறோம்...

Unknown சொன்னது…

பதிவு அருமை , பாடல் வரிகளை விட, பாடல் பற்றிய உங்கள் விமர்சனங்களை அதிகம் எதிர்பார்க்கிறோம்..

ராஜவம்சம் சொன்னது…

கொடுத்த வேலைய பொருப்பா செஞ்சிருக்கீங்கப்பு.

THOPPITHOPPI சொன்னது…

வரிகளுக்கு நன்றி

மோகன்ஜி சொன்னது…

தினேஷ்! நல்ல ரசனை உங்களுக்கு.. நலம் தானே?

அன்புடன் மலிக்கா சொன்னது…

அப்படியே வாங்க http://niroodai.blogspot.com/2010/11/blog-post_23.html//
நாங்களும் எழுதிட்டோமுல்ல வந்துபாருங்க.

நல்லதேர்வுகள் தினேஷ்..அடுத்தவைகளுக்கு ஆவல்..

logu.. சொன்னது…

aga.. senthamil then mozhiyal..

Engiyo poiteeenga..

vanathy சொன்னது…

எல்லா பாட்டுக்களும் அருமை.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி