ஞாயிறு, 30 ஜனவரி, 2011

கழுமரமேறும் கட்டுமரஙகள்...



தமிழக அமைச்சா... தமிழக அமைச்சா...
தரங்கெட்டு போவதேனோ...?
தன்னுடல் விற்று
தன்குடில் காப்பவள் கூட....
மாசற்ற மனம் கொண்டாள்..!

வடக்கே விற்று வழக்கே
இல்லா கிழக்கே குவித்த
பணகுவியலாய் பிணக்குவியல்...!?

மாண்டு போக தமிழன்
வரம் பெற்றானா..? மண்ணை
மதித்து மானம் காக்கும்
மறத்தமிழன் மாளவில்லையடா...!
மானுட மிருகமே....

குறுக்கு வழியில் கொழித்து
கோபுர மாக்கல் செழிக்க
இன்னும் எத்துனை கோடி
கொள்ளையடிப்பாய்...!
குருட்டு மிருகமே....

சூளுரைத்து வாள்பிடிக்க
ஆளில்லை...! ஆனது ஆகட்டும்
போனது போகட்டும்,- கடுதாசி
எழுதியுள்ளேன் கருணைமனு
கொடுத்துள்ளேன்..
சிறைபிடித்தாயோ எம்மண்ணை..?!
சிருங்காட்டு 'ச்சீ'வனமே...

சினம் கொள்ளும் நிலைக்குள்
சீர்படுத்த எத்தனித்து எதிர்கொள்...
ஆயிரமாயிரம் போர்க்கருவிகள்
அடக்கமாகும் உன்னத தமிழர்களின்
அகத்துள் அகம் கொண்ட சினம்
புறம் காண நினைத்துவிடின்...

ஆயிரம் தலை கொல்லும்
ஆற்றலும் படைப்பான் அழிவை
நோக்கிப் பயணிக்காதே...!
மயானமாகும்......
மாற்றம்கொள்...,
போற்றுவானே தூற்றுவான்
தூற்றுவானே ஏற்றுவான்.

பொறுக்கா மனம்கொண்டு
பொறுக்கும் உன்னை...
போற்றிச் சொல்லா மானுடம் பிறக்க
மாறும் வனத்தில் மீறும்
மிருகம் மிகையில்லா பகையாகும்.

மீள்வதரிது... மீட்டெடு எந்தன்
மீனவ மக்களை..., இல்லையேல்
துடுப்பேந்தும் கைகளும் துப்பாக்கி ஏந்தும..!!
மனதில் வைத்துக்கொள்..........

வெள்ளி, 28 ஜனவரி, 2011

சூடாமணி ...



ஆடை யிழந்து வாடை மறந்து
கபாலநாடி காட்டும் சன்னலறுத்து சகி
மாடம் தவிர்த்து மீளு மது
மதிகெ ட்டோன் சாகுமிடத்து சன்னதி

மறுமதி மீளுமதி சூடாமணி
வெள்ளொருத்து விலைமருந்து
சில்லெடுத்து சினம் கொள்வாயேன்..?
சித்தம் தெளியும் உத்தமனாம்.

கலனும் நிறையும் காலன் கரையில்
தருணம் கருணம் கர்மத் தொடறேன்
நிலமத்தில் வேலினரைத்தான் பொருட்
கொள்ள மறுத்த மயானம்

மறுகும் கனனம் அழிவின் சரணம்
எளிதாய் விறகும் கற்று வித்தான்
காட்டான் காரியம் சூடும் மலரது
நாற்றம் நாசி மரணம்.

வெள்ளி மலர்ந்தது


வியாழன் விடிந்து விரைந்து வலைந்து
வேலைத் தொடர்ந்து மாலை மலர்ந்து
இருளும் சூழ்ந்து இனம் புரியா
அக மகிழ்ச்சி அலைப்பாய

இனியதொரு நட்பின் சந்திப்பில்
கதைகள் பலகடந்து காலங்கள் தாண்டி
அன்பின் பயணத்து அளவில்லா
அரவணைப்பில் அடங்கிபோனேன்

பொழியா மழையது மனமதில் மெய்யா
அடைமழையாய் ஆளும் காற்றுடன்
ஆரவாரமின்றி குளிர்த்து குளித்து நனைந்த
பொழுதில் வெள்ளி மலர்ந்தது

கலியுகம் : அண்ணன் நாஞ்சில் மனோ அவர்களின் சந்திப்பில் அடைமழையில் நனைந்த மனம் உதிர்க்கும் வரிகள்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

"குடி'யான' தினம்...!"


கொடிவணக்கம் கொடிவணக்கம்
கோடி கோடி மக்கள் கூடி
தனையிழந்து தேசம் காக்க...
நேசம் கொண்டு மாண்டு மாய்ந்த
உத்தமவாதிகள் உத்தரவில்லாமல்
சூறையாடப்பட்டு சிறைகண்டு
சினம் கொண்டு சீறிப்பாய்ந்த
இளஞ்சிங்கங்கள் எத்துனையாயிரம்...!!
முதல் வணக்கம் எந்தன் முழுவணக்கம்

ரத்தசரித்திர யுத்த பூமியாய்....
நித்தம் காட்சி தரும் ருத்ரதாண்டவம்...!
தேசம் சுமந்து தேசம் சுமந்து
நேசம் வளர்த்து பாசம் செழித்து
பகலெல்லாம் இருளாகி பாடுபட்டு
பெற்ற சுதந்திரம் ஒருநாள் கூத்தாக...!

கூடி நின்று கும்மியடிக்கும்
கூட்டமத்தில் சாட்சி சொல்ல..
சாலரப்படை சகிதம் கம்பீரமாய்
காட்சி வேறு..., துச்சனே....!

சுற்றம் மட்டும் சூழவேண்டும்
சுற்றியுள்ளோன் மாளவேண்டி
யுத்தம் செய்ய எத்தனிக்கும்
உத்தமமிழந்து குறிபார்க்கும்
கூட்டத்துக்கு குடியான தினம்...!!
ஒருநாள் வேடிக்கை,- இதுவே
அவர்களின் வாடிக்கை..!!

யுத்தங்கள் ஆயிரம் சத்தம்
கேளா செவியடைத்து செந்நீர்
பருகும் கூட்டம் மாளுமன்று
திருநாளாய் வருமென்று
திகைப்போடு எதிர்நோக்கி
வசம்பாடி இசைந்து வரும்
வாலில்லா கூட்டமென்று
திருந்தபோகும் திருத்தப்பட்ட நாள்
நாளைய தினமாக மாறாதோ...?!

திங்கள், 24 ஜனவரி, 2011

"வினையறுத்தக் காதல்...!"



சரீரம் என்றுமே சாம்பல் தானடி..!
முற்களாய் துளைக்கும் சொற்கள் ஏனடி...?
கல்லுக்குள் இருக்கும் தேரை நானடி...!
உன்னுள் இருக்கும் இறக்கும் மாயம் ஏனடி..?

உடனும் தொடர்வேன் உயிராய் படர்வேன்
கரையாய் அமர்வேன் உன் எல்லைகாக்க,
மற்றோர் மனம் உணரும் மாந்திரீகன்
சிற்றாரின் சிநேகிதன் உன்னுள்..?

கருவாட்டு வாசம் காகிதபூ பேசும்
கல்லெறியும் மோகம் கரைசேரா தாகம்
கானமிலா ராகம் கருவிழிகள் பாடும்
சிலிர்க்குமடி என் தேகம்...!

சிந்தனைகள் வீசும் கரும்பாக பேசும்
களிப்பான தனிமையிலும் என்னுள் ஓர்குரல்...!
யாரென அறியேனே பித்தனாகிய காட்சிதனில்
கரைகலற்று ஓடும் காட்டாறு..!

அற்றில்லா பற்றில்லா அன்பில்லா ஆசையில்லா
அனலடிக்கும் கனலாகும் காற்றுக்கும் வேடமிடும்
வீழ்ச்சிகளின் தொடர் சூட்சமத்தின் நிழல்
சூழ்ந்திருக்க சூதன பறவையாவேன்...!

சுட்டெரிக்க சாம்பலாக சுற்றிவந்து வட்டமிட்டு
விண்ணுக்கும் மண்ணுக்கும் செப்பனிட்ட பாலமொன்று
காலனுக்கும் கப்பமுண்டு காத்திருக்கேன் விண்வழியே
உனை துறந்து வா வெளியே...!!

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

"நேசத் தந்தை...!" ( நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் )

சாதி மத சாக்கடையில் எம்சமூகம்
மூடநம்பிக்கை புழுக்களைத் தின்று நிதம்
அடிமைப்பட்டு அண்டி பிழைத்து முதுகு
ஆங்கோர் கேள்விக்குறியாய் வளைந்து நெளியும்

வாழ்க்கைக்கு விடுதலை வேண்டியோ வந்தீர்..?!
வங்கத்து புயலாய் தேசம் வளைத்தீர்..!
வருங்கால சுதந்திரம் வாலிபத்தின் கையில்
வருவது கண்டீர்..! வாழ்வது தந்தீர்..!

முடங்கிக் கிடந்த முதுமை எழுச்சிக்காண
முழக்கம் செய்வதும் பழக்கம் இளைஞர்
எழுச்சியின் பாசறை நீர் நேசரே..!
வேங்கையின் வேகம் உமக்கு,- வெகுண்டு

எழும் கோபம் உமக்கு,- நீர்
தொழும் தேசம் நமக்கு நமதென்பது
நாமறிய நாட்டுப்பற்றை நாடெங்கும் விதைத்து
நல்லோர் நெஞ்சில் நீங்கா இடம்கொண்ட

நாயக...! எங்கள் தாயக வேந்தே...!!
முடிசூடா எங்கள் முப்படை தளபதி..!
முன்னோர் செய்தவத்தின் முழுபயன் நீ...!
இன்னோர் வாழ இன்னுயிர் ஈந்தனை

நாடெங்கும் வாழ்ந்தனை இளையோர் நெஞ்சில்
காடாகி வளர்ந்த புரட்சி வித்து ...!
நாடாது போனால் நாடேது இங்கே...?
கூடாத கூட்டத்து சேராது சேர்ந்த

செம்மல் உம்போல் ஒரு சிங்கம்
காணவேண்டும் இன்றைய பாராளு மன்றம்...
வருவாயோ..? வாழ்க்கை தருவாயோ..? இந்திய
இறையாண்மை இறந்து கொண்டிருக்கும் இவ்வேளையில்...!!

வெள்ளி, 21 ஜனவரி, 2011

"ஆழியடக்கம்...!"


நிலை யில்லா நிகழ்விருக்க விழியுணரும்
நாழிகையும் விடியல் உந்தன் விழிவழிதனிலே
கலைத்திருக்க காலமில்லை பிழைத் திருக்கும்
பிறவிதனில் பிழைத் திருத்த பயணப்படு


அடங்கா அடக்கம் அடுக்கும் அளவின்றி
பசித்திருக்க புசித்திருக்க நிலை தளும்பும்
சரீர சாமர்த்தியம் உடன் தகிக்கும்
கனலடிக்கும் உனை மறைத்து மீண்டுவரும்


ஆழ்துழாது மெல்ல மேலெழும் அன்றே
விதை விழும் துளிர் விடாது
மீண்டுழும் மீள தொழுதுழும் தொடக்கம்
மறந்துழும் மணந்து வினை தரும்


வினைதொழும் விண்ணை மறந்தெழும் உன்னில்
எண்ணம் போற்றெழும் வண்ணம் மாற்றுதையே
சொற்க்கடங்கா நாச்சுவைக் கடங்கா பசுவிர்கடங்கா
சேர்ப்பிலடங்கி செல்லரிக்க புதைகுழிக்குள் அடக்கம்

புதன், 19 ஜனவரி, 2011

சுயம் அழித்த சுயம்பு

உலகில் அனைத்தும் படைத்தே உணர்வுகளால்
உன்னை படைத்தேன் அகம் கொண்ட
சுயமுன்னில் புறத்தே அழிவினை விதைத்தோ
பழியினை ஏற்கும் மானிடா..!

நிலை யில்லா உடல்கொண்டு நிம்மதியின்றி
அலைகிறாயோ ஏன்? நிறம்மாறி பயணிக்கும்
பச்சோந்தி பசிதனில் இச்சைகள் ஆயிரம்
பொறுத்து பொறுத்து பொய்யானதோ...?!

மெய்கள் மறுத்து சிறகொடித்து சிதையும்
சடலமே உன்னில் சலசலக்கும் சங்கீதம்
சங்கதியில்லா சரணம் பல்லவி படைக்க
சகதியில் நனைவது ஏனோ...?

செவ்வாய், 18 ஜனவரி, 2011

"சொல்வாயோ ..? (அ ) கொல்வாயோ..?"


விருட்சமென்று நீ படர்ந்தாய்
நீயுதிர்க்கும் இலையின் சருகாக
நான் படர்ந்தேன் எனை
ஏன் படைத்தாய்

சருகாக நான் பிறந்தும்
எருகாக மாறிய கோலம்
உனை எரிக்கும் சாம்பலிலே
பிழைத்திருக்கும் பல்லுயிர்
என்றாய் பொறுத்திருந்தேன்

நினைத்திருந்தேன் உன்னை
நெஞ்சில் சுமந்திருந்தேன்
அழைத்திருந்தாய் அண்மையில்
பிழைத்திருந்தேன் குழி பறித்தாய்
குழிக்குள் எனை யமர்த்தி ..........


ஞாயிறு, 16 ஜனவரி, 2011

தமிழே என் தமிழே ..!


தமிழே என் தமிழே ..! அன்னை
உன்னை மூலமெனக்கொண்டு
முன்னுயர ஆசையின்றி தமிழ்
முதனெழவே ஈடாக வகுத்திருந்த
முன்னெழு பின்னெழு முற்றமிழை
என் தமிழ்க்கு தமிழ் மூலம்
அறிந்திட்டாய் உன் மூலம்
தமிழ் செழிக்க நீ தொகுத்திருக்கும்
தொகுப்பிலக்கம் முதல் இலக்கியம்
என் மூத்த தமிழுக்கு அறிதிருக்கும்
அவனியில் பிரிதிருக்கும் எங்கும்
துளிர் துளிர் துளிர்த்திருக்கும்
மண்ணில் தழைத்திருக்கும்
விண்ணுயர முளைத்திருக்கும்
கடுகளவு கற்றுள்ளேன் என்னுள்ளில்
என்னுள்ளிருந்து எனை திருத்து
எனையாளும் தமிழே தமிழ் செழிக்க
சரணடைகிறேன் உன்பாதமத்தில்
என்னில் மரணித்து மரணித்து
மீண்டு உயிர்பித்து உயிர்பித்து
தொடர்ந்துன்னை தொடர்வேன்
தமிழ் தொண்டாற்ற மண்ணில்
என்னை வழி நடத்து தமிழ்த் தாயே
உன் பாதமத்தில் வீழ்கிறேன்......

கலியுகம் : தமிழர் திருநாளில் அன்னைத் தமிழுக்கு சமர்ப்பணம் இவ்வரிகள்

வெள்ளி, 14 ஜனவரி, 2011

வாராயோ வாராயோ ஐயா வாராயோ.........


வாரோமையா வாரோமே
வணக்கத்துடன் வாரோமே
வண்ணத்தமிழ் பாட்டெடுத்து
வர்ணித்து வாரோமே
கழனியிலே நெர்கதிரருத்து
கரும்புடைத்து வாரோமே
மண்வாசம் மனம் மணக்க
மண்தோண்டி அடுப்பமைத்து
குடும்பத்துடன் கூடி நின்று
குலவைபோட்டு குலவிளக்காய்
குடும்ப விளக்கு விளக்கேற்றி
கற்பூர ஆராதனையுடன்
மண்னடுப்பில் தீமூட்டி
மண்பானை துணைகொண்டு
கொத்துமஞ்சள் மாலை போட்டு
மஞ்சள் பூசி பொட்டுவைத்து
பசும்பாலும் நன்னீரும் பச்சரிசி
கலவைதனில் பொறுத்திருந்து
பொங்கிவரும் பசும்பாலுமங்கு
பொங்கலோ பொங்கலென்று ஆனந்த
குரல் பொங்க அனைவர் மனதிலும்
ஆனந்தம் கூடே பொங்கிட
பொங்கலோ பொங்கல் ஐயா
மஞ்சள் கைப்பிடி பிள்ளையாரே
ஆவாரம் பூ உண்டு
பூசணிக்காய் பொறியல் உண்டு
பேத்தியிலை தான் பறித்து
உனக்கொன்று தாய் பசுவுகொன்று
பொங்கல் பரிமாறி படையல் உண்டு
வாராயோ வாராயோ ஐயா
வாராயோ உலகாண்டு களைத்திருப்பாய்
பசித்தீர பொங்கல் புசித்து
களைப்பாரும்மையா

வியாழன், 13 ஜனவரி, 2011

யார் நீ


யார் நீ
நிற்கும் நிலையரியாதவன்
நியாத்துக்கு அடிமையானவன்
குடிசைக்குள் குணம் வளர்ப்பவன்
குழந்தையாய் மனம் படைத்தவன்
கொஞ்சும் குமரி உன் கேள்விக்கு
நீயே கேட்டுப்பார் உன்மனதை
நீண்டு விரியும் பாதையிலே
என் பாதசுவடில் பாதம்
பதித்தவளே இன்னுமா புரியவில்லை
நான் யார் என்று
உன்னுள்ளே உண்மையாலும்
உன் மனசாட்சி



கலியுகம் : குறட்டை புலி கேட்ட கேள்விக்கு பதிலாய் எனது வரிகள்

புதன், 12 ஜனவரி, 2011

பொங்கிட பொங்கிட பொங்கலோ.....



கோவக்கார கோரைப்பல்லு கோணத்தீ கோவத்தில்
தனையறுக்க தலைகுனிந்து தரை நோக்கும்
அரி துயிரின் தன்மானத்தில் தழைத்தோங்க
வதைத்து வரம் வேண்டி வரம்கொடுக்க

பசியுணர்த்தும் பகைவன் அல்ல பாரின்
பசியறிந்த காரணமோ நிலம் திருத்தி
பச்சையம் கொன்று மனம் அறுத்ததேனோ..?!
நீடுழுது பாடுபட்ட விவசாயி பசியுணர்வாயோ...?


விளைந்த நிலம் விழிபிதுங்கி முற்றம்கொண்ட
மொழி மழுங்கி தனை சுருக்கி கண்ணீரில்
கொட்டமடி கும்மியடி மொட்டைமாடி கூத்தடித்து
கூடிநில்லா கூட்டுக்குள் பொங்கவரும் பொங்கலுங்கோ

பொருளுயர்த்த போட்டி போட்டு மனையறுத்து
தினையறுக்க திட்டம் தீட்டி வினையறுத்து
பொன்னிருந்தும் மண்ணிழந்து மதிகெட்டு ஓடுகிறாய்
பணம்பின்னே பொருந்திருந்து யோசி... பொங்கலன்று..!

மெய்மையான வழிதவறி பொய்மையான வழிதனிலே
ஒத்தரூபா அரிசி கூட விளைந்த திங்கில்லை..!
செங்கரும்பு தோட்டத்திலே கரும்புடைத்து
ஆவாரம்பூ மெல்ல சிரிக்கும் மண்மணக்க

கண்ணுக்கழகா மச்சான் விளைந்திருக்கு
மண்ணுக்கழகா மண்ணும் சிவந்திருக்கு
சொல்லுக்கழகா ஏர்பிடித்து மண்ணிற்காக
மார்தட்டி பொங்கல் வைக்கும் ஏர்கரம்

எங்கே ? எங்கே ? எங்கே ?

பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல்
காணும் பொங்கல் பொங்கலோ பொங்கல்
பொங்கிட பொங்கிட பொங்கலோ பொங்கல்
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

"விவேகம்"



தன்னையறிந்தால் தமக்குள்ளும் இறையுண்டு
பந்தம் துறந்தால் பாசமற்றுபோகாது பாரினில்
மங்கையரெல்லாம் தாயின் உருவே..!
ஆடவர் எல்லாம் சகோதரத்துவமே..!
சமத்துவம் அறிந்து தன்னம்பிக்கை
விதைதனை வின்னவர்க்கும் உணர்த்தி
காவியுடுத்தி காலத்தால் அழியாத
உன் வழித்தடங்கள் வாழ்க்கையின்
விவேகம் நிறைந்த உன்னத பாதை
பயணிப்போர் பலன் பெறுவர்.
உம் பாதம் சரணடையும் எம் வரிகள்

செவ்வாய், 11 ஜனவரி, 2011

நினைவு கூறுவோம்


குணம் வென்ற தமிழா
தேசிய கொடிகாத்த குமரா
உனைப்போல எண்ணமிலா
எவர்க்கும் இங்கு
சுயம் வென்ற தீரா
அகம் கொன்று அறம் வென்ற
வில்லில்லா வீரா
விடைபெற்றது ஏனோ
விண்ணுலகம் அழைத்ததுவோ
மண்ணுலகம் மறுத்ததுவோ....


திங்கள், 10 ஜனவரி, 2011

"அறக்குடில் அமைப்போம் வா"




பட்ட படிப்பு படிச்சதில்ல
பச்ச மிளகா காரம் குறைவதில்ல
பட்டு பட்டு படிச்சிருக்கேன்
பட்டம் தர யாருமில்லை.

பாறைகளும் உருகவைக்கும்
பாசக்கார பயபுள்ளை...
பாதியிலே வரும்முன்னே
பாதையிலே வண்ணம் வேண்டும்.

வஞ்சி உன்னை கைபிடிக்க
கொஞ்சி பேசி மணம்முடிக்க
பட்டம் ஒரு தடையாமோ..?
பரிசம் போட முடையாமோ..?

பச்சரிசி பொங்கி உண்ணும்
பட்டதாரி பக்குவமும் நானறிவேன்
பணம் எண்ணி மனம் விதைக்கும்
நாணம் இல்லா நகைப்புகூடே..!

நாளை வென்று காலம் கொன்று
கோர்வையிலா வாழ்க்கை படி
குடில் அமைக்க ஆசைப்பட்டு
தனியே நான் புலம்பவில்லை.

தரமான குடில் அமைக்க - அதனுள்
தனித்தே தான் வாழ்க்கை என்றால்
கவிதை வரிகளில் வாழ்வேனடி..!
காவியமாகும் என் வரிகளடி...!!

கலியுகம் : முந்தைய பதிவு "ஆன்ம குடில் "

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

ஆன்ம குடில்..

SANY0958-1-1.jpg
சருகாது மருகாது இருகாது இணைவதிரு
விரகமிங்கு கனத்திருக்க அனலலர் புனல்
நாற்றம் மருவி நாசி யுலர்த்தும்
ஊசி துளைத்த மாசினியின் உருக்குள்

சுனை யுருகும் கனத்து உருக்கும்
கார் செருவி மணந்து மரைதிருகும்
மார்தழுவி தொழுதுண்டு நேரெழும்
கழு கண்ட குழுவாகி உருத்தொடுக்கும்

அரிதென்று அலுக்காது பிழைத் திருக்கும்
பிறை என்றும் பிரிவில்லா உணர்வொன்றி
உருவளர்த்து உன்னுள்ளில் மறையரையமர்த்தி
கருவென்ரும் காதலென்றும் காத்தருளும்

இரும
பந்தத்தில் விளையும் சொந்தம்

சனி, 8 ஜனவரி, 2011

போ ர்க்களம் ....


சிக்கு பலியானது
பா லைவன பறவைகள்

பி ழைக்கு தொழிலானது
பீ டத்தில் யாகம்

பு விக்கு எருவானது
பூக்களின் சருகுகள்

பெ ற்ற கடனானது
பே ச்சிலே ஏளனம்

பை ய புசிக்க எண்ணியது

பொ றுக்குமா இனியும்
போ ர்க்களம் தூண்டிய பசி...........

கலியுகம் : நண்பர்களே யாரும் காணாத மீள் இது கண்டிருப்பர் சில நண்பர்களே தவறிருப்பின் குட்டுங்கள் எனை குனிந்து ஏற்கிறேன் குற்றவாளியாக

வெள்ளி, 7 ஜனவரி, 2011

எங்கே நீ ?


எங்கும் நிலவுவதில்லை,- நீ
ஏன் இங்கு உலவுவதுமில்லை..?
காலத்தின் வேகத்தில்
உன்னை மறந்தாயோ..?
கலங்கும் கண்ணினுள்
கருவிழியும் தேடிட...!
எங்கு போனாயோ..?
என்ன ஆனாயோ...?
உண்மை அறிந்தாயோ...?!

உன்னை தேடும் பாதையில்
பாதகங்கள் ஏராளமாய்...
விருட்சமாகி உள்ளன.
யார் வளர்த்ததோ..? நிழலில்லாத
விருட்சமாய் விண்ணையும்
தொடும் போல வியக்கிறேன்..!!
பாதைகள் மாறியே பலதூரம்
பயணித்தும் உன்னையறியாமல்...

என்னை மறந்து மரணிக்கிறேன்..
நெடுந்தூர பயணத்தின் முடிவில்...!
அமைதியில்லா விடியலில்
அடங்கிப்போன சரிரத்தில்
அமைதியாக பிரியும்
உயிர் மட்டுமே அறியும் போல...!
அமைதியின் விடியலை.

வியாழன், 6 ஜனவரி, 2011

மனோ தத்துவம்..

உன்னை கொஞ்சம் நெனச்சுப்பாரு
உள் மனச கேட்டுப்பாரு பள்ளிகூட
பிள்ளை கூட சுமை சுமக்குதையா
உள்ளுக்குள்ள உறக்கம் வேண்டாம்
உண்மை சொல்ல தயக்கம் வேண்டாம்

கல்லிருக்கும் முள்ளிருக்கும் காட்டுவழி
பயணமில்லை பயம் வேண்டாம்
உடல் கூட்டின் ஆசை கொண்ட
உணர்வுகளின் வேஷம் வேண்டாம்
சொல்லித்தர யாரும் இல்லை
வேதனையின் சோர்வு வேண்டாம்

உனக்குள்ளே உறங்குகிறான்
உள்ளுணர்வாய் ஏங்குகிறான்
உணர்வாயோ உன்னை
உணர்ச்சிகள் தவிர்த்து
உன்னதமான உண்மையின் தத்துவத்தை....


புதன், 5 ஜனவரி, 2011

கோவக்காரர் சமையலுங்கோ ...

அரிது அரிது ஆடவனும்
சமைப்பதரிது அதனினும்அரிது
கோவைக்காய் பொறியல் அரிது

சேட்டன் கடையிலே கொட்டிகடக்கு
கோவைக்காய் அரை கிலோ
போதுமென்றார் என் நாவுக்கு
நானும் சமைக்கிறேன் பார்த்துக்க
நன்னீரில் குளிப்பாட்டி
தலைவெட்டி கால்வெட்டி
கோவைக்காயை நெடுகில் பிளந்து
வாள்வாளா நறுக்கிடனும்
அடுத்து வர்றாரு நம்ம
கோபக்காரருங்கோ

பச்சமிளகா பத்தெடுத்து
பக்குவமா குளிக்க வச்சு
குறுக்கால நறுக்கிடனும்
குறும் குறு துண்டா
பார்த்துக்க... சரி அடுத்து
வாணலிய சுத்தம் செய்து
அடுப்ப பற்ற வச்சு அதன்மேல
வாணல வச்சு தொட்டு பாக்கமா
வாணல் சுட்டுச்சான்னு பார்க்கணும்
சூடேறிய வாணலியில் சுத்தமான
எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு
தாளித்து குறு குறு பச்சமிளகாவா
போட்டு கொஞ்சநேரம் வதக்கிபுட்டு


நெடுக்கால நறுக்கிவச்ச
கோவைக்காயை போட்டு
சிறிது நேரம் வதக்கவும்
பிற்பால மேல்மூடி போட்டு
மிதமான தீதனிலே சிறிதுநேரம்
வேகவிட இடை இடையே
கிளறிவிட்டு சரியான பதம்பார்த்து
தேவைக்கேற்ற உப்பிட்டு கிளறி
மூன்று நிமிடம் வேகவைத்து
தேங்காய் பூ தூவி அடுப்பனைத்து
கீழிறக்க வாசமொன்று வீசுமங்கு
வெறும் சோற்றில் கைபிடித்து
உண்டு பாருங்க எந்தன்
சமையல் அருமை புரியுங்கோ .....

கலியுகம் : என்னங்க நான் சாப்ட போறேன் நீங்க ஓட்டு போட்டுட்டு பின்னூட்டம் போட்டுட்டு சமைத்து சாப்பிட்டு பாருங்க சுவையா இருக்கும்

செவ்வாய், 4 ஜனவரி, 2011

நடமாடும் பிணம் நாமடா..! (வதம் 2)


நாடோடி வாழ்க்கை தானடா..!
நடமாடும் பிணம் நாமடா..!
நயவஞ்சகம் நம்மில் ஏனடா..?
நடைபாதை வஞ்சம் தீர்த்தால்
நமக்கு பாதை ஏதடா..?

பனைபோல வளர்ந்திருக்கும்
பாதை மறிக்கும் பேராசை ஏனடா..?
பணம் பறித்து பழிசுமந்து
பகையாலும் உள்ளம் கொண்டு
பாசமில்லா வேஷம் ஏனடா..?

மலர் கூட சிரிக்குதடா..!
மதிகெட்டு மானம் விற்று
மாயையான வாழ்வை விட்டு
மரணித்து கிடக்கையிலே
மலர் கைகொட்டி சிரிக்குதடா..!

தனையாலும் எண்ணம் நம்மில்
தரங்கெட்டு தடுமாறி போகுதடா..!
தடை விதித்தால் நலமுண்டு
தகரம் கூட தங்கம் தானடா..!
தட்டி தரம் பிரித்தால் - நம்மில்
தங்க குணம் ஏதடா..?

குரல் கொடுத்தும் திருந்தவில்லை
குணம் மாற குறையுமில்லை
குறிபார்த்து நோட்டமிட்டு
குழி பறிக்கும் வேலை ஏனடா..?
குள்ள நரி நம்மில் தோற்குமோ..?

கள்ளனுக்கும் மனமுண்டு
கரைதெரிந்தால் குணம்பெறுவான்
கண்ணீரும் வருவதில்லை
கரை ஏனோ தெரிவதில்லை
காட்டாற்று வெள்ளம்போல - பலர்
கண்ணீரில் உயிர் வாழும்
கலங்கமுற்ற வாழ்க்கை ஏனடா..?

கலியுகம் : தனிபட்ட நபர்களை பற்றிய வரிகள் அல்ல நம்முடைய அரசியல் சாக்கடை வாசிகளை பற்றியது பதிவு பிடித்திருந்தால் வாக்களித்து ஆதரவு கொடுங்கள் நண்பர்களே ... கலியுக வதம் தொடரட்டும்

மனபேசி அழைக்குதடி...!


உறக்கம் வர மறுக்குத்தடி
உள்ளுக்குள் ஏதோ துடிக்குதடி
உள்மனசும் பேசுதடி
உணர்வலைகள் வீசுதடி
மனபேசி அழைக்குதடி
மனமெங்கோ பறக்குதடி

பாரினிலே எங்கிருந்தோ - உந்தன்
மனம் என்னை நினைக்குதடி
என்னை நெருங்கி வரும் காலமென்று
என்னென்னமோ சொல்லுதடி
மனபேசி அழைப்புதனை
ஏற்றுக்கொண்டேன் என்னவளே

வெகுவிரைவில் வழிபிறக்கும்
உனைக்காண வளம்வருவேன்
காந்தமான உன் ஈர்ப்பில்
உன்னை அறியாமல் தேடுகிறேன்
தைபிறக்கும் காலமிதோ
தடைகள் தகரும் காலமிதோ......

கலியுகம் : எச்சுச்மி யாரங்கே வாக்களிக்காமல் செல்வது நான் என்னத்தங்க கேக்குறேன் அரசியல் வாதியா இருந்தா ஓடிவந்து போடுவீங்க நான் நிக்கமாட்டேன் கண்டிப்பா பயபடாதிங்க... நம்பிக்கைதான் வாழ்க்கை நம்புங்க மக்கா

திங்கள், 3 ஜனவரி, 2011

விண்ணிறங்கி வாராயோ...


அறியா பருவம் ஒன்றில்
அரிதாரம் பூசிக்கொண்டு
நாவுரைத்த வசனங்கள்
என் பெயரை மாற்றியதுவே...!

முறுக்கும் மீசைதான் வரைந்து
அடக்க முடியா ஆக்ரோசத்துடன்
நா உரைத்த வீர வசனம்
நானாக நானில்லை நீயாக
மாறியதுவே உணர்வுகள்...!

'அட்டைவாள்' கத்திபிடித்து
'அகங்கொண்ட' வெள்ளையனை
வீராப்புடன் விரட்டியடிக்க
'வீரபாண்டிய கட்டபொம்மனாய்'
நான் மாறிய நொடிபோழுது
அரங்கேற்ற மேடைதனில்...!


உந்தன் சரித்திரம் பேசுதையா
உந்தன் சங்கதியாய் நானுமிங்கு
உன்போல் யாருமில்லை...!?

உடைவாளும் பகையாகுதையா..
பகைக்காமல் பகைக்குதையா
பணம்தானே வழிவகுக்குதையா..

வகையான புதை குழிதனிலே
எட்டப்பனாய் மாறிவரும்
சமுதாயமிங்கு புதைகுழியில்
பாதையமைத்து பயணிக்குதுதையா..

பாதை காட்ட யாருமில்லை
புதிய சமுதாயத்தின் வழிகளிலே
உந்தன் மறுபிறவி வேண்டுமையா..

மனதார வேண்டுகிறேன்.
விண்ணிறங்கி வாராயோ..
விடியல் காண வாராயோ..
முறுக்கு மீசை வீர பாண்டியரே...!
தமிழ் குளம் காக்க வாராயோ...?!

கலியுகம் : அஞ்சாசிங்கம் வீரத்தமிழர் "வீரபாண்டிய கட்டபொம்மன்" மண்ணில் உதித்த நாளின்று முறுக்கு மீசையாரை வணங்கி அவர் பாதம் சமர்பிக்கும் எனது வரிகள் .....

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

நீ யாரடியோ..? என் செல்லக்கிளியே..


என்னை எண்ணி நோன்பிருக்கும் என்னவளே
காணாது தவிக்கிறேன் நான் தன்னந்தனியே
தனியாக நானிருக்க வரம் பெற்றாயோ - நான்
உனைநினைத்தே தவமிருக்கிறேன் வரம்தருவாயோ?

பனிப்பாறை போலிங்கு உள்ளம் உருகுதே
கானலான உன் வரவை தினம் தேடுதே
என்னுள்ளே மறைந்திருக்கும் நங்கை நீயோ - என்னை
அறியாமல் அலைய வைக்கும் மாயை ஏனோ ?.

நீ யாரடியோ..? என் செல்லக்கிளியே..
பச்சைப்பிள்ளை போல தவிக்கவிட்டு
காணாது காவலிருக்காய் உள்ளுக்குள்ளே
விடையறியாத வினாவாகிறேன் நானுமிங்கு.

நின் வாழ்வு என்னோடு நிழலாக நானிங்கு
கொஞ்சும் கிளியே உனக்காக காத்திருக்கும்
காத்தவராயனாய் கழுமரமேற துணிந்திருக்கேன்
வா வெளியே என் செல்லக்கிளியே....

சனி, 1 ஜனவரி, 2011

இருளின் விடியல் எங்கே..?


வீதியெல்லாம் பட்டாசு சத்தம்
விடியல் காண என்னாச்சு யுத்தம்
வினை விதைத்து தினையருக்கும்
வீனத்தவரின் விளைச்சலிலே
விட்டில் பூச்சின் விடியல் போச்சு

விடியலும் தான் விதைக்குதிங்கு
வினைதனையே விளைபயிராய்
விளைத்திட்டவன் மதி திருந்தி
விண்ணுலகம் சென்றுவிட்டான்
வீதிவுலா ஏற்க்க மறுத்து

விண்ணும் மண்ணும் படைத்தவந்தான் கேள்வியாகிறான்..!
விளையாடும் சதுரங்கமாய் நம் கையிலே..!
வில்லாளன் எவனுமில்லை வினையருக்க..?
வில்லொடித்து புறப்பட தான் போட்டிவேண்டுமோ..?
விருந்தமர்த்தி விலைகொடுத்தால் வினை வீழுமா..?

விட்டில் பூச்சின் விடியல் காண
விலையென்னவோ ..?
விடியாத இரவினிலே
விளையும் பயிர் முளைத்திங்கு
விடியல் காணுமா..?

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி