வெள்ளி, 31 டிசம்பர், 2010

நகைத்து பூக்க புத்தாண்டே ...!


புத்தாண்டு பூக்கும் இன்று
புன்னகை பூக்கள் பூக்குமா
விஷநாகம் விளையாடும் தமிழகம்
விஷமமில்லா விடிய வேண்டும்

உணர்ச்சிகள் இல்லா உலகம் இது
உன்னை மறந்து உதவி செய்தாலுண்டு
தன்னை மறந்து தமிழை மறைத்த
சுயநல தரகர் கூட்டமிங்கு

உணர்ச்சிகள் இல்லா பணம் புசிக்கும்
கள்ளர் கூட்டமும் உண்டு - நல்லோர்
சிலரும் உண்டு அவர் எண்ணம்போல்
நகைத்து பூக்க புத்தாண்டே ...!

கலியுகம் : எனையாளும் அன்பு நெஞ்சங்களுக்கு எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .....(எச்சுச்மி யாரது படிச்சிட்டு ஓட்டு போடாம போறது வந்து ஓட்டு போட்டுட்டு போங்க நண்பர்களே நம்புங்க நான் அரசியல் தேர்தல்ல நிக்கமாட்டேன் )

வியாழன், 30 டிசம்பர், 2010

வந்தனம் வந்தனம் சாமியோ


வந்தனம் வந்தனம் சாமியோ
வழிதேடி வந்தேன் நான் சாமியோ
வழிகாட்ட ஓடிவந்த சாமியோ
வணங்கி கும்புடுறேன் சாமியோ

பச்சிளம் குழந்தை தான் இன்னமும்
பள்ளிப் பாலகனாய் எண்ணமும்
பகுத்தறிவு புகட்டிவிடு இன்னமும்
பனைப் போல வளர்ந்திடுமே எண்ணமும்

சன்னதியில் கண்டதில்லை உன்னையும்
சங்கடங்கள் சலசலக்கும் என்னிலும்
ஓர் உருவம் உனக்கில்லை எங்கிலும்
பல உயிரில் கலந்திருக்காய் பல திக்கிலும்

நன்றி சொல்ல வார்த்தையில்லை என்னிலே
வாழ்த்துச் சொல்ல வயதுமில்லை என்னிலே
தொடர்ந்து வழிகாட்டும் நெஞ்சங்களே
வணங்கி வரவேற்கிறேன் வாருங்கள்

புதுமலராய் பூக்க வேண்டும் சாமியே
புன்னகை பூக்க வேண்டும் சாமியே
புத்தாண்டு புன்னகை பூக்களாக
நகைத்துப் பூக்க வேண்டும் சாமியே
நல்லோரின் எண்ணம்போல என்றுமே

செவ்வாய், 28 டிசம்பர், 2010

பறிபோகும் விளைநிலங்கள்




விண்ணவனின் எண்ணமெல்லாம்
கதிரவனின் துணைக்கொண்டு
நீர்த்துளியாய் சேகரித்து
நிலைக் கொண்டு ஓரிடத்தில்
காற்றுக்கு ஆணையிட்டு
மழைத்துளியாய்....!

பச்சை கம்பளம் போர்த்தி
விளைநிலம் செழிக்க
நேர்த்தியாய் அருள்புரியும்
இயற்கை அன்னை இன்று
சிறை பட்டாளோ...!
சிலையானாளோ...!?

அடுக்கடுக்காய் விளையும் பயிர்
'நன்னீரும்' மாறி வர....
'கண்ணீரால்' மூழ்கினவோ...!
ஆசைகொண்டு நேசம் விற்கும்
பாசமற்ற மானிடா, - உன்
அடுத்த வேலை சோறு பொங்க
அடுப்பெரிந்து பயன் என்ன...?
ஆடி மாச காற்றுக்கூட
திசை மாறிப்போன நிலை
கருவறுத்த பாவமெங்கும்
பட்டினியால் வயிறு...
பற்றி எரியும் காலம் இதோ...?!


விலைபேசி முடித்தாயோ....
விளைவித்த தாயவளை...!
அன்னமிட்ட தாயவளின்
அவல நிலை பாடுகிறேன்.

பாதகனே நிறுத்தி விடு
பணம் திண்ண போராயோ...?
பிணம் புதைக்க...
இடம் தேடி அலைவாயோ...?
மனதோடு பேசியவனே
மக்களோடு பேசு.
அவல நிலைகள் புரியும்.


அரசாங்க ஊழியரே....!!
ஊதியமே பெறவில்லையோ...!
ஊமையான உம் கரங்கள்...
விளை நிலத்தின் தரம் மாற்றி
விலை பேசி விற்றீரோ...?!
உம் கரம் அழுகி போகாதோ....?

கூறுபோடும் மானிடா...!
குறுக்கு புத்தி ஏனடா...?
எள்ளின் குணம் அறிவாயோ...!
ஏட்டில் தான் படித்தாயோ....?!
ஏழைக்கேத்த எள்ளுருண்டை
சொல்லும் கதை அறிவாயோ..?!
விளைவிக்கும் நிலமன்றோ..!
நம் தாய்க்கு நிகரன்றோ...!
உன் தாயின் அழுகுரல் தான்
கேட்டறிந்தால் நலமுனக்கு.

பொருள் சேர்க்க துணிந்தாயோ..
தனிப்பிணமாய் நீ செல்ல...?!
தரணி ஆள ஆசையுண்டு...
தனிமையாகும் உன் வாழ்வு.
உண்டு வாழும் உலகினிலே
உனக்கொரு நெல் கிடைக்காதே.

கணக்காக பணம் சேர்த்து
பத்திரமாய் பதுக்கி வைத்து
பணம் உண்டு வாழ்வாயோ
பிணம் உண்டு வாழ்வாயோ
மானிடா நீயே பதில் ...!

கலியுகம் : வாய்விட்டு கேட்டாதான் சோறு கைமேல கொடுத்தாதான் ஓட்டு என்று போய்கிட்டு இருக்கு நம் உலகம் இன்று. இந்நிலை இங்கேயும் இருந்தால் பகுத்தறிவில்லா மக்கள் எங்கே??? நண்பர்களே மாறனும் இது நகைச்சுவை அல்ல ....

வதம்...!


அரிதாரம்பூசா
அவதாரம் பிறக்க..!

தீராத பசிருசிதனில்
வித்திட்ட விதிதனையே
விளையாட்டாய்
வினையாகும் வீதியிலே
சதி செய்யும் சாதிமத
சங்கடங்களை துறக்க

மனம் கொல்லும்
மானிடராய் தினம்
வெல்லும் பேராசையுனை
கொன்று புதைக்க
வதமொன்று வரவேண்டும்
வதைக்காத வதம்
வேண்டும்

இச்சைகளின் தூண்டுதலே
துகிலுரிப்பு யோதனரை
சுற்றிவந்து வட்டமிட்டு
சூளுரைத்து கொட்டமடக்கி
அடிபணியானின்????
வாளுயர்த்தி
வெட்டி முடக்கு

களவாடும் கரங்களிலே
நெடுநீள வேல்கொடுத்து
உறவாடும் மனங்களிலே
களவாட இடமளித்து
பசிதீர பணியமர்த்து
காவலனாய் களமிறக்கு

காவலனும் கரம்நீட்டா
வரமொன்று கொண்டுவர
நீவிதித்த வழிதனையே
காவலனும் கடைபிடிக்க
மனம் நினைக்க குணம்
மாறா நிலையிருக்க

சீரான வாழ்வளிக்க
மாறாக தவமிருக்கா..!
வதம் வேண்டும்
வதைக்காத வத(ர)ம்
வேண்டும்...
நீதி : வணக்கம் அன்பு நெஞ்சங்களே வதம் ஒரு மீள் தான் தமிழ்மணத்தில் முதல்கட்ட வாக்கெடுப்பு முடிந்துள்ளது என்ன செய்வது மூவரில் இருவர் தொடர்ந்து களத்தில் உள்ளனர் "வதம்" மற்றும் "உயிர் மட்டும் பேசுதடி" உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வீசுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை ஆளும் நெஞ்சங்களே

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

"பச்சைக்கிளி உன் காவலம்மா"


பச்சைக்கிளி உன் காவலம்மா
பச்சைப் பிள்ளையாய் நானுமம்மா
எட்டி உதைப்பாய் நெஞ்சினிலே
அடைந்தேன் ஆனந்தம் நானுமம்மா........ (பச்சைக்கிளி)

பந்தல் கால் வீட்டு வாசலிலே
பள்ளிக்கூடம் நான் போகையிலே
பட்டுப்புடவை தேவதையாய்
அக்காள் வந்தால் வாசலிலே............. (பச்சைக்கிளி)

ஏட்டுப் படிக்கும் வேலையிலே
எட்டி நகர்ந்தால் நாணத்திலே
கொட்டுமுழக்கம் காதினிலே
தனியாய் சிரித்தாள் தனிமையிலே........ (பச்சைக்கிளி)

மல்லிகைத் தோட்டம் பாரடியோ
என் மாமன் இவன்தான் கூறடியோ
புத்தியுரைத்ததே எமக்குள்ளும்
உன் புன்னகை பேசும் புதிரினிலே......... (பச்சைக்கிளி)

சக்தி இழந்தவன் நானன்று
உன் சங்கதி காக்கும் தூணம்மா
பட்டப் படிப்பு முடித்துவிட்டேன்
பட்டுத்தான் வேலை பிடித்துவிட்டேன்...... (பச்சைக்கிளி)

இரும்பான மனமெல்லாம் இளகிடவே
கரும்பாக நானிருக்க கலக்கமென்ன
சொட்டும் வியர்வைத் துளிகளெல்லாம்
உனக்காய் உதிர்ப்பேன் பிறந்தவளே........ (பச்சைக்கிளி)

உன்னைச் சுமக்கும் உசுரினிலே
கண்ணில் சுமப்பேன் உசுரையும் நான்
மாமா என்றழைப்பாயோ - உன்
தாய் மாமன்தானடி மரிகொழுந்தே......... (பச்சைக்கிளி)

பச்சைக்கிளி உன் காவலம்மா
பச்சைப் பிள்ளையாய் நானுமம்மா
எட்டி உதைப்பாய் நெஞ்சினிலே
அடைந்தேன் ஆனந்தம் நானுமம்மா

சனி, 25 டிசம்பர், 2010

உன்னுள் நானிருக்க ...!


வெட்டித் தீர்த்த பாவமெல்லாம்
கொட்டித் தீர்க்க புகுந்தாயோ..!
உன் பாவ சுமையெல்லாம் - அவன்
சுமக்க என் பாவம் செய்தானோ..!

வேண்டுவன கிட்டிவிட்டால்
வேண்டாத ஆசையெல்லாம்
வேள்விகளை தூண்டிவிட
வீற்றிருக்கும் அரையினிலே

வெட்கி போகும் அவனுருவம்
அடிபட்டு பதப்பட்டு அல்லோலபட்டு
அபிஷேகம் கேட்டானா..?
அரிதாரம் கேட்டானா...?

உலகளந்த கலைப்பிலே
ஓய்வெடுக்க தனியறை..!
கேட்டதுதான் குற்றமா...?
கேள்விக்கு இறையாகி விட்டானே...!

துன்ப பட்டால் தூற்றுகிறாய்
இன்ப பட்டால் போற்றுகிறாய்..!
நான் படைத்த படைப்புகளிலே
எனக்கே படைப்பளித்தவன் நீயே...!

எனை புறம் தேடி பயணிக்கும் - நீ
உன் அகத்தே எனை கண்டுகொள்ள
மறந்ததேனோ மானிடா..! - மாற்றமாய்
உன் அகத்தே தேடிப்பார் எம்மை.

உணர்வில் உண்மையும் அறிவாய்
உண்மையில் உம்மையும் அறிவாய்
உம்மால் உலகையும் அறிவாய்
உலகில் எம்மையும் அறிவாய் - நீ

வெள்ளி, 24 டிசம்பர், 2010

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


மேய்ப்பனின் குரலுக்கு
கட்டுப்பட்டு பசியில்
புசிக்கும் எண்ணம்தவிர்த்து
மேயாத மானாய் இங்கு

மெய்யானதோ
பொய்யானதோ - எனை
மேய்ப்பவனின்
எண்ணமெல்லாம்

தெம்மாங்கு ....




கழனியிலே களையெடுக்கும்
கன்னியரின் கலகலப்பில்
குயில் பாட மறந்ததுவே - எம்
கன்னியரின் பாடலிலே

பாட்டொன்று பறந்து வரும்
பட்டாடை கட்டிக்கிட்டு
பக்கவாத்தியம் ஏதுமில்ல
படையாலும் மன்னன் கூட
எனையாளும் தமிழ் மலர
பாலகனாய் மாறிடுவான்....!

அந்திசாயும் மாலையிலும்
சும்மாடு தலையில் வைத்து
அடுப்பெரிக்க விறகு சுமந்து
வீதியிலும் நடக்கையிலே
விட்டில் பூச்சி வெளிச்சத்திலே
வீடு வந்து சேர்ந்திடுவா
வீட்டில் சோறு பொங்கிடுவா
விளையாட்டாய் படித்த பாட்டில்
ஊரெல்லாம் தூங்க வைப்பாள்
உணர்வுள்ள தமிழச்சியாய்...!!

வியாழன், 23 டிசம்பர், 2010

"உயிர் மட்டும் பேசுதடி........!"

கடுகும் கனக்குதடி-நின்
கார விழி பார்வையிலே

கரும்பும் கசக்குதடி-நின்னை
காணாத நாழிகையில்

குரும்மிளகு இனிக்குதடி-நின்
மீளாப் புன்னகையில்

குயில் கூவ மறந்ததடி-வின்
வியக்க குரல் கேட்டு..!

வலியும் சுகம் சுமக்குதடி-நீ
வரும் கடைகால நினைவினிலே

உடல் கிழிந்த கோலமடி-என்
உயிர் மட்டும் பேசுதடி

எமன் அழைக்கும் நேரமடி-நீ
எங்கிருக்காய் என்னவளே

சதி செய்த சாதிவெறி-என்
உடல் ருசித்து பசிதீர்த்ததடி

எவன் படைத்த சாதியடி-தினம்
குருதி சுவைக்க போகுதடி

மதிவெல்லும் உலகமடி-இனி
மாறவேண்டும் சாதிவெறி

களங்கமில்லா காதலடி-என்
உடல் மட்டும் மரணித்து
உயிர் மட்டும் பேசுதடி....!

டிஸ்கி : இது ஒரு மீள் தானுங்க சுவைத்து பாருங்க உங்க மூளைக்கும் விருந்து

புதன், 22 டிசம்பர், 2010

மயான ஆட்சியா..?"


அடிமையாக நாம் இங்கு இல்லை
அரசியல் சாக்கடை புழுக்களா...?!
அன்றைய அரசன் இங்கே
ஆதிக்கம் செய்ததில்லை.

ஆண்டவன் போல நின்று
அநீதிகளை விரட்டினான்.
அந்நியரின் ஆளுமையை
நேர்கொண்டு எதிர்த்தவன்

மன்னரோடு மக்கள் அன்று
கரம் கோர்த்த காலமது.
"மன்னராட்சியில் அன்று மக்களாண்டனர்"
"மக்களாட்சியோ இன்று மயான ஆட்சியா ..?"

அறியாமல் செய்வதுதான் தவறாகுமா..?
தவறை அறிந்தே செய்பவன் தான்
நம் தலைவனாகிறான்...!!
தலையில் தூக்கி ஆடுகிறோம்..!!

தஞ்சம்புக வந்தவனெல்லாம்
வம்சாவழியாக நம்மை ஆள்கிறான்.
சாதி மத பேரைச்சொல்லி
நம்மை பிரித்து கூறு போடுறான்.

டிஸ்கி : தமிழ்த்தென்றல் பதிவில் நண்பர் தமிழ்க்காதலன் எழுதிய அடிமை இந்தியா 2010 எனும் பதிவை படித்து உருவான எம் வரிகள் இது நண்பர்களே

டிஸ்கி 1 : வணக்கம் நண்பர்களே தமிழ்மணத்தில் தேர்தல்ல நிக்க சொன்னாங்க என் ஆதரவா வதம் , கொய்யபட்ட ரோசாவே , உயிர் மட்டும் பேசுதடி இவங்க மூவரும் கவிதை, கலாச்சாரம் ,பெண்கள் பிரச்சனைகள் என்ற தொகுதிகள்ல நிக்கறாங்க உங்கள நம்பி உங்கள் பொன்னான வாக்குகளை தங்கள் பொற்கரங்களால் தமிழ்மணத்தில் அளித்து எமக்கு ஆதரவு தர கோருகிறேன் ( அடப்பாவி உட்ரா போதும் அரசியல் வாதிமாதிரியே பேசுறானே இவன நம்பலாமா )

செவ்வாய், 21 டிசம்பர், 2010

"நம்பிக்கை கொள்..!"

pic-1.bmp

இன்பம் நிலைத்திருக்க காலமில்லை
துன்பம் இல்லா வாழ்வுமில்லை
வழிதவறி போகும் மனம் - வழிகாட்ட
யாருமில்லை வழிப்போக்கன் பாதையிலே.

தட்டுமண்ணு சுமந்து தினம்
சோறு பொங்கும் ஏழ்மையிலும்
தன்னை நம்பி வாழ்கிறாளே..
அவள் போதும் உன் வழிகாட்ட...!

என்ன குற்றம் செய்துவிட்டாய்..?
உன்னை கொல்ல திட்டமிட்டாய்...?!
தற்கொலைக்கு துணிந்த மனம்..
தடைகளைத் தான் தகர்க்காதோ...?!

தடை என்று ஏதுமில்லை.
நாம் வாழும் உலகினிலே.
எதிர்கொள்ளும் மனமிருந்தால்
உன்னை நம்பி வாழ்ந்துப்பார்.

புல் புழு பிழைத்திருக்க
பூமியிலே இடமுண்டு.
காலனையும் காலம் வெல்லும்
உன் மனம் விதைக்கும் நம்பிக்கை..!!

காதல் ஒரு சாட்சியாக
கல்லறைகள் நிறைவதென்ன...?
காதலைத்தான் குற்றம் சொல்லி
காலனை இழுக்கும் கோலமென்ன..?

சொல்லி சோகம் மாளவில்லை.
சோர்ந்து போனால் போதுமா..?
துணிந்து வாழ கற்றுக்கொள்..!
துன்பத்தை தூசு போல தட்டிச்செல்..!!

டிஸ்கி : நம்ம ரோசாப்பூந்தோட்டம் பாரத் பாரதி இன்று கேட்ட கேள்விக்கு ஒரு எழுச்சியூட்டும் தன்னம்பிக்கை வரிகளாக தொடுத்துள்ளேன் நண்பர்களே எச்சுச்மி எங்க போறீங்க வோட் பிளீஸ்

வானவில்லாக...!!



கல்லூரி பாதையிலே காற்றாக வந்தவளே
பச்சை பிள்ளையாய் நான் நிற்க
கொஞ்சும் கிளியாய் கொத்திச் சென்றாலே
கோவைபழமாக என் இதயத்தை

பேசும் கண்விழியில் பாடம் படித்தேனே
பள்ளிச் சிறுவனாய் அவள் பாசவிழிகளில்
ஊரைசுற்றி வரும் ஊதாரி நானன்று
உன்னை சுற்றி வரும் உசுரானேன்

காதலென்று நானுணரும் காலத்தே
காலாக மாறினாயோ - கரம்
பிடித்த அழைப்பிதழில் என்னை
அழையாமல் அழைத்தாயோ

கரையாத மனம் உன்னில்
கல்லாகி போனதுவோ - நீ வாழ்க
பல்லாண்டு வாழ்த்து சொல்லி
வருவேனே உந்தன் மணநாளில்
நானங்கு வானவில்லாக...!!

டிஸ்கி : கவிதை வரிகள் அனைத்தும் கற்பனையே யாரும் குழப்பமடைய வேண்டாம்

திங்கள், 20 டிசம்பர், 2010

காணாத என் கண்மணியே ..!


கனவாக கலையாது
காணாத உன் உருவம் .!
நினைக்காத நாளுமில்லை
நீ வாழும் உள்ளமிது .!

எனை யாலும் கண்மணியே
நீ எங்கிருக்காய் கூறிவிடு ?
கடல் கடந்து நானிருக்க
காணாது தேடினாயோ !

காற்றாக பறந்துவந்து - என்
கண்மணியின் கரம்பிடிப்பேன்
மலர்கொடுத்து மணம்முடிப்பேன்
உன் மன்னவன் நான்தானென்று

மெய்யுரைத்து கூறுகிறேன்
பொய்யுரைத்தேனும் காதல்
கொள்வாயோ ?
காணாத என் கண்மணியே ..!

டிஸ்கி : என்ன காதலுக்கு போயிட்டேன்னு யாரும் நினைக்க வேண்டாம் நம்ம முறைமாமன் கார்த்திக் பங்காளி காதல் கவிதை எழுத சொல்லி அழைப்பு விடுத்தமையால் வந்த விளைவு

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

கரம் கோர்ப்போம் வாருங்கள்


பாட்டு ஒன்று கேக்குதையா
பழந்தமிழர் எங்கு சென்றார்
பணத்தாசை கொன்றதுவோ
மனம் கொன்று சென்று விட்டார்
துடியாய் துடிக்குதையா
தூயவனம் காத்திடவே
தூசு தட்டி ஏற்றிடுவோம்
தூயவளின் ஒளிவிளக்கை
திரியாக நானுமிங்கு
தீ கொணர்ந்து ஏற்றுமையா
காத்திருக்கேன் .......


டிஸ்கி : சுந்தர்ஜி அவர்களின் எது அரசியல் பதிவை கண்டு என்னில் தோன்றிய வரிகள் இது வாருங்களேன் சேர்ந்தே கரம் கோர்ப்போம் அவரின் இலக்கு இதோ(எனை மன்னிக்கவும் சுந்தர்ஜி உங்களுக்கிட்ட பின்னூட்டத்தை பதிவாக இட்டமைக்கு )

வெள்ளி, 17 டிசம்பர், 2010

தாயும் சேயும் கருவறையில்


அகத்தே நீ உதைக்க
புறத்தே காணாத பேரின்பம்
உன்னை சுமக்கும் ஒவ்வொரு துளியும்
எனை வென்று சிறை மீட்பேன்
என் கண்மணியே உன்னை

இவை தான் உலகமென்று
புறம் காண மறுக்குதம்மா உள்ளம்
அகத்தே உன் அரவணைப்பில்
நாற்பது வாரமாய் தவமிருந்து
எம் உள்ளம் படைத்தவளே

எனை சிறைமீட்கும் வேள்விதனில்
வேதனை பல அனுபவிப்பாயே
என் தாயே உன் வேதனையின்
தாக்கத்திலே அலறுகின்றேன்
அழுகுரலாய் என் ஆதங்கம்

சோதனையும் வேதனையும்
உன் முகம் காண காற்றாக
பறந்திடுமே கண்மணியே
நீ ஆணாக பிறப்பாயோ
பெண்ணாக பிறப்பாயோ - ஏக்கம்
எங்கும் நிறைந்திருக்க
தூக்கமில்லா உன் நினைப்பில்
காத்திருப்பேன் உனக்காக

பெண்மையிலே வளர்ந்தேனே
உன்னுள்ளம் கொண்டேனே
பெண்ணாக முதல் பிறப்பு
ஆணாகும் அதன் பிறகு
வித்திட்ட விதியம்மா
மாற்றமிலா உண்மையிது

எனைக்காக்கும் இன்னுயிரே
உனைக்காப்பேன் என்றுமிங்கு
உன் சேயான நானிங்கு
தாயே உன் பாதம் பணிகிறேனே
தர்மம் புகட்டிவிடு தாயே
எமக்கு..............


புதன், 15 டிசம்பர், 2010

சொல்லாத காதல்...........


கள்ளமில்லா காதலடி
உன்னில் சொல்லத் தோணுதடி
உண்மை சொல்ல மறுக்குதடி
எந்தன் உள்ளில் அனலடிக்குதடி

விழியோரம் வழியுதடி
சில நேரம் நீர்த்துளிகள்...!
பக்குவமாய் வார்த்தேனடி
வரிகளாய் கோர்த்தேனடி

வழித் துணையாய் வந்தேனடி
வழிமறந்து நின்றேனடி
மனமொன்று உரைத்ததடி
உன் நிழல் கூட கேட்டதடி

என் காதல் உனைத்தாக்க
உன் உள்ளம் நோகுமடி
குழித்தோண்டி புதைத்தேனடி
புரிந்தொருநாள் வருவாயோ....?!

டிஸ்கி : கவிதைக்கு மட்டும்தான் சொந்தக்காரன் நண்பர்களே நான் காதலை வேறுகோணத்தில் சிந்தித்ததால் வந்த விளைவு இக்கவிதை

திங்கள், 13 டிசம்பர், 2010

களவாடபட்டுவிட்டதா...?



சத்திய சோதனையூடே
சங்கடங்களைத் தாண்டி
சற்றே சிந்திக்கும் மனிதா
சலனம் துறப்பாயோ

சரளமாய் தமிழ் பேச
சஞ்சலப்படும் பால்யம்
சடுகுடு ஆட்டம் நம்மில்
சங்கடப்படும் உள்ளம்

காவியத் தமிழர் நாம் என்று
கன்னித் தமிழ் மேவிய
கவி பாடும் சொற்கள்
களவாடபட்டுவிட்டதா...?

டிஸ்கி ; கேட்க்க வேண்டும் என தோன்றியதால் கேட்டுவிட்டேன் உங்கள் தங்க கரங்களில் எலியை பிடித்து அம்பின் துணையுடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ( அடப்பாவி என்னடா அரசியல் வாதியா மாரிட்டியானு கேக்காதிங்க நான் மாற மாட்டேன் )

சனி, 11 டிசம்பர், 2010

புதிய உறவுகள் .............


அந்தி மாலைப் பொழுது
பசு சுவைக்க புற்கட்டுகள்
சுமந்து வரும்
கன்னியரின் கொலுசு ஓசை....!
அன்னநடையுடன்....
கனித்தமிழ் பாடலுடன்...
காதலனை தேடியதுவே....!!

கடல் நீரும் நாமெனவே
கரை சேரும் காலம் வரும்
கரையாதே கண்மணியே...!
பொற்காலம் அவள் காண
கவி படி அழைத்தானோ....?!

பொய்யுரைத்து அழைத்தானோ...?!
போர்க் கோலம் அழைத்ததுவோ...?!
மெய்யான அவளழகில்...
மெய்சிலிர்த்து போனானே...!
பெய்யாத மழை தருணம்
மேற்கூரை சாட்சி சொல்ல
மெய்யிழந்து போனாளே...!!
நேற்று வரை கன்னியவள்.
தனையிழந்து நிர்கதியாய்......

வருவான் என்ற நம்பிக்கை
காற்றாக பறந்ததுவே...அவன்
காதலனோ...? கள்வனோ...?
சாதியத்தின் சூட்சமமோ...?
சிறுபாலகனாய் ஞாபகமிஙகு
கலங்கிய கண்ணுடனே
புதியதாய் பெண்ணொருத்தி
வீட்டினுள்ளே......

"அக்கா".... என்றேன்
மறுவார்த்தையில்லை அவளிடத்தே.
காலை விழித்தவுடன்
அம்மையும் அப்பனும்
புறம் செல்ல புறப்பட
வழிமறித்து நானுமென்றேன்.

"சாதிக்க போறோமடா"
"சாதியை துரத்த" இந்த பயணமென்றார்.
அக்காளின் துணையாக
வீட்டிலே விட்டுவிட்டார்.

ஒலிபெருக்கி பாட்டிசைக்க....
அக்காளை காணவில்லை.
தோட்டத்து வாசலிலே
அழுகுரல் கேட்க....
அறியாத பருவமதில்
அதிர்ந்து போன நான்
அவள் தோள் பற்றி
தெருக்கூத்து கட்டியகாரனாய்
கேளிக்கை வசனம் பேசி
அக்காளை சிரிக்க வைத்தேன்.

எனக்காக சிரித்தாளோ...?!
எதற்காக சிரித்தாளோ...?!
அவள் சிரிப்பில்....
இரவு வரும் நேரமிங்கு.
அம்மை அப்பனும் வரவில்லையே
எத்திக்கு அலைகிறாரோ...?!
என்ன அங்கு சூழ்நிலையோ...?!
சின்னம்மா துணையுடனே
உறங்கி போன ஞாபகம்.

மூன்று நாட்கள் ஓடினவே...
முடியாமல் அவள் சிரிக்க.
ரெட்டை மாட்டு வண்டி
ஒன்று வாசலிலே வந்து நிற்க
காயப்பட்ட காதலனும்
அம்மை அப்பனுடன் வந்திறங்க....
"கண்ணா"...! எனக் கதறிவிட்டாள்
கதறிபோய் அவனும் அழ....

தாய் தந்தை பாதமதில்
இரு சாதி சங்கமத்தில்
"பெண்சாதி" கரம்பிடித்து
அவரிருவர் பணிந்து விழ
புரியாத புதிரானேன் நான்.............!!


எனை வழிநடத்தும் என் தாய் தந்தைக்கு வணக்கம் அவர்கள் பாதம் சரணடைந்து சமர்பிக்கும் எனது நூறாவது பதிவு
டிஸ்கி : உண்மையான வரிகளை தொடுக்க உதவிய அன்புத் தோழர் தமிழ்க்காதலன் அவர்கட்க்கு வணக்கத்துடன் கூடிய மனமார்ந்த நன்றிகள்

நிம்மதியின்றி ........

மனம் கனக்கிறது
சுட்டிக்காட்டத் தவறை
தடம்புரளும் பாதை
மனம் ஏற்க மறுக்கிறது
நான் ஊதியம் பெரும்
தொழில் கூடமாயிற்றே

தவறான முறையை
பணியில் மேற்கொண்டால்
பரிதவிப்பது யாரடா
உயரதிகாரி நீ உந்தன்
தவறை எதிர்த்து கேள்வி
தொடுக்கிறேன் வேள்வியாக

வேலைவிட்டு தூக்குவாய்
வேறென்ன செய்வாய் நீ
விபரீதமான விளையாட்டு
விடைகூற முடியா உனக்கு
வினையாகும் தொழில் நமக்கு
விளையாட்டை நிறுத்து

குளிர்சாதன அறையிலே
குளிர்காயும் உமக்கு
அறிந்திருக்க வாய்ப்பில்லை
வியர்வையின் துளிகள்
போராடும் உள்ளமிங்கு
பொறுப்புடனே கேட்கிறேன்
மறுப்பேதும் சொல்லாமல் - சொல்

ஊதியம் உழைப்பிற்கா -அல்ல
பிழைப்பு ஊதியத்திற்கா
எனக்கும் இழப்பில்லை
உனக்கும் இழப்பில்லை
தொழிற்கூடம் ஏற்கவிருக்கும்
பெருந்தோல்வியை எண்ணி
என் மனம் மட்டும் ஏனோ
நிம்மதியின்றி அலைகிறது

டிஸ்கி : என்ன மக்காஸ் மேல பாக்குறிங்க அதுவும் நம்ம பொழப்புதான் சரி சரி மறக்காமா வோட்டு போடுங்க நண்பர்களே

வெள்ளி, 10 டிசம்பர், 2010

தமிழுக்கு கவி ....................


கனியாத உள்ளமெல்லாம்
கனிய வைக்க கவிபடைத்தாய்
பெண்ணடிமை விலங்கொடித்து
அச்சமிலா விடியல் கண்டாய்

சாதி ஒழிய சாட்டைதனை
கரம்பிடித்து சமத்துவம் புகட்டினாயோ
அச்சமில்லை என்றுரைத்து
காட்டாற்று கவி சமைத்து

வெள்ளையனை வெளியேற்ற
வேள்விபல கண்டவரே
தமிழ் பாலூட்டி தரணியெங்கும்
தமிழ் வளர்த்த மீசையாரே

நின் கவிபாடும் உலகெங்கும்
தமிழ் உரிமை போராளியே
உம் பாதங்களை பின்பற்றி
பயணிக்கும் உள்ளமிங்கு

தமிழ் கடவுளான உம்மை
சிரம் தாழ்த்தி கரமுயர்த்தி
வணங்குகிறேன் தினமும்மை
மகா கவியே அருள்புரிவாயோ

மகாகவி சுப்பரமணிய பாரதியாரின் பிறந்த தினமான இன்று தமிழ் கடவுளாக அவரை வணங்குவோம்

வியாழன், 9 டிசம்பர், 2010

"இருதலைக்கொள்ளி "


கலைந்திடும் கார்மேகம்
காற்றோடே கலையும் கனவுகள்
இளமையின் தாகம் மிகுந்து
இச்சை கொல்லும் மனது

சச்சரவின்றி சம்மதம் சொல்லும்
சலங்கையின்றி சலனம் ஆட
சவுக்கை வீசும் ஒரு மனம்
சலனம் பேசும் ஒரு மனம்

ஐயகோ ! இருமனம் பேசுதே
தனக்குள் இருதயம் ஒன்றுதானே
இரு வழி படைத்ததேனோ இறைவா
இளமையின் கூடே இழப்பும் கோர்த்து

டிஸ்கி : தலைப்பு கொடுத்து உதவியது தமிழ்காதலன் பிழை திருத்தமும் அவரே மிக்க நன்றி நண்பரே



வாழ்நிலை


சுற்றித்திரிந்த காலம்
சூழ்நிலை புரியவில்லை
பட்டு புரிந்தகாலம்
வாழ்நிலை முடிவின் எல்லை
இட்டு விதைத்தவன்
விழி வழிதனில்
கண்டேன்............................

புதன், 8 டிசம்பர், 2010

விலகிச்சென்ற - உறவுகள்


முன்பொரு நாள்
அதிகரித்த வேலைப்பளுவில்
அலைந்து திரிந்து அலுவலாய்
அலுவலகம் வந்தமர்ந்தேன்

ஆவலாய் தேடிய கண்கள்
அலுவலக பணியால் முதியவரை
களைப்புடன் நானமர - பருக
தேநீர் கலந்து கொடுத்து

களைப்பை துரத்தி மீண்டும்
பணியில் இறங்க துரத்தும்
அவர் கலக்கும் தேநீர்
முதியவரை காணவில்லை

சொல்லா விடுப்பு எடுத்துவிட்டார்
களைப்புடனே வெளியேறினேன்
அவரில்லா அலுவலகம்
இருவருடங்களாய் மாறிய இருநாட்கள்

மறுதினம் சிறு சினத்துடன்
எதிர்நோக்கிய கண்கள் அறியாமல்
கலங்கின இருநாட்களில்
உடல் மெலிந்த நிலையில் முதியவர்

கலங்கிய கண்களுடன் அவர்
கரம்பிடித்து வினவினேன்
மகளின் திருமணம் மறுமாதம்
என்றுரைத்து மனம்கலங்கினார்

இருலகர ரூபாய் ரொக்கமாம்
மாப்பிள்ளை வீட்டார் கேட்டது
இருநாட்களாய் பசி அறியாமல்
பணத்திற்காக அலைந்திருக்கிறார்

பாவப்பட்ட மனிதன்
மாதக்கடைசி என்று உள்ளுக்குள்
மனம் புலம்பியதை
கரம் அறிந்தோ என்னவோ

இளகிபோன கரங்கள்
நேர்த்தியாய் அவர் விரலில்
கோர்த்த மோதிரம்
நெஞ்சம் கனத்தது விலகிச்சென்ற
உறவுகளை நினைத்து..........

டிஸ்கி : பட உதவி கொஞ்சம் வேட்டிபேச்சு சித்ரா அக்கா நன்றி , நண்பர்களே பிடித்திருந்தால் ஓட்டு போடுங்க மறந்துவிடாதீர்கள்

ஒரு நாள் வாழ்வு மறுநாள் மரணம்


ஒரு நாள் வாழ்வு
மறுநாள் மரணம்

நானோ சிரிப்புடன்
நீயோ அவஸ்தையில்

மறுபிறவி என்றிருந்தால்
மனிதபிறவி மட்டும்
வேண்டாம்

என்
சிரிப்பை கண்டாவது
மனிதன் சிரிக்கட்டும்..................

டிஸ்கி : மானுடம் துன்பமில்லா மகிழ்வில் மனம் விட்டு சிரிக்க ஜோக்கரானாலும் ஜோராக சந்தோஷப்படும் உள்ளம். எச்சுச்மி வோட் பிளீஸ்

செவ்வாய், 7 டிசம்பர், 2010

விகடகவி


வி தைத்தவன் விண்ணில் வியக்க

லி காணும் கலியுகம்

ப்பாசு சத்தம் எங்கும்

ண்ணீருடன் கருமம் சுமக்க

வி தி விலகுகிறான் விருப்பமில்லாமல்

விதியாண்டபோதிலும்
இன்னல்கள் இல்லா
உலகு இன்று
மதியாலும் நேரம்
மறுஜென்மம் கூடே
மரணிக்கும் தருணம்

டிஸ்கி :வலைச்சரத்தில் எம்மை அறிமுகபடுத்திய கவுண்டர் பன்னிக்குட்டி ராமாசாமி அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கம்

க வி தை


க லங்காதே கண்ணின் மணியே

வி தைக்கப்படுவன எல்லாம் அறுவடைக்கே

தை பிறக்கும் நாளை தரண் வெல்லும்

டிஸ்கி : நான் அரசியல் வியாதியாக மாற விரும்பவில்லை மாறாக வாதியாக தொடர்வேன்

சறுக்கும் நேர்மைகள்


சீருடை உடுத்த
சிறுவயதிலிருந்த ஆசை
தவறுகளை துரத்த
நேரான வழிகளில்
பயணிக்க நேர்த்திக்கடனாக

பலி கேட்க்கும் கலங்கம்
பாதை மாறுகிறது
பாதகரால் பலியான
நேர்மை துளியாவது-எழுமோ

பலியானா ஆடுகளாய்
பட்டதாரி இளமையில்
உதிக்கின்ற கதிரவனும்
விதைக்கின்ற விடியலில்

புதைக்கப்படும் நிலவுகள்
நெடுந்தூரம் துரத்தப்பட்டு
நேர்த்திகடன் நேந்திக்கிட்டு
குறுக்கு பாதையில்

சறுக்கும் சீருடை ..........


டிஸ்கி : எச்சுச்மி வோட் பிளீஸ் உயரே தமிழ்மணம் தாழே இன்டலி உலவு

திங்கள், 6 டிசம்பர், 2010

என்னவள்



என்று வருவாளோ
என் வீட்டு படியேறி
என்னை யறிவாளோ
என் முகம் கண்டவளோ
என் உள்ளம் கொண்டவளோ..........
எந்தன் மல்லி மலரே
ரோசா மலர்பிடி கரங்களுடன்
நித்தம் உன் நினைவில்
நீந்தி தவிக்கிறேனே
சத்தம் போடாமலே
சார லடிக்குதடி மனதில்
எத்துனை காலமடி
நின் முகம் காண..........
இம்மண்ணில் காத்திருக்க
சத்தியம் சொல்லடி
சாகா வரம் பெறுகிறேன்..........

டிஸ்கி 1 : வணக்கம் தமிழ் நெஞ்சங்களே நான் இதுவரை கண்டிராத என் வருங்கால துனைவிக்காக படைக்கும் படைப்பு (இது ஒரு மீள்)

டிஸ்கி 2 : நம்ம அரசியல் தலைவரெல்லாம் சேர்ந்து நம்ம பதிவர்களையும் கெடுத்துவச்சிருக்காங்க பின்ன என்ன ஓட்டு கேட்டாத்தான் போடுறாங்க ............

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

இலையில் சோறு ......


உணவு உண்டுவிட்டு
இலையை வீசியெறிய
கைகள் தடுமாறியது
தாய் உணவு ஊட்டியதாக
ஓர் உணர்வு.....

தனித்திருக்கையில்
நான் உண்ணும்போது..........

டிஸ்கி : நம்ம அரசியல் தலைவரெல்லாம் சேர்ந்து நம்ம பதிவர்களையும் கெடுத்துவச்சிருக்காங்க பின்ன என்ன ஓட்டு கேட்டாத்தான் போடுறாங்க ............

சனி, 4 டிசம்பர், 2010

என்றுத் தனியும் ............


பள்ளி பருவம்
பால்ய சிநேகம்
பிஞ்சு முகம்
பீடித் தொழிலில்
புன்னகை பூக்க
வழி இல்லை
பெண்ணிற்க்கு
மணமில்லை
பேரின்ப கனவுமில்லை
ஒருவேளைச் சோற்றுக்கு
போர்களமான
வாழ்க்கைகள்...........

ஆவி பொறியல் சாப்பிட வாங்க


அரைக்கிலோ பீன்சு வாங்கி
காம்பு கிள்ளி நாரெடுத்து
நன்னீரில் குளிக்கவைத்து
சுத்தம்செய்து
அருவாமனை வேண்டாமே
கூரானா கத்திகொண்டு
சின்ன சின்ன துகள் போலே
கடலைபருப்பு அளவினிலே
நறுக்கி வச்சு நாலைந்து
பச்ச மிளாகா அதே அளவில்
நறுக்கிபுட்டு அடுப்பையும்தான்
பத்தவச்சி வானலிய மேலவச்சி
சூடேறிய பிற்பாடு சிறிதளவு
என்னைவிட்டு கடுகு உளுத்தம்
தாளிப்பில் படபடனு சத்தம் வர
நறுக்கி வச்ச பச்ச மிளகா
கூடே போட்டு வதக்கி
கருகாத நேரம் பார்த்து
பீன்ஸையும் சேர்த்து போட்டு
ஒருநிமிடம் வதக்கி விட்டு
அளவான தீதனிலே மேல்மூடி
இட்டு நீராவிதனில் வேகவைக்க
சிறிது நேரம் காத்துநிக்க
பச்சை வாசம் பறந்து போக
மேல்மூடி திறந்து வச்சு
சுவைக்கேற்ப உப்பிட்டு
கிளறி கிளறி சிறிது நேரம்
ஆவியிலே வேகவைத்து
அடுப்பனைத்து கீழியிறக்க
நளபாகம் வேண்டாமே
அரிசி சோற்றுக்கும்
குழம்பேதும் வேண்டாம்
இட்லி தோசை சப்பாத்திக்கும்
துணையேதும் வேண்டாம்
பச்சை மிளகாவிற்க்கு ஏற்ற
காரம் சேர்த்து சமைக்க
அனுதினமும் உண்டாலும்
ஆசை தீராது சும்மா
சமைச்சு பாருங்க.........



டிஸ்கி : நம்பினோர் கெடுவதில்லை என்ன நம்பி சமைக்கலாம் நான் கேரண்டி

டிஸ்கி 1 : சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம் இட்லி , தோசை , சப்பாத்தி இவைகளுடனும் சாப்பிடலாம் டூ இன் ஒன்

டிஸ்கி ௨ : ஹலோ எங்க சாட்டுபுட்டு சும்மா போறீங்க நாங்களும் சாப்புடனும் ஓட்டு போட்டுட்டு போங்க நண்பர்களே

வெள்ளி, 3 டிசம்பர், 2010

அவள்


மல்லிகை வாசம்
மாலை நேரகாற்றும்

மின்மினிகள் பேசும்
மீண்டும் அவளே என்று

முல்லைமலர் கொடியாள்
மூத்தகுடி இளையாள்

மெல்லிசை நடையாள்
மேகக் குடையாள்

மையம் கொண்டு இழுக்க
மொட்டு மலர சிரிப்பால் - எந்தன்
மோகன புன்னகையால்.........

டிஸ்கி : ஆமாம் யார் அவளோ??????

வியாழன், 2 டிசம்பர், 2010

நாங்களும் இப்படிதான் தேடினோம் வேலை


விருந்தொன்ரும் இல்லை
எதிரிருக்கும் சத்திரத்தில்
நடைப்பாதை கடைகளு மில்லை
பகுதி பசியாற..........

நாகரீக நாணயங்கள் இல்லை
விருந்தோம்பல் காண...
பசிதீர வழியுமில்லை - ஆஹா
தெருவோர குழாய் இருக்கு

யாருக்கு மறியாமல்
என் குடலோன்றை
குடமாக்குவேன் இன்று.......
குழாய்க்கும் பசித்ததோ - என்ன
நீர் குடித்து ஏப்பம் விடுகிறதே????...........

புதன், 1 டிசம்பர், 2010

வதம் வரும் வதைக்க............


ரணங்கள் ஆறவில்லை
எங்கள் மனங்களிலே
ரணங்களை ரசித்து
ருசித்தவனல்லவோ நீ

ராட்சத வம்சம் நீயோ
வதம் ஒன்று வரும்
உன் வரவில் வைத்துக்கொள்
உயிர் மட்டும் இருக்கும்

உன் உடம்பெல்லாம் சிதையும்
உன் உயிர் மட்டும் இருக்கும்
கருவறையில் சிசு தின்ற
ராட்சதன் அல்லவோ நீ

ஷத்ரிய வம்சமடா
நாங்கள் மடையனே
வதம் செய்ய வந்துள்ளோம்
உன் உடல் கொய்து

உடலட்ற உயிராக்குவோம்
உன்னை வதம் செய்ய
வந்துள்ளோம் மனிதன்
மாற்றிய மானிதனாய்....

உன் படை சூழ்ந்தாலும்
பிடிக்க முடியா இடம் எனக்கு
மேலுல்லவன் கொடுத்துள்ளான்
உன் உயிர் வாழும் உலகில்

உன் உடல் வாழ சாத்தியமில்லை
பிஞ்சுகளின் நெஞ்சம் துளைத்த
அணுகுண்டு உன்னை துளைக்க
மாட்டேன் என்றது ஏனோ ....

அவை நீ விலைக்கு வாங்கியவையோ
குண்டுகள் வீசி கூண்டோடு
உன்னை அழிக்க நான் என்ன
மானிடம் அறியா நீயாடா சூட்சமா

பட்டறையில் பதப்பட்ட
கரங்கள் இங்கு குண்டு துளைக்கா
நெஞ்சம் படைத்து ஆயுதம்
வடிக்கிறது உயிர் கொல்லா

ஆயுதம் உன் உயிர் கொண்ட
உதிரி உடல் கண்டு
பாடம் புகட்டும் பாவிகளை
ருசிக்க வாராயோ இறைவா

இறைவா நீ படைக்கா
நீதி நீ வரவில்லையெனில்
படைக்கப்படும் உன்
படைப்புகளை மீறி

இனியாவது யோசி
நான் கடவுள் இல்லையென்று
கடவுளே...............

திங்கள், 29 நவம்பர், 2010

"கொய்யப்பட்ட ரோசாவே"



கருப்பாடு களமிறங்கி
களவாடி உறவாடிய
கரைச் சேரா கனவுகண்டு
கரைந்து வாழும் உள்ளமிங்கு

காதலைத்தான் கைக்கழுவ
காதல் செய்த குற்றமிங்கு
கிளிப்பேச்சு கேட்க வந்து
கிழிந்த காகிதம் ஆனேன்

கீழ்வானம் சாட்சி சொல்ல
கீரி ருசித்த பாம்பானேன்
குழந்தையான குணமொன்று
குழைந்து குரோதமானதே

கூவி கொக்கரித்தால்
கூடுமே கூட்டமிங்கு
கெத்தாக ஆண் நிற்க
கெட்டுப்போன பெண்ணாவேன்

கேளாத உலகமிது
கேட்போரும் இச்சையுடன்
கை பிடித்த அரளி விதை
கை கோர்க்கும் கனவுகள் மறைய

கொடும்பாவம் செய்த எம்மை
கொல்லாமல் விடமாட்டேன்
கொடுஞ்சினம் தான் கொக்கறிக்க
கொய்யப்பட்ட ரோசாமலர் - பேச

கோழைத்தனம் வேண்டாமடி
கோபம் கொள்ளக் கூடாதடி
கோகுலத்தின் ராதைக் கூட சீதைதானடி
கோரைப் புல்லாய் நிமிர்

கௌரவம் தான் வாழ்க்கையென்றால்
கௌரவிக்க எவரும் இலர் இப்புவிதனிலே
கௌரவிக்க வாழ்வேனடி-சிசுவை
கௌரவிக்க வாழ்வேனடி...............

டிஸ்கி : பாதிக்கப்பட்ட ஒரு மங்கையின் நிலையிலிருந்து நான் எழுதிய வரிகள் தவறிருந்தால் இம் மா பாவியை மன்னித்தருள வேண்டும் தாய்குலமே

கூத்தாடும் தெருக்கூத்து

ஆயிரம் ஆயிரம் கதைச்
சொல்லுவார் ஆனந்தம்
இதுவென கண்டுகளித்தோம்
தெருவோர நாயகனாய்
நினைவில் நிற்பார்

தை தோம் தை யென
சங்கீதம் முழங்க
ஆட வந்தவன் நானே
எனை ஆட்டுவிப்பவன்
நீயே....
சலங்கை யோலிதனை
கலங்கமிலாமல்
காற்றுக்கு இசையாக்குவார்
வேறோனே.......
ஓரிரவில் சரித்திரம்
முடிக்கும்
சாம்பவான்கள்
இவராவர்.......
சாதி மதமின்றி
அன்று அனைவரும்
கண்டுகளித்த
கதாநாயகர்கள்
எத்துனையோ.........
பெயரறிவோமா இன்று
பெருந்தவறு செய்துவிட்டோம்
என்று நினைக்கிறேன்
நாகரீகம் வளர்ந்து
நாடக கலையும் வளர்ந்து
இன்றும் கூழுக்காக
கூத்தாடுவோர் வற்றிய
வறுமையில்
கலைமரவாது.........

வந்தேன் வந்தேனே
உனை
வாழவைக்கும் தெய்வம்
நானே...........
தொடரும் இருளில்
தீச்சுடரான வாழ்க்கைகள்...........
டிஸ்கி 1 : சமயம் இல்லாத காரணத்தால் மீண்டும் ஒரு மீள்பதிவு நண்பர்களே

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி