வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

ஆடி வெள்ளி ...!


ஆடி வெள்ளி அன்னை
அன்பை அள்ளித் தந்தாள்
நாடி வந்து மண்ணில்
நாளும் விந்தைச் செய்தாள்
ஆடும் தந்தை தன்னில்
ஆளப் பாகம் தந்தார்
தேட லுந்த உள்ளத்
தேரில் ஆடி வந்தாள் (அன்னை)
மாரி அம்மன் தாயே
மனமி ரங்கி வாநீ
நேரி லுன்னைக் காண
நிலவும் தர்மம் நீயே
வாரி அள்ளித் தாரும்
வசந்தம் எந்தன் தேவி
பாரில் வள்ளல் நீயே
பசிக்கும் உண்ண வாநீ
கூழும் அருந்த வாரும்
கும்பஞ் சோறூம் தாறோம்
ஏழை எதையும் பாறோம்
இன்னல் மட்டும் தீரும்
வாழ வழிகள் போதும்
வந்து உண்டால் போதும்
சோழ மன்னன் ஆண்ட
சொர்க்கம் எங்கள் பூமி

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

வருக வேல் முருகா...!


தனதன தான தனதன தான
.. தனதன தான .. தனதான
அகமன தாக அழகுரு மாயை
...அரிதென வாக ... அடையாரும்
...அலைகட லாக அதனுரு மேவி
...அலைவது லோக ... அடையாலம்
பகடைக ளாட வழிவுரு மாற
...பகைவனு மாள ... பலனாகும்
...பகலவ னாளு மயமுரு வாக
...படைகள மாக ... அருள்வாயே
சுகமன மேற அடர்வன மாயை
...சுருதியி லாட ... மயமானேன்
...தகுதியி லாது நிகழுவ யேது
...தரமது மாட ... மலராக
மகவென ஆன மழலையு மாகி
...மனமொடு ஆள ... பிறவாயே
...வருகவெ வாழ வழியது மாகி
...வளமொடு மாயை ... உடனால
-மோ.தினேஷ்குமார்-

வியாழன், 25 ஜூன், 2015

"உத்தம உருவிது...! "


அச்சனை அடையவெ அக்கரை முழுகுவ 
      அத்திசை மறைவது அதுகாண 
      அற்றது மகிழுவ விற்றவை அமருவ 
      அப்பழ மறைமுகம் உடனேறும் 

மச்சமு மறையுவ மட்டமுள் முழுகுவ 
       மற்றிணை மறையுடு மனதாலே
       வட்டது வலியது வற்றுவ வரவர
       வக்கென வரம்பெறு துனிவாலே


உச்சினி லருகிடும் உத்தம உருவிது
      உக்கிர உடையது உதவாது
      உற்றவை உறையுவ எக்கிய வினையது
     ஒற்றுவ மறுமக மயமேவி


சச்சடி மயமுனை இத்துணை அனுகுவ
    தக்கிட மருளுவ தயைதானே
    சத்திய விதியது மத்திய மதியது
    தத்தெடும் தரகது மறவாதே


செவ்வாய், 19 மே, 2015

"கதம்பம்"

1.கண்ணனென் அன்பிற் கடியானே 
       கற்றுழப் பந்தப் படியாகேன் 
வண்ணம்முன் சந்தக் கொடியாகி 
       வந்தவன் சொல்லப் பிடியாவேன் 
எண்ணமென் சிந்தைச் சுழலாட 
       எண்ணுவன் விற்றப் பழமானான்
விண்ணவன் தொட்டுத் துதிபாட
       விந்தையின் சுத்தச் சுடரானான்

2.மேவத் தாகத் தனிவாகும் 
       மேளத் தாளத் துணையோடும் 
ஆவித் தாழத் தெளிவாக
       ஆரத் தூரத் துணிவாகும் 
பாவக் கோளக் கரமாகும் 
        பாரத் தானைத் தொழுதாளும்
சாவித் தேடித் திரியாது
        சாரத் தூதத் தயவாகு

3.காதலுரு வேதம் காணாவெண் மேகம் 
        காரூரும் மோகம் காணாய் 
பாதமிடும் வேடம் பாராளும் நேரம் 
        பாடாத ராகம் பாடாய் 
தூதனிடும் வேடம் தோதான தாகும்
        சீராளும் தேகம் சூடாய்
வாதமிரும் கூடும் மாறாது நாளும்
        வாதாடும் பேதம் மாறாய்



4.ஆட ஒருத்தி அலங்காரம் பொருத்தி 
கூட ஒருத்திக் குறிசொல்லும் குறத்தி 
பாட ஒருத்திப் பலகாரம் உணர்த்தி 
தேட விருத்தித் தெளிவாகும் படுத்தி

5.அரிதாரம் பூசி அரங்கேறி ஆட
பரிகாரம் உண்டா பகவானும் கூட
சரியானத் தோற்றம் சமமாகும் நாட
அரிதாக மாற்றம் அரணாகும் சூட

6.காணாக் கருவாகும் காணாப் பழமேநீ 
காணாப் பதமேறும் காணாய்த் துணிவேற 
காணோர்ப் பொழுதேனும் காயாய்த் தவமேனி 
தூணாய்த் தனியாகின் சேயாய்ப் பெருமானும்

7.நேரமும் தோரனை நீள நிகழ்வின் நிழலடுக்கும்
சாரம் கடத்தும் சகலமுன் கம்பீரத் தன்னெழிலும்
பாரம் குறைந்தப் பருவம்முன் பார்த்துப் பழகிடுதல்
காரணக் காரியக் கட்டட மாயக் கதிர்களிலே

8.தேடி ஓடிடும் தேவத் தூதனே 
தேட ஆடிடும் தேகத் துள்ளதே 
மாட மாளிகை மாயத் தூணதே 
நாடும் மானிடன் ஞானத் தீர்விதே

9.ஆடும் குறத்தி ஆட்டம் துறத்தி 
பாடும் குறித்தும் பாட்டும் விரட்டி 
தேடும் புறத்தில் தீட்டும் புரட்சி 
வாடும் மனத்தை மாட்டும் பொருத்தி

10.ஆலகாலம் உண்டுநீ அகிலமாண்டச் சங்கதி 
பாலனாகும் பந்தம்முன் பசித்திருக்கேன் சொல்லிடு 
ஆலங்காய்த் தக்கிளையி லாடுதந்த மோகமுள் 
நாளுங்காத்து நின்றதன் நாதமுந்தன் ஞாயமே

திங்கள், 20 ஏப்ரல், 2015

"கர்மமெதோ கூற்றுமாகி"


1.கண்டதும்கொள் காரியமே மாயையாகும்
         காரணச்சொல் காணத் திறவும்
கொண்டதும்கொள் கர்மமெதோ கூற்றுமாகிக்
         குன்றமர்ந்து கொண்டே கொடுக்கும்
கொண்டவுருக் கண்டததே கோளமிரும்
         கோயிலெங்கும் கூத்தன் குடிலாய்
வண்ணமலர்த் தோட்டமெங்கும் வந்தமருந்
        தென்றலுடை மாற்ற மயங்கேன்


2. கொண்டவன் கொள்ளக் கொடுத்தே கொலுவிரும் கோளத்தில்
கொண்டையில் கொன்றையும் கூந்தலில் கங்கையும் சூலமுடன்
தொண்டையில் ஆலகாலம் தீண்டிடும் நாகப் பதமணியாய்
தொண்டனுன் தோற்றத்தைத் தீட்டிவிட்டான் தங்கிடும்நீ ஆட்கொள்ளே


3. கண்டவர் காணாக் கடவுவர் தானகமே 
கண்டவர் காணக் கயவரும் ஆனவரே
கண்டவர் காணுங் கடனுரு வானவரே
கண்டவர் ஞானக் கருபொரு ளானவரே

4.
கோபத்தீ மூட்டாதே கோணத்தை மாற்றாதே 
சாபத்தை ஏற்காதே சாரத்தைத் தூற்றாதே
தீபத்தைப் போலுந்தன் தேகத்தைக் கற்றாலே
தாபத்தீ விட்டோடும் தானென்றேத் தானாகும்

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

"கூற்றிலே கூத்தினைக் காண !"

1.சித்திரப் பூவினிற் தேனோ 
       சிந்தையி லூற்றெடும் தேனோ 
சத்திர யெந்திரம் தானோ 
       சந்தையில் விற்றுவந் தானோ 
சித்தனும் சத்திரம் தேட 
       சீதன மாகிடு வேனே
சித்திரக் கட்டடம் தங்க
      சிந்திடும் தூரிகை ஆவேன்

2.கூற்றிலே கூத்தினைக் காண 
      குந்திடுங் கூட்டமில் நானும் 
சேற்றிலே செம்மையைக் காண 
      சேர்ந்திடும் பொன்வயல் ஆடல் 
காற்றிலே கானலின் தூது 
      காலமும் மாறுதோ பாடம்
நேற்றவன் நெய்தது யாதும்
      நீர்த்ததன் வேர்த்துளி ஆகும்

3.கனவிலு மாறாக் கணமேன் 
      கதவுக ளாடா மனமேன் 
நினைவுக ளோடே சமரேன் 
      நிழலதுப் போகா வடுவேன் 
கனிவது தானே பழமாம் 
     கடவது காணாப் பதமேன்
மனமது மாயா மரமே
     மறையது மாறா மயமே

4.வாடி சதியே வழியின்
      வனம்என் மனமாய்ப் பதியும் 
நாடி நகரும் நதியாய் 
       நலனில் நழுகா திருக்க
பாடி விழையேன் பதிநான் 
       பழமைப் பதிவாய் அமர்வேன்
தேடும் கடலில் அலையாய்த்
      திரண்டேன் தினமும் உனதாய்

சனி, 4 ஏப்ரல், 2015

"நானெனை நாடி வந்து"

1.காதலே னென்னைக் கட்டிக் 
        காட்டினில் விட்டுச் செல்ல 
   பாதகம் இல்லை முள்ளில் 
        பாதையை மறந்து போனேன் 
  சாதனை யொன்று மல்ல 
        சாதலைக் கொன்றேன் போதும்
  பாதையில் செல்லுந் தூரம்
        பாலனைப் போலா னேனே

2.மழையினி லிறங்கி ஆட 
        மனதினில் தணியும் தாகம் 
  பிழைதனில் பயண மார்க்கம் 
         பிரிவது தருமோ யோகம் 
  உழைத்திடு முயர்வின் தாக்கம் 
         ஒழுங்கினை வளர்க்கும் யாகம்
  பழமையை புகட்ட வாழ்வு
         பழமென நழுவும் பாலில்



3.நானெனை நாடி வந்து
        நாதனை தேடிச் சென்றேன்
   தானெனக் கண்டு கொள்ளச்
        சாதன மேது மில்லை
   கானகம் செல்லப் போரேன்
        காரணம் கொல்லப் போரேன்
   ஆனவை யெல்லாம் என்னில்
        ஆனவம் கொன்றால் கூடும்

4.காற்றினில் பரவும் தூசி 
        கானலின் விபரம் நேசி 
   நாற்றுநன் உயர்வை பேசி 
        நாட்டினில் விளைய யோசி 
   சேற்றினில் உழவர் ஆட்சி 
        சேர்ந்ததுன் பசிக்கு காட்சி
   ஊற்றெலாம் முழங்கிப் போனால்
        ஓடுவர் ஒதுங்கித் தானே

செவ்வாய், 24 மார்ச், 2015

மெய்எல்லையெ கைதாகுவன் பூர்த்தி...!

இன்றென்றென வெண்ணார்க்கரம் ஈன்றாளுவ காணே
நின்றுண்ணுவ கொன்றானென நீந்திச்செலல் காணே
அன்றெண்ணுவ இன்னார்க்குயர் அஞ்சாததைக் காணே
வென்றாளுவன் பொற்றாமரை மீட்டானெனக் காணே
பெற்றானெனை விற்றானெனப் பெய்யாமழை போர்த்தி
கற்றானவன் உற்றானுடை காற்றானவன் போர்த்தி
பற்றானது பந்தாளுவ பாராளுவன் கீர்த்தி
கற்றாளவன் மெய்எல்லையெ கைதாகுவன் பூர்த்தி

மனபோக்கிலே கடந்தேயுகம் மயமாகுது தனிலே
எனதாக்கிட வினைதூவிடும் இயலாதவர் தனிலே
வனவாழ்வினை கடந்தாலென மணந்தானவன் வினையே
தனதாகிடும் உணர்வாலவன் உதயத்தினை விளைத்தே
விலையாவதும் கலையாவதும் வினைத்தான்விளை பொருளே
மலையேறுவன் மழைதேடுவன் மனைதானது மயங்காய்
உலைவேகுது உடன்வாடுது உழைத்தாலுடன் வசமே
நிலையாவது நினைவானது நிழல்தானது உணராய்

திங்கள், 16 மார்ச், 2015

"பலகால பந்தம் படர்ந்தெங்கும் தன்னில்"


1. மன்னன் அமர்ந்தானே மண்மீது கண்ணனே 
    என்னில் அமர்வாயோ ஏற்றிடு கோலத்தை 
    தன்னில் தனைக்காண தாகம் நிறைந்தது 
    தன்னை தளராது தாங்கு

2. உண்மை உறைந்திட ஊரும் மறந்திட 
    கண்ணில் தெரிவது கானல் நாட்டினில் 
    ஊழல் பெருச்சாளி ஊதும் சங்கினித் 
    தாழ்வ தரிதே சமர்செய்

3. ஆட்சி நடக்குதா ஆட்டம் நடக்குதா 
    காட்சி பிழையான கட்சி வளர்க்கவே 
    சாட்சி சடங்கென சட்டம் அமைக்கிறான் 
    மாட்சி மருந்தில்லா மாயம்

4. தெள்ளத் தெளிவாகத்  தேடல் அறிந்தேனே 
    மெள்ளத் தெளிவாகி மீண்டுள் அமர்ந்தேனே 
    தெள்ளு தமிழிசைத் தேனைக் கொணர்வேனே 
    அள்ளுங் களமாக்கி ஆள்

5. கந்தையில் தன்னிலை கண்டதும் கொண்டதை
    சந்தையில் தள்ளிட தன்னையே கண்டவன்
    சிந்தையில் தோன்றிய தென்றலே கல்லென
    வந்தானை சொல்லாள வையும்

6. நானற்ற தேசத்தில் ஞானத்தை தேடி 
    தானுற்ற பாசத்தில் சங்கீதம் பாடி 
    வானுற்ற மாயத்தை மௌனித்து நாடி 
    நானேற்ற வேடத்தில் நாணேற்ற சூடி (னேன்)

7. கட்டுக்குள் அடங்கிடான் காட்டுக்குள் தீயாய் 
    பிட்டுக்கு சுமந்தவன் பேரண்ட மாயன் 
    உட்கொண்ட நஞ்சுடன் ஒற்றாத மெய்யன் 
    விட்டேறி வறுமையின் வேடத்தே மொய்ப்பான்

8. கோலத்தை கொண்டவன் கொடுத்தான் கோணத்தை 
    ஞாலத்தில் வந்தவன் நிறைத்தான் ஞானத்தை 
    காலத்தில் கண்டவன் கௌரவம் கோர்த்தானே 
    பாலத்தை பண்டவன் பணிந்தான் பந்தினிலே

9. கல்லுண்ட கோலத்தில் கட்டுண்டேன் கோளத்தில் 
    வில்சென்ற கோணத்தில் வெட்டுண்ட கோரத்தில்
    சொல்வென்ற கோவத்தீ சூழ்ந்தாண்ட காலத்தில்
    செல்லென்றே சந்திக்கச் சேணத்தை சீர்செய்தேன்

10. பலகால பந்தம் படர்ந்தெங்கும் தன்னில் 
    சிலகால நேரம் சிறகுற்று பறந்தேன் 
    விலையான தெங்கும் விடிலோடு தோன்ற 
    கலையான நாதன் கடந்தெங்கே செல்வான்

11. எங்கிருக்கான் அங்கிருக்கான் என்றே அலைபாயும் 
     கூட்டத்தில் அத்தனை உருவிலும் அவனுள்ளான் 
     என்பதை உணருங்கால் ஊழ்வினைகள் தீண்டா 
     பதார்த்தமாகி எதார்த்த மாயை நிரம்பும் 

ஞாயிறு, 8 மார்ச், 2015

"ஞாலம் மின்னுது வென்றாளு ! "


காலை உந்துது தன்னாலே
மாலை வந்தது பின்னாலே
காலம் ஓடுது முன்னாலே
ஞாலம் மின்னுது வென்றாளு - (காலை)

நாளும் எண்ணிட செல்லாதே
நாளை நின்றிட எண்ணாதே
வாளும் உன்னிடம் நில்லாதே
காளை என்றென துள்ளாதே - (காலை)
வாட என்றும ருந்தாவாய்
தேடல் வென்றிட தீர்வாக
காடும் நன்றென கண்டாயு
நாடி வந்திடும் நற்பாகாய் - (காலை)
***********************************************

தன்னை தானடி தந்தேனே
மன்னன் நானென வந்தேனே
இன்னம் ஏனடி சந்தேகம்
உன்னை தாயென கொண்டேனே - (தன்னை)
கண்ணன் யாரென கண்டாயோ
கண்ணில் பேரருள் கண்டாயோ
மண்ணில் மாதவன் வந்தானே
மண்ணை தாயென கொண்டானே - (தன்னை)
சிந்த பேதமை தந்தானா
பந்த போதனை தந்தானா
வந்த பாதையில் வந்தானா
சந்தம் பாடிட தந்தானே - (தன்னை )

திங்கள், 2 மார்ச், 2015

"ஒவ்வொன்றும் ஓர்ச்சுவை பலகாரம்"


"பிரம்படி பட்ட பரமனை காண
பிரம்மனும் சித்தன் பிறவுவ கண்டுஅவன்
சொல்லாது ஒன்றனை செல்லாது கற்றிட
கல்லுக்குள் இன்னொரு கல்"

"தோகை மயிலாட மையலில் மன்னவன்
தோள்சேர் மமதையில் தோல்வி மயமாகி
மார்தழுவி நீருண்ட மேகமாய் பூவொற்ற
நார்சூடி பாரண்டம் மாயை"

"சிந்தும் மேனியில் சிந்தனை தீயிடு 
பந்தம் சேனையை பங்கிடா சேவைசெய் 
உந்தக் கூரென ஒன்றிலா கோட்டியை 
அந்தம் ஆக்குவ அன்றிலா ஆற்றலுள்"

"காயுந் தேகமே கானலில் நீந்திடா
மாய எந்திரம் மாதவன் தந்தது 
ஆய அந்தரம் ஆடுவன் சன்னதி 
தாயம் ஒன்றென சம்மதி உள்அவன்"

"கடுக்காய் கொணர்ந்தேன் கசக்கா குழந்தாய் 
உடுப்பாய் உணர்ந்தாள் உடலுள் ஒழுக்கம் 
கிடப்பார் அருந்த கெடுப்பார் வருந்த
கடப்பார் அரிதாய் கதவு திறந்தார்"

"அத்தனை ஆதங்கம் அண்டி பிழைப்போரே
பித்தனை போலென்னை பெற்றவன் போல்தன்னை 
சுத்தமாய் உள்ளுடுத்தி சூழ்ச்சியவிழ் மாயவன் 
சித்தனின் காடுஇது சீற்றமுற தாங்கா(உலகு )"

"கோட்டைசுவர் மேலமர்ந்து கொக்கரித்து நின்றான் 
ஆட்டகளம் கண்டிடாதன் ஆட்சிதனை கொண்டான் 
நாட்டினிலென் மக்களெல்லாம் நாதியற்று நிற்க 
கூட்டினிலே பட்டினியாய் குற்றமென்ன செய்தாய் ?"

"அந்தரத்தில் ஆடிடுதே அகமனதின் தோற்றம் 
சிந்தனையும் கூடிடவே சிலைவடிவாய் மாற்றம் 
சந்தித்த பாக்கியமே நான்பெற்ற கொற்றம் 
வந்திறங்கி ஆடுகிறான் மாயவனின் தோட்டம்"

"ஆலயம் தாண்டி வந்து யாரென கூறிசெல்லு
ஆதியும் தானென நீ ஆணவம் ஆளநில்லு"

"மெய்யும் பொய்யும் கலந்ததுவே 
செய்கை பொய்க்கா கலந்தனவே
பொய்யால் மெய்யை கலந்திடவே
மொய்க்கும் பொய்கள் கனவெனலாம்"

"கொட்டி தீர்க்க கோடியுண்டு 
          கோலம் தீரா பாரமுண்டு 
வெட்டி பெயர்த்த வேருண்டால் 
          வெள்ளம் வடிய வாய்ப்புண்டு 
சுட்டி கேள்வி வியப்பன்று
         சூடும் மல்லி மலரென்று
தட்டி திறவும் கதவண்டி
         தானே தகர்த்தல் தரமுண்டா"

"கற்றிட வேண்டி எண்ணம் 
        கருத்தினை ஆள வேண்டும் 
பற்றுதல் தாண்டி வண்ணம் 
        பழகுதல் அமைத்தல் வேண்டும் 
சற்றெனை அடக்கி உண்ணும் 
        சலனங்கள் அமிழ்தல் வேண்டும்
கொற்றவன் ஆண்ட திண்ணம்
        கொடுத்தெனை ஆள வேண்டும்"

"அழகினிற் அகங்காரம் அற்றதொரு 
        அலங்காரம் அமைத்தே அன்பொழியும் 
அவனியே அடைக்கல(ம்) அன்னையே 
        அடைகாக்கும் அழகாம்சம் ஆண்டவள் 
அளவினிற் அகங்கொண்ட அன்றெழ
        அதிகாரம் அமைதிநிலை அந்திவிழும்
அலைபோலே அதிகாலை அர்த்தமெய்
       அழகாடும் அளவெழுதும் அந்தரத்தான்"




சிறு குறிப்பு : முகநூலில் எழுதியவை இவை அனைத்தும் சுவைத்து பகிருங்கள் தங்கள் மேலான கருத்தை 

கந்தன் வருவான் ...!


கந்தனை போற்றி பொழியும் தமிழ்மறை
சிந்தனை ஊற்றுள் தவழும் மழலையாய்
சந்தம் அழகுடுத்தி சாந்தமெய் சூடுவன் 
பந்தம் பழம்பிரித்து வர
சொந்தம் எனதென்று அன்பும் அளவற்று
சிந்தும் மனதேரில் மக்களுனை காணும்
அழகனே ஆறுதலை அர்த்தம் முழங்கும்
பழம்நீ சிவஞான பழம்நீ
போற்றி நினைவெலாம் ஊற்றி உயர்பெரும்
காற்றுள் குழைத்தேனே வீற்று வளம்வரும்
சண்முகா செந்தமிழ் செண்பகப் பூச்சூடி
கண்ணுனை காணவே வா
-மோ.தினேசுகுமார் -

நானெங்கும் சிவனைத் தேடி


நானெங்கும் சிவனைத் தேடி
         நாளெங்கும் அலைந்தேன் வாடி
தானெங்கும் நிறைவேன் வா,நீ
         தன்னுள்ளம் புகுவான் ஞானி
நான்வென்று நகரும் மேனி
         நில்லாது இறைக்கும் கேணி
தானென்ற உணர்வை தாண்டி
         தாயுமான சிவனைக் காணும் 

நித்திரை ஆண்டது போதும் 
         நர்த்தனம் ஆடிய நாதா 
சித்திரம் கண்டது போதும் 
         சட்டென சூடிட வாரும் 
சித்தனும் தங்கிட உள்ளம் 
         சிந்தனை தாங்கியே ஆடும்
நித்தமுன் சத்திரம் தாண்டி
         நாடகம் கண்டிட வா,நீ

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி