ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

கற்பதம் ........!


நிலவிற் நிழலாட நானின்றி தள்ளாட
நீரில் நிறமற்று யாதும் நினைப்பாட 
நீதானோ கள்ளிக் கனவானே எந்தன்
நினைவா ளுமினி நிசம் 

விடமா றிடையே றியதா இளகும்
மனமே சகலமும் நாளேந்தும் சூதனம்
மாறிய கார்ய விருட்ச மகிழும்
சடமே நிலையா நீ

நெஞ்சம் கனத்தெழ வஞ்சம் நகைத்து
வாகை சூடிட வல்லவன் தேகத்தில்
நஞ்சுருக்கும் வேடதாரி தேரினில் பாவை
மயிலும் படியளந் தானே

நீர்பதம் சேருமிட நாற்றமிகை யாற்றும்
விருபதம் தாருமிட தோற்றமிகை யாற்றும்
துருபதம் வீழுமிட மாற்றமிகை யாற்றும்
கற்பதம் யாற்றும் உலகு

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி