வெள்ளி, 14 டிசம்பர், 2012

பொருத்தமிலா திருத்தம்....?


அகில மளந்து அடைக்களம் சுட்டி
விளங்கிட தானே வியூகம் கொடுத்தான்
மலர்ந்திட மாலை தொடுக்கும் தனியே
மணந்திடும் தோகை மயில்

அகில மடங்கி துகளுமாகித் தீரா
சகலமு மாயையின் கூரே நிழலும்
பகுதியைக் கண்டவன் கொண்டதிது கூறும்
மிகுதியில் வீழா காண் ........

மலரொன்று மனம்கொண்டு தினம் உன்னை
தரிசிக்க விடைசொல்ல விளைவோடு விதியே
பயணிக்க சரமொன்றில் வரமேந்தி நகையா
தணியும் கனிவாய் உனது 

மனமறியா மணக்கும் மாரணம் துணையேறி
துகிலுடுத்த தகிக்கும் மதியனோ ஆழ்ந்து
அமைதியாய் முடங்க கதியேற்ற மடங்கிய
சூழலின் விதிப்படி வழி

குருதி சிரிக்குதடி இந்த கூறுக்கெட்ட
மாக்களை நினைத்து சிதறும் கோரத்திலும்
செந்நிறமே எங்கிலும் படர்நிறம் பார்த்து
சாதியறிந்து கூறேன் நா...........

கோண வடிவிலான் கோர முகத்தான் 
கோடி கொடுத்தே கோவில் அமைத்தான்
கோளத்தில் நாளும் கணித்தான் கோர்வையாய்
கொல்லத் துணித்தான் மாயை.....

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி