ஞாயிறு, 17 ஜூலை, 2016

இனியோர் நாளும் வருவதில்லை...!


இனியோர் நாளும் வருவதில்லை 
இளமை நாளை தொடர்வதில்லை 
கனியைக் காயை உணர்தலையும் 
கழித்துக் காலங் கடத்(ந்)திடுறாய் 
அணியைத் தானாய் கவர்ந்திடவே 
அறிவைக் கோர்த்தே வழிவகுத்தான் 
மனிதா மாயை மயமதைத்தான் 
வணங்கி நீயும் அடைந்திடுவாய்

சனி, 16 ஜூலை, 2016

தேர்வெழுதி நாளும் மாயும் மெய்கள்...!


காசிருக்கும் பக்கம் வேசி வேடம் 
காய்ந்திருக்கும் பக்கம் பூசி மூடும் 
ஊசிநுழை வாயில் போடாத் தையல் 
ஊர்செனத்து வாயில் பாயும் நீதி 
தேசமொரு கோட்டில் போகுங் கோணம்
தேர்வெழுதி நாளும் மாயும் மெய்கள் 
மாசிலாது மக்கும் தீர்ப்புள் மோதி 
மாயமான தெங்கும் மக்கள் காப்பு

கூத்தாடிக் கூத்தாடி விட்டுப் போகவேண்டும் 
கூறாக்கிக் கூராக்கிக் குத்திப் போகவேண்டும் 
ஆத்தாடி ஆத்தாடி அங்கம் பங்குவேண்டும் 
ஆராத ஆறாக்கி நீண்டு ஓயவேண்டும் 
காத்தாடிக் காத்தாடிச் சிட்டுப் போலவேண்டும் 
காணாதுக் காணாதே கட்டுப் போடுவேண்டும் 
சே(ர்)த்தாடிச் சேர்த்தாடிச் செத்துப் போகவேண்டும் 
சேறாக்கிச் சோறாக்கித் தின்று போகவேண்டும்


வியாழன், 14 ஜூலை, 2016

சர்வம் சிவமயமாய்...!


தர்மம் தனதுடைமைத் தங்கத் தடைத்தகரேன்
தன்னில் தனியனாகும் தங்கச் சுடரெனவே 
மர்மம் உடைத்தெரிய எங்கும் வளம்வருவ 
மண்ணில் மனிதனாக ஏங்கும் மலர்களுமே 
கர்மம் தொடர்ந்துவரும் கக்கும் கனலையும்தான் 
கண்ணின் இமையதுபோல் காக்கும் அரண்களிடு
சர்வம் சிவமயமாய் சக்தி உடன்பிறக்கும்
தன்னில் நிகழ்வுடுத்த சக்தித் தனிலுயிர்ப்பாய்




ஆலயம் முழுதும் வலுப்பெற வேண்டும்
ஆண்டவன் என்றேக் கடனுற வேண்டும்
பாலகன் எனுவான் பலம்பெற வேண்டும்
பாண்டவன் என்றோர் பயமர வேண்டும்
நாளதில் நிகழ்வும் நடைபெற வேண்டும்
நானென அன்றே வளம்வர வேண்ட
மாளென மறந்தே மருந்திட வேண்டும்
மாயனும் அருந்த மறுமலர் ஆவான்





கிட்டாதோ என எண்ணிக் கேள்விகுள்ளே...!


நான் என்ன சொன்னாலும் கேட்பதில்லை 
நீ என்ன சொன்னாலும் கோபமில்லை 
எக்கேடு கெட்டாலும் எனக்கு இல்லை 
தப்பாதுப் போனாலும் கவலை இல்லை 

கொட்டிக் கொடுத்தாலும் கோடி எல்லை 
வட்டிக் கொடுத்தாலும் மாடி இல்லை 
தட்டிக் கொடுத்தாளும் தாய்மை இல்லை 
பட்டி அடைத்தானோ பாவம் உள்ளே 

சிட்டாட்டம் சிறகடிக்க முடிவதில்லை 
பட்டத்துப் படிகட்டே பாழுதெங்கும் 
விட்டாள விதியொன்றும் வீதியல்ல 
முட்டாளாய்ப் புகழ்தாங்கிப் போவதெங்கே 

பட்டாலும் படியேறப் பாகமுள்ளே 
பட்டாசு வெடித்தாளும் பாறையல்ல 
கட்டாத படியொன்றுக் காணுதுள்ளே 
கிட்டாதோ எனஎண்ணிக் கேள்விகுள்ளே 

தப்பாட்டம் தலையாட்டிப் போகுதெங்கும் 
நிப்பாட்டும் நிலையாய்ந்துப் பாருமண்ணே 
செப்பாட்டம் கடத்திட்டுப் போகவில்லை 
முப்பாட்டன் முனைந்தவழிப் போனதில்லே... 


-மோ.தினேசுகுமார்- 




வியாழன், 17 மார்ச், 2016

தேர்வுன் தெளிவின் சாரம்...!

என்னச் செய்து விட்டாய் 
            ஏனோப் பிழையாய் துளிர்த்துவிட்டான்
மின்னல் தோற்று வித்தாய்
            மீறாத் தமிழன் சிலிர்த்துவிட்டான்
பின்னல் நெய்த முற்றுப்
            பேரால் அழையாய் முளைத்துவிட்டான்
இன்னல் தூண்டில் இட்டாய்
            ஈன்றா மழையாய் மகவெழுந்தான்



நேரும் கொடுமைக் காலம்
           நேற்றின் முடிவும் ஆகா
வேரும் மணலைத் தாண்டி
           வீழா திருக்க வேண்டி
கூராய் அடியைத் தோண்டும்
           கூற்றுள் முடியாக் கர்மம்
தேருன் தெருவில் ஓட
          தேர்வுன் தெளிவின் சாரம்

செவ்வாய், 15 மார்ச், 2016

சதியிலே தமிழகம் சுழலுதய்யா...?

சுரண்டிப் பிழைக்குது அரசாங்கம்
கரண்டித் துடிக்குது அடுப்பங்கரையில்
மருந்தைத் திறக்கிறான் விவசாயி
மதிகெட்டு ஓடுறான் பின்னாலே
மலர்களைத் தூவுறான் முன்னாலே
மரணத்தின் ஓலம் மறையும் முன்னே
மழைவரும் தருணமும் அறிந்ததுண்டா
மறைவுகள் பொதுவில் நடப்பதிங்கே

குடிகெட்டுப் போனான் பொருப்பாளி
குடித்திட்டுப் போனான் உழைப்பாளி
குடிசைக்குள் ஏற்ற விளக்கில்லே
கும்பிடுப் போடுறான் மதுவாலே
பிச்சை ஏந்துறான் எதுக்காக
இச்சை ஊறுகாய் அதுக்காக
சொச்சம் தீர்த்தும் பலனில்லை
பச்சை குழந்தைக்கு பாலில்லை
அச்சம் என்னைப் பற்றியது
அதிகாரம் அவலம் தொற்றியது
சதிகாரன் கணக்கு முற்றுமது
சதியிலே தமிழகம் சுழலுதய்யா

சனி, 12 மார்ச், 2016

கடவுளைக் கண்டேன் கட உள்ளே என்றார்

இந்தப் பக்கம் நானும் வருவதே இல்லை
அந்தப் பக்கம் போவேன் அதுமொரு எல்லை
சொந்தப் பக்கம் போனால் எனிலெழும் மின்னல்
வந்தப் பக்கம் போக வழிவிடு என்றேன்

அண்ணன் பரிவை சே.குமார் அவர்களின் அழைப்பிற்க்கு இடமளித்து 

கந்தனைக் கூப்பிக் கருணை உள்ளத்தே  
வந்துனைக் காணா திரும்பி வெள்ளத்தே
நிந்தனைக் கொள்ளா அருளும் எண்ணத்தே 
சிந்தனைச் சூடிச் சிவனை சந்தித்தேன்

கடவுளைக் காணக் கடுந்தவம் வேண்டும்
கடவுளைக் காணக் கட உள்ளே என்றார்
கடவுளைக் காண நடந்தது என்ன
கடவுளென் மாயன் கடத்தினான் என்னை 

சரி சரி இதோ வந்துட்டேன் இருங்க 

கடவுள் : என்னடா வேண்டும் உனக்கு தினம் இப்படி புலம்பித் தள்ளுற நான் என்னடா செய்யனும் சொல்லு

என்ன எனக்கு வேண்டும் என்றே
எனக்கு எட்ட வில்லை என்றும்
உண்ண உணவும் தந்தாய் தூணில்
உடுத்த உடையும் தந்தாய் பாக்யம்
சின்ன உதவி என்றேத் தேடிச் 
செல்லப் புரலும் சிந்தை அங்கே 
எண்ணக் கதவு டைத்து சொல்லில்
ஏற்பக் கோர்ப்பேன் ஏதும் வேண்டா

கடவுள் : அடப் போடா மாதவா என் கூடவே இருக்கனும்னு சொல்ற என்னையே பாடிப் பார்த்துட்டு இருக்கனும்னு சொல்ற இது போதுமா 
உனக்கு

எனக்கிதுப் போதும் எனைச்சுற்றி
எதற்கிது வேண்டும் தலைச்சுற்ற
மனமொரு நோயாய் மனிதத்தை
மயக்குது பேயாய் வினைத்தொற்ற
கணக்கெது தேடேன் கடனைத்தீர்
கலந்திட வேண்டாம் கடமைத்தேர்
நினைப்பது நானோ நிலைக்கொள்ளேன்
நிகழ்வதுக் காண மனதெல்லாம் 

கடவுள் : ஆகா ஆகா வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு கேட்கிறானே நான் என்ன சொல்ல ... ஆசையை அறுத்தெரிய சொல்லுறான் அவன் கடன்பட்ட கணக்கைக் தீர் என்கிறானே இங்கு நின்றால் நம்மையும் குழப்பிடுவான் நாம ஓடுறதே நல்லது ....

கலியுகம் : இப்படியாக அன்று தொடர்ந்த கடவுளைக் கண்டேன் தொடர்பதிவு பாதியிலே நிற்க அவரும் வந்தப் பாடில்லை நானும் வந்தப் பாடில்லை வலைப்பூ தூங்கி வழிய தட்டி எழுப்பி போனது போகட்டும் போட்டு விடுயென்றேன் இடுக்கை இட்டேன் 

இன்று போய் ...! அன்றில் வா ...!

மக்களைக் குழப்பும் மந்தை
               மத்தியும் மழுப்பும் சந்தை
பக்கமுள் சலவைச் செய்துப்
               பட்டென உடுத்தும் ஆடை
சிக்கலைத் திரித்துப் பார்க்கச்
               சிந்தையுள் நழுவும் மீனே
சுக்கிலைப் பிணியைத் தீர்க்க
                சொக்கிடப் பலதும் போச்சு....


உச்சி யென்றான் வெற்றித் தோல்வி
                உள்ளம் கொன்றுப் பற்றிக் கொண்டான்
பிச்சை யென்றான் பேழை யேந்திப்
                பித்தன் நின்றான் நேருங் கோணம்
இச்சைக் கொண்டே இம்சைக் கண்டு
                இன்றி யாதும் இல்லை வென்றான்
நிச்ச யித்துக் கோரும் கோலம்
                நிர்ண யித்தேக் கோட்டை வே(ய்)ந்தான்

புதன், 9 மார்ச், 2016

நாடும் தென்றல்...!

மாளிகையென் மாடம் எண்ணம்
                  மனமிருகக் கூடம் வண்ண
நாளெழுந்துச் சூடும் வர்ணம்
                 நரனுனையேத் தேடும் கர்மா
காளையென ஆடும் நாணல்
                கரையனுகப் பாயும் சாரல்
ஓலையிலேக் கூறும் தேடல்
                உடன்வருவ நாடும் தென்றல்

செவ்வாய், 8 மார்ச், 2016

சொக்கன் அமைத்த மேடை...!

தொங்கித் தொடரும் பாதை
சொக்கன் அமைத்த மேடை
பொங்கும் பருவம் தாண்டி
பொய்யுள் அடைத்த மாயை
சங்கத் தமிழுள் ஆழ்ந்துச்
சந்தம் தொடுத்த மேன்மை
எங்கும் பெருமைச் சேர்த்தே
எண்ணம் அடையும் சீவன் - சிவனே



அப்பனை நினைத்துச் சுப்பன்
அர்பனென் றனைத்தும் வற்ற
அப்பனும் சிறையில் ஒற்ற
அர்ச்சனைத் துளிர்த்த துள்ளே
சுப்பனில் உயிர்த்தான் அப்பன்
சொக்கிட விளைத்துச் சென்றான்
குப்பனும் முறையாய் நிற்க
கொற்றவன் நிறைவா னெங்கும்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி