புதன், 28 டிசம்பர், 2011

சொக்கா சொக்கா ஆயிரம் நூறு.....


சொக்கா சொக்கா ஆயிரம் நூறு
எனக்கில்லை எனக்கில்லை - ஆமாம் 

1 . நகைச்சுவைப்  பதிவுகள்.
சுட்டு சிரிக்குது சட்டியிலே குழம்பு
சட்டுன்னு வாடிப் புள்ள ஒய்யாரமா
பட்டு சீலைக்கட்டி பார்க்க உன்னை 
கோமாளி வேசமிட்டு சிரிக்கவைக்கேன் 

2 . கவிதைகள்
காதல் கவிதை வாசிக்க தடம்புரளும்
வரிகளின் தாகம் சமூகச் சிந்தனைகளைத்
தூண்டும் புதுப்பிறவியாய் புனிதம் தேடும்
புவியனாய் அகத்தெளிவு 

3 . விழிப்புணர்வு
அங்கே வரான் இங்கும் தரான் 
எங்கே போச்சு வானம் பூமி
விழித்து நட விடிந்ததெங்கும் 
விடியல் நிலை பேசும் 

4 . கதைகள்
ஒரே ஒரு காட்டுக்குள்ள 
ஒத்தப் புள்ள குள்ள நரியாம் 
சுத்தி திரியுர வேளையில சாய
சட்டியில வீழக் கண்டேன்

5 . அனுபவம்/பயணக்கட்டுரை
நானும் நடக்கிறேன் நாளும் கடக்கிறேன் 
சேர்ந்துப் பகிர்வோம் நாளுமிங்கே
வருவோர் காண்பர் கண்சிமிட்ட 
உதவும் வரிகளாய் பதியட்டுமே

6 . அரசியல் கட்டுரை
ஆட்சி நடக்குது மத்தியில ஆளான
நானும் தான் ஓட்டுப் போட்டேன் 
அடிமையா நினைக்க அகங்கொதிக்க
வாளும்தான் பிடிக்க சூளுரைப்போம்

7 . திரை விமர்சனம்
முகவரி அறியாமா முகமூடி போடுவாங்க
சுயவரியல்லாம சுனை நீரல்லும் காட்சியாய்
காலத்தை மாத்துவாங்க வெள்ளித் திரையிலே
வேடிக்கை பார்க்க வாடிக்கையாய் 

8 . தொழில்நுட்பம்
அரிதென்பார் அவனியிலே புதிதென்பார் 
தொழில் நுட்பம் தெரியாமல் வாங்கிவிட்டால்
தின்டாட்டம் தான் அவனுக்கு கொண்டாட்டம்
அரியவை அறிய அனுதினம் 

9 . சிறந்த புதுமுக பதிவர்கள்
அறிமுகம் ஆனது எங்கே எங்கே
நான் அவையில் அரிதாரம் பூசியது 
இணையத்தின் நட்பினில் இனியவனாய்
என்றும் அன்புடன் இங்கே இங்கே.....

காணா தேசத்தே கடல் கடந்து பயணிக்கும் சில நட்புக்கரங்களின் இணையமான டெரர்கும்மி 2011 விருதுகளில் தங்களது பதிவுகளை இணைத்து பரிசுகளை அள்ளுங்கள் பதிவர்களே 


சனி, 24 டிசம்பர், 2011

இன்னும் பசித் தீரவில்லை


இன்னும் பசித் தீரவில்லை யுண்டுகழித்தும் 
கொண்டக் குழித் தேடிவரும் கண்டவுயிர்க்கும்
சண்டைக்களம் விதையுதிங்கு கூலிகொடுத்து
சிதையும் சதையுமென் றறியே 

கள்ளருக்கும் கல்லரைக்கும் காவலெவனோ
கண்சிமிட்ட கழுத்தறுக்கும் சூத்திரமேனோ
சொல்லிருக்கு சுமந்துவாரேன் சமர்த்துவானா
வல்லிழுக்கும் சீவனே உள்ளிருக்காய்

அன்னமிடை வல்லக்கொடை செல்லவிடை
தாருமெண்ணமே சக்தியுந்தன் சாடையெனில்
வண்ணம் சேருமிடத்து நாறுமுந்தன்
நாமமறிந்தே சூடுமிழைத் தொடு .....

வியாழன், 22 டிசம்பர், 2011

நாளும் இறைத்தான்


கண்டதும் கொன்றது வேடவன் செயல் 
சாயல் கண்டதும் வென்றது நாரணின் 
சுழல் காட்சி கண்சிமிட்ட வர்ணிக்கும்
வார்த்தை தடம் புரள

கடந்து வந்தேன் அளந்து கொண்டான்
அவன் எண்ணப்படியே மிதந்து வர 
வலை விரித்தான் அன்னப் படியாய்
அருகிய உள்ளத் தவிப்பாய்

நிறைந்து அல்லும் பகலுமாய் ஆடிப்
பிழையேன் கல்லும் கவடுமாய் சூடி
கொடுத்தான் நாடி பிடித்தான் நாளும் 
இறைத்தான் இல்லார்க்கும் இரை

சனி, 17 டிசம்பர், 2011

இறுக்கும் கயறு


சிறகுகள் விரிய சருகுகள் உதிர
சலசலக்கும் ஓசை திசை மாறிய
தேசம் வசைப் பாடிய கூட்டம்
வர்ணிக்க செவி யுதிர்க்கும்

உதிரம் உணர்வன்றி திரிக்கும்
தகிப்பில் தகனமாகும் குணம்
அகத்தே சமைக்க அடைத் தேடும்
குருவி கூடில்லா மிச்சம்

அச்சுருத்த வச்சிருத்தும் சுவை
வகையில்லாச் சூடி மிகையல்லா
மிடுக்கும் சுரமில்லா சறுக்கும்
சாரத்தில் இறுக்கும் கயறு


புதன், 14 டிசம்பர், 2011

இணையும் கரங்ககள்

அன்பினில் அகப்பட்டு அன்னவர் காக்க
அருகினில் கிட்டா கனியாய் யெட்டி
தூர நின்றதுவே கண்டங்கள் தாண்டி
வெற்றுடலாய் இயந்திரமாய்

இன்னல்கள் தீர்க்க தினிக்கப்பட்ட
வாழ்வியல் சூடும் மணக்கப்பட்ட
மாலை கனக்கும் சுமையெல்லாம் 
மறக்க வலை நாடி

விதி மாற்றி வீதி சமைக்க
துணையாய் இடர் நீக்கும் தூண்களாய்
சுடர்விட்டெரியும் இணையத்தி
இணைக்கும் கரங்களின்

முதலகவை நிரைவுற இரண்டின் 
துவக்கத்தே அன்புள்ளங்களின் 
ஆதரவை தேடி வலைபாயும் 
குருவிகளாய் கண் முன்னே

தாய்மொழி செந்தமிழின் தனித்திறம் 
மேலோங்க அன்பர்களின் படைப்புகளை 
நலமுடன் செதுக்குங்கள் வளம்வருவோம் 
முடிசூடா மன்னர்களாய் 


சனி, 10 டிசம்பர், 2011

"தமிழுக்கு கவி"


கனியாத உள்ளமெல்லாம்
கனிய வைக்க கவிபடைத்தாய்
பெண்ணடிமை விலங்கொடித்து
அச்சமிலா விடியல் கண்டாய்

சாதி ஒழிய சாட்டைதனை
கரம்பிடித்து சமத்துவம் புகட்டினாயோ
அச்சமில்லை என்றுரைத்து
காட்டாற்று கவி சமைத்து

வெள்ளையனை வெளியேற்ற
வேள்விபல கண்டவரே
தமிழ் பாலூட்டி தரணியெங்கும்
தமிழ் வளர்த்த மீசையாரே

நின் கவிபாடும் உலகெங்கும்
தமிழ் உரிமை போராளியே
உம் பாதங்களை பின்பற்றி
பயணிக்கும் உள்ளமிங்கு

தமிழ் கடவுளான உம்மை
சிரம் தாழ்த்தி கரமுயர்த்தி
வணங்குகிறேன் தினமும்மை
மகா கவியே அருள்புரிவாயோ

மகாகவி சுப்பரமணிய பாரதியாரின் பிறந்த தினமான இன்று தமிழ் கடவுளாக அவரை வணங்குவோம்

வியாழன், 1 டிசம்பர், 2011

"நாற்திசைத் தேடும் குருவி ....!"

நாற்திசைத் தேடும் குருவி 
உந்தன் கனவென்ன சொல்லேன்
அள்ளிக்கொடுக்க உலகளந்தான்
கள்ளம் விளைத்ததுண்டோ

சோலைத் தேடி எந்தன் சுவாசம்
பச்சை சேலைக் கண்ணுருத்தும் காலம்
கனவாகி தினம் உண்ண மிச்சம்
எச்சம் தந்த வலிகள்

உயர பறக்கிறேன் உடனெழுந்த 
கட்டிட உச்சம் சன்னலோரம் கூடு
சல்லடையாக நிலப்பரப்பு நீள
குற்றம் செய்ததென்னவோ 

குடைந்துருக்க கடைந்தடுக்க 
கார்ப்பசித் தீர்ப்பாயோ நிழல் 
காணும் மானிடா நினைவங்கில்
நிலைத் தொடரா முற்றும்

கலியுகம் :- நான்கு திசைகளிலும் தேடியலையும் குருவியே உன் கனவு என்ன சொல்லேன் கடவுள் அள்ளிக் கொடுக்க அவர் மனதில் கள்ளம் ஏதும் இல்லை சோலைகளைத் தேடுகின்றேன் எந்தன் சுவாசம் முட்ட பச்சை சேலைப்போர்த்திய வயல்கள் கண்ணுக்கு இன்று கனவாகி போகின்றன இயற்க்கை உணவுகளை விளையும் நிலத்திலே சென்று உண்ணும் நாங்கள் இன்று எச்சம் உண்ணும் நிலையில் ...... இன்னும் ஆயிரம் கருத்துக்கள் உள்ளே அடக்கம் 

ஞாயிறு, 20 நவம்பர், 2011

இனிக்கும் நாளென்று...?

அறியாதிருப்ப காரியக் குறையோ
தாயுண்டு தனயனுண்ண மீளுண்ட 
யான் விளைக்க பிழையறிவோர்
பெரியோர் வினை தொடுக்க

உள்ளமர்ந்து பிழையகற்றி அருள்வோனே
திகழுதம் மேனி இகழுதம் உலகே
மகிழுந்தமிழ் இன்னோர் நாவினில்
இனிக்கும் நாளென்று...?

புகுந்தோன் வளம்வர கிடந்தோன் 
மறந்தழ மாறுதென் மாடம் வாசம்
வீச வாசல் வந்தோனைத் தேடும்
பனியமர்ந்து நாடும் 

நல்லோனின் நலமறிய நரனாய்
நாவிரித்த வலையில் நகலும்
அகலும் அறிந்துழா ஆளுஞ்சுனை
நிறைந்திறக்க காணீர்.....

வியாழன், 10 நவம்பர், 2011

தவறென்ன யான் செய்தேன்....?

இமைக் கூடி இயல் தாண்டி 
இணைத் தாவி இதழ்ச் சூடி
இடைச் சாடிய கரந்தழுவ 
மறந்தென்னில் மலர

உனக்குள்ளே உயிர்ப்பித்து 
உருக்கொண்டேன் உடனழிக்க 
தவறென்ன யான் செய்தேன்
உடையவளேக் கூறு

இணங்கி இடமளிக்க நாழிகையும்
இதமளிக்க இன்பத்தின் உச்சத்திலே
உலவுகின்ற நிலவும் உடனிருக்கும் 
கனவுல கல்லவே காட்சி

சாட்சி சொல்வோன் நானென்றே
மனம் சலசலக்க வினவா விளைவித்து 
விளையாட்டாய் காரணித்து வினைத்து 
விடை யளித்ததேனோ..?

திங்கள், 7 நவம்பர், 2011

இணையத்தின் ஓட்டம்....!

தனிமையின் தாகந் தீர்க்கவல்ல
சுவைமிகு மருந்தே பதிவுலகச் சுடரே
தாகம் தனிந்தே வெறுமையின் ஏக்கங்கள்
மறைந்தென்னில் மலரும்


அன்புக் கரங்களின் அரவனைப்பில் அகிலமும்
வளம்வர அரங்கத்தே காணா அவதறிப்பு
அனுதினம் அலைகடலாய் அன்பின் 
ஆர்ப்பரிப்பு என்றும் மாறா


கலங்குவதேன் கண்மணியே காரணத்தே
காலமிகுதியில் சேர்வனச் சீரும் சிறப்பே
நலமிதோ நவிலும் நாவண்ணம் கூற 
குரலினும் அறியாக் குழந்தாய் 
  
மலரினில் தேடும் கலனிலா சூடும்
பகலவன் சாடும் இரவணிக் கூடு 
இமைகளின் நாட்டம் இருதயக் கூட்டம் 
இணையத்தின் ஓட்டம் இனிது 


வெள்ளி, 14 அக்டோபர், 2011

வாழ்த்தி வழி கூறுங்கள் ...!


நினைவுகள் நீந்தி செல்கின்றன கடந்த
காலங்களை நோக்கி வழியெல்லாம்
நில்லாச் சுடராய் தாய்மடி தவழ்ந்து 
தந்தைக் கரம் பற்றிய மழலையாய்   

ஆட்டுவித்தோர் காட்டுவித்த பாதைகளில் 
பயணிக்க கொடுத்தோர் கிடைப்பினில்
நெடுந்தொலைவு கடந்தும் நீளும்
பாதைகள் முற்றமிலா 

கரை யேறுகனம் நழுவ முகமறியா
எனைத் தழுவும் காட்சிகளின் ஆட்சிதனில் 
நிறைந்தோனைத் தொழுது இடைநாளின் 
கடைப்படி மறையுந் தருணம் 

அன்புள்ளங்கள் எம்மைச் சூழ்ந்து வர 
மேற்ப்படியறிய தொடரும் பயணத் துவத்தில்
சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் இச்சிறியவனை
வாழ்த்தி வழி கூறுங்கள் 

திங்கள், 3 அக்டோபர், 2011

"பிறவித் தேடல்"


காலை கனியும் அந்திமக் கதிரில்
மலர்சூடும் மாலை மஞ்சள் வெயில்
வழித்தேடும் விழிதனில் வினவா அழைப்பு
விடையில்லா பிரிவா புரியும்...?

இரவின் உறக்கம் இமைகளோ மறுக்கும்
கனவினில் பறக்கும் மனமெல்லாம் இனிக்கும்
தண்ணீர் தகிக்கும் அடுப்பனல் குளிரும்
தீஞ்சுடர் தாங்கும் கரங்கள்...!

உள்ளில் பிறக்கும் உணர்வில்லா வலிக்கும்
உண்மை புரியா பிரியம் ஈர்க்கும்
பெற்றவர் எதிர்க்க அம்புகள் படரும்
அன்பினில் உணராச் சுருக்கு.

இருமனச் சங்கமம் இறைதனில் வகுத்தது
பிழைதனில் பயணம் ஏன்? பிறவா
பிறவியும் அடங்கும் பயனில்லா பாதைதனில்
ஏற்றாச் சுடரினில் தொடரும் தேடல்.


கலியுகம்: - சமயங்கள் வேலை நேரங்களில் கழிவதால் அன்பர்களுக்காக ஒரு மீள் 

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

மலரிதழ் மனம் எங்கே ...?

நரனின் பாதகை நவிலும் நடை
நாடகந் தாவிய நாரணன் மாயையோ
நின்நிலை நிகழ்வனச் சாடும்
நீதியின் முகம் காணேன்

தகனமிலா தன்னுடல் தாவும்
தானுமிலா தாகம் தயை புரிய
தினமிலா திகைப்பு திரிக்கொண்டெரிய
தீச்சூடி தீயன அழியுமோ

மலரிதழ் மனமெங்கும் மழலையே
மானுடம் வேடமே...! மணந்தெங்கும்
மிகையிலா பகையாள மாண்டன
மீள விலைக் கூறும்.... 

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கீரிய காரிய மறியேன் ....!

சத்திரமோ சிறகணிச் சித்திரமோ
சாந்தமணி சன்னதியில் நாதனின்
சிந்தனைச் சிந்திய காவியமோ கல்லொன்றில்
சீவிய சிற்பமணிக் கூடோ

கருவிழி தொடர நிறந்தனில் விருட்சம்
கானக சுடராய் நாற்ற மத்தியில்
கிருதய பயனாய் நடந்தொரு கூடாய்
கீரிய காரிய மறியேன்



நதியாய் நாணலாய் விண் மதியாய் 
நாளுயர நாவறண்ட நரனாகி
நிறைத் தவழ நினைத் தொழும்
நீரண்ட நீதியின் வடு ......

கவரும் கலையின் கருவே கனலாய்
கானலின் காதலாய் காவலின் காகிதமே
கிளையின் கிடப்பினில் கிளியாய் கிறங்க
கீழலைக் கீதம் மறவே....



அங்கிலா எண்ணம் உடைத்து கண்ணிலா
காரியக் குடுவை மாறிய மடையுடைய
தேடியவன் சாடி வருவ சூடு
மலரிடத்து மனம் தவழும்Edit

வியாழன், 1 செப்டம்பர், 2011

வினைத் தீர்க்கும் நாயகனே...!


வந்தனம் வந்தனம் சாமியோ
வழிதேடி வந்தேன் நான் சாமியோ
வழிகாட்ட ஓடிவந்த சாமியோ
வணங்கி கும்புடுறேன் சாமியோ

பச்சிளம் குழந்தை தான் இன்னமும்
பள்ளிப் பாலகனாய் எண்ணமும்
பகுத்தறிவு புகட்டிவிடு இன்னமும்
பனைப் போல வளர்ந்திடுமே எண்ணமும்

அவல் பொறி கடலை படையலும்
பிடிகொழுக்கட்டை அரைப்படி சுண்டலும் 
ஆணைமுகன் உன்னை வணங்கியே
விளைக்கதிர் தானியப் படையலும்


சன்னதியில் கண்டதில்லை உன்னையும்
ஓர் உருவம் உனக்கில்லை எங்கிலும்
பல உயிரில் கலந்திருக்காய் பல திக்கிலும்
வினைத் தீர்க்கும் நாயகனாய் ... 


அனைவருக்கும் நல்லருள் புரிய வேண்டும் சாமியே .....!

புதன், 24 ஆகஸ்ட், 2011

அன்றிலொடியும் நிழலே ...!


அன்றிலொடியும் நிழலே நின்றிலா
மனமே நிகழு நிலவினில் நீந்தும்
நினைவினி லாளும் சித்திரமே சட்டென
சுட்ட சங்கடச் சூழ்.....
விட்ட மதியில் கூர்விழிப் பதிய
அங்கமதி சங்கமத்தில் சூழ்வதெல்லாம்
நாற்கடந் தூற்றே நடை பழகி
தவழும் இதனச் சூடு
மிதமெனத் தகலும் இரவுத் துகிலும்
இடைதனி விடுப்பும் தகன மடுவென
தகிடுதாம் அரனக மரகன சினமது
விழித்தெழ மருகுதெனிலே
மகிழ்ந்தெழுவட்டில் மிகனுடை மலையே
கரணம் எரிச்சூடி தருனம் விருந்தாகி
அருந்தும் அவைச் சாடிய மருந்தென
தட்டிய மதுவினயக்கம்.....

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

யாரறிவார் ...?


கண்ணே என் கண்மணியே
மழலைப் பேசும் பைங்கிளியே
என்று வருவாய் உந்தன்
தாய் தந்தையின் முகம்காண
இப்பூவுலகில் உந்தன் வரவுக்காக
நாமிருவராக உள்ளோம்
என்று மூவராவோம் சொல்வாயோ
எந்தன் பச்சிளம் கண்றே

ஊரார் பேசக் கண்டேன்
ஆணாக பிறப்பாயோ
பெண்ணாக பிறப்பாயோ - என
யாரறிவார் அவர் தம் பிறப்பை
தாய்மையின் கருவறையில்
உதிக்கும் ஒவ்வொரு
மழலையும் பெண்ணாகவே
முதல் உரு எடுக்குமென்று
யாரறிவார் ஆணும் பெண்தான்
நமை ஆள்பவனும் பெண்தான்....

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

அந்தரத்தோணியில்.....!


காணா கருவிழியானோ தானே நகலுருவோனோ
சாரம் சலங்கையின் சகனெனும் நகமரியோனே
தாகத் தரணியில் வேகத் தடையெனும்
நாத நடனுருவே சரணம்..

சுயமெனுமுகமெரி சுகமெனுமுகமறி
பிறவணி சூடும் மகத்துவ மாலை
சரீரக் கூடு சமைத்துடன் கோரு
சகதிகளற்ற சாதகமாகு..

சங்கதிக்கேளேன் சரீரமானேன்
சகலமும் இழக்க சடலமுமானேன்
அகிலமும் விரட்ட அந்தரத்தோணியில்
நர்தனமாடிய நான் யார் .....?

புதன், 17 ஆகஸ்ட், 2011

விளையாடலாம் வாங்க.....


வட்டமிட்டு கொட்டு கொட்டி கூடி
விளையடிய காலம் எங்கே கண்
முன்னே நிழலாடுதிங்கே தனித்த
பறவையாய் தகித்த உள்ளங்கள்
கணினி கூடுக்குள்ளே முகமறியா
நட்புக்கள் வட்டம் சூழ கருவாகி
உருவாகி உயிர் பெற்று இன்று
உலகத் தமிழர் முன்னே
தவழுதிங்கே தங்கள் மதியை
தட்டி தரம்பார்க்கும் தங்கமெனில்
தகுந்த தன்னடக்க வெகுமதியளிக்கும் .......

புதிர் போட்டித் தளம் உருவாக பாடுபட்ட அனைத்து டெரர்களுக்கும் இனிய வணக்கத்துடன் கூடிய நல்வாழ்த்துக்கள் ......

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஆட்கொள்ளேன்....!


வலிகள் ஆழமாய் ஊடுருவிச் செல்ல
உணர்வுகள் நங்கூரமிட்டு நரகமெனும்
நகரொன்ரை காண்பிக்கிறது துயரெனும்
துகிலுரிப்பாயோ உள்ளில் ....

கண்டுகொள்ளா கள்ளனின் பார்வையிலே
பாவை மயிலே மெல்லென நடைப்பழகி
சொல்லெனும் சாரம் தாழ்த்தி வில்லினின்
அம்பாகி ஆட்கொள்ளேன் அடியவளே .......

நிறைந்தென்னில் நிலைக்கொண்டாய்
வளைந்தென்னில் மலர்ச்சூடி மனம்கொண்டு
குணம் வென்று அகம் கொன்று - நில்லா
ஓட்டத்தில் தவழும் மனமே ....

தொங்குவார் சடலத்தே மங்குவார் வயதணியோர்
வாரனின் மாயமெனில் தங்குதாம் இலைதனில்
மறுவுரும் சாடையாய் மனமதில் சோலையாய்
கருவுறும் காண விழைவு

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

நடமாடும் பிணம் நாமடா .....! மீண்டுவரும் வதம் ....!



நாடோடி வாழ்க்கை தானடா..!
நடமாடும் பிணம் நாமடா..!
நயவஞ்சகம் நம்மில் ஏனடா..?
நடைபாதை வஞ்சம் தீர்த்தால்
நமக்கு பாதை ஏதடா..?

பனைபோல வளர்ந்திருக்கும்
பாதை மறிக்கும் பேராசை ஏனடா..?
பணம் பறித்து பழிசுமந்து
பகையாலும் உள்ளம் கொண்டு
பாசமில்லா வேஷம் ஏனடா..?

மலர் கூட சிரிக்குதடா..!
மதிகெட்டு மானம் விற்று
மாயையான வாழ்வை விட்டு
மரணித்து கிடக்கையிலே
மலர் கைகொட்டி சிரிக்குதடா..!

தனையாலும் எண்ணம் நம்மில்
தரங்கெட்டு தடுமாறி போகுதடா..!
தடை விதித்தால் நலமுண்டு
தகரம் கூட தங்கம் தானடா..!
தட்டி தரம் பிரித்தால் - நம்மில்
தங்க குணம் ஏதடா..?

குரல் கொடுத்தும் திருந்தவில்லை
குணம் மாற குறையுமில்லை
குறிபார்த்து நோட்டமிட்டு
குழி பறிக்கும் வேலை ஏனடா..?
குள்ள நரி நம்மில் தோற்குமோ..?

கள்ளனுக்கும் மனமுண்டு
கரைதெரிந்தால் குணம்பெறுவான்
கண்ணீரும் வருவதில்லை
கரை ஏனோ தெரிவதில்லை
காட்டாற்று வெள்ளம்போல - பலர்
கண்ணீரில் உயிர் வாழும்
கலங்கமுற்ற வாழ்க்கை ஏனடா..?

கலியுகம் : தனிபட்ட நபர்களை பற்றிய வரிகள் அல்ல நம்முடைய அரசியல் சாக்கடை வாசிகளை பற்றியது பதிவு பிடித்திருந்தால் வாக்களித்து ஆதரவு கொடுங்கள் நண்பர்களே ... கலியுக வதம் தொடரட்டும்

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

பெண்ணவள்....!


பெண்ணவள் பேறுபெற்றவள்
கண்ணவள் காணும் உலகினில்
பெற்றவர் கரம்தனில் முத்துச்
சிலையால் பவழ விழியால்
தாய்மடி புரண்டு தாய்ப்பால்
அருந்தி தவழும் வயதினிலே
மெல்லச் சிரிப்பால் அழகணியாள்

சொல்லத் தொடுப்பாள் சித்திரம்
போலே எண்ணி நடப்பாள்
பள்ளிச் செல்லும் காலமிதோ
அன்னியர் கண்டு வியப்பால்
காலமேந்தி கட்டுழலும் சூழ்ச்சி
பட்டுவண்ணம் பட்டெழும்
சுற்றமறியா புன்னகைப் பூ

சூழல் அறிவாள் எத்துணை
எமைக்காக்க அத்துணை
கரம் நழுவ கண்ணாளன்
கரம் தழுவ இத்துணை
நீளும் எங்கும் சுற்றும்
புதியவர் கற்றும் அறிந்திலார்
அன்பும் பண்பும் அவைகாக்க

சூழ்நிலை மாற சூழ்ட்சிகளோ
ஆள பெற்றுயிர் ஏந்தும்
காட்சிகள் மாற மாசிலா
மரிகொழுந்தாய் மகவை காண
படியேறி பட்டதெல்லாம்
பரண் மேலே பொட்டலமாய்

போர்களம் மறைய பொற்காலம்
துவங்க அன்னையாகிறாள்
மழலையின் மொழிகேட்டு ......

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

காணுலகு கயலுருவே ...!


ஏனோ என்னில் எண்ணி விதையுண்டாய்
காணுலகு கயலுருவே கரந்தன்னில்
நீயுருக மாறுமெனில் நானிரக நலம்
கொண்ட மாய வலை

சாதகரும் வேதகரும் நினைத்துன்னை
நிலைக்கொல்லா தவமிருக்க நவமாடி
நலைத்தேடி வயம்பாடி அலைபோலே
அகத்துள்ளே ஆழ்ந்துள்ளேன்

வான் நிலவே நன்னில மானினமே
நினைக் காண ஏனோ என்னிலேதோ
மறித்து மயங்குவதன்ரே நாளும்
நகையாடி நலம் கொள்ளேன்

நிலமொன்னில் களம் என்னில்
விளையுண்ட விதைக் காணீரோ
விலைக்கொண்டு நலம் காணீரேன்
விளைக்கண்ட விதியவனின்

மதியவனின் மயக்கமென்றோ
சதியவனின் சங்கமத்தில் சரி
நிவார அனல்காணும் நல்லேந்திய
சகநரக வாழினி வேனோ ............

சனி, 23 ஜூலை, 2011

சல்லடைக் களம்....!


சத்திரமே சன்னதி சம்மதமே சங்கதி
சுட்டிருக்கும் சுடலையில் பட்டிருக்கும்
வயலையின் வக்ர சப்த சுத்தம்
சுடர்விட படரா முல்லை

என்னுருவே கண்ணில் மெய்படவே
கந்தருள் காரியம் தேடி என்தனில்
மாறுடம் வேண்டி தானுடல் மாயை
மாலைச் சூடும் மனமே

புத்தன் புதிதென்பார் சப்தம்
சதி என்பார் மொத்தம் முதல்
என்பார் சல்லடை களமென்பார்
சரீர சன்னதி சுகமாமே ......

ஞாயிறு, 17 ஜூலை, 2011

கரும்பாக இனிக்குதையா ....



தெற்கே கெடிலம் நதி ஆடிவர
வடக்கே தென்பெண்ணை பாடிவர
கரும்பாக இனிக்குதையா எந்தன்
தாய் மண்ணின் நினைவலைகள்

ஊரை சுற்றி சுற்றி வீற்றிருக்கார்
அம்மை அப்பன் காட்சியாக - சாட்சி
கைலாசநாதரும் பூலோகநாதரும்
திருகண்டேஸ்வரருமாக மத்தியிலே

அவரைப்பற்றிச் சொல்லனும்னா
அறிந்தவை சில அறியாத பொக்கிஷங்கள்
பல உண்டு அவர் திருநாமம்
உச்சரிக்க பலனுண்டு
திருமாணிக்குழி ஆலயம்

கரும்புக்கு பேர்ச்சொல்லும் சக்கரையாய்
நாவினிக்கும் நெல்லிக்குப்பம் தானுங்க
கிழக்கால கடலூரு மேற்கால பண்ரூட்டி
பலாப்பழம் தானுங்க

தாமஸ் பாரிக் கட்டிவச்சான்
கிழக்கிந்திய சாராய வடிப்பகம்
பல்லாயிரம் உசுருக்கு வாழ்வளிக்கு
நானும் பிழைத்தவன் தான்

சாதிச்சண்ட பலவுண்டு சங்கதியெல்லாம்
நடந்திருக்கு சப்தமில்லா ஊருமது
இப்போ சண்டையில்லாம அடங்கிருக்கு
ஊரு சனம் திருந்திருக்கு

பால்யத்து இனிமைகள் கண் முன்னே
ஆறேழு நண்பர்கள் கூடி ஆங்காங்கே
அலைந்ததென்ன வயக்காட்டில் ஓடியாடி
விளையாண்ட காலமது

விடியும்வரை கூத்துபார்த்து பாட்டி
மடியில் உறங்கியக் காலம் கேளா
கிடைத்த சுகம் இனி கிட்டுமோ
இங்கே அயல் நாட்டினிலே

கலியுகம் : அண்ணன் மனசு சே.குமார் அவர்களின் அழைப்பை ஏற்று தொடர் பதிவாக எங்கள் ஊரின் வாசம் ..... அடுத்ததாக நம்ம கவுண்டர் பன்னிக்குட்டி ராமசாமி அவர்களை அழைக்கிறேன் இப்பதிவை தொடர ....

சனி, 16 ஜூலை, 2011

அவன் பிடித் தவழ்ந்திரு...........


எண்ணங்களில்லா வண்ணங்கள் கொட்டும்
கண்னங்கள் சிவக்க கரைந்தோடும் எனது
நின்னிலா இம்மண்ணிலா வன்னருக்க
பிழைத்திரு பகைத்திரு

பால்யத்து விதையுண்டு கனத்திரு
காலனை மிதியமர்த்தி மதியமர்ந்து
வீருகொல்லடா மாசில்லா மருக்கொழுந்தே
மாற்றமெனும் வீ(வி)தி சமை

அதோ வர்றான் இங்கே வர்றான்
அஞ்சாத அரக்கன் கண்ணயரும் நாழிகைதான்
கண்ணே கரையமர்த்தேன் காராணம்
கேளாய் மறையமர்த்தி

மாற்றுரு வேந்தே கரம் நழுவ
காத்திரா கடல் நடுவே வீற்றிரு
ஹரி என்பான் அவனிக்காப்பான்
அவன் பிடித் தவழ்ந்திரு

அலைகடலாய் வாரியுன்னை
வழியமர்த்தி பிழைதிருத்தும்
பிதாவானவன் எண்ணமெலாம்
உன் நினைவே மறை

திங்கள், 27 ஜூன், 2011

எங்கே நீ?...எங்கே நீ?...


எங்கும் நிலவுவதில்லை,- நீ
ஏன் இங்கு உலவுவதுமில்லை..?
காலத்தின் வேகத்தில்
உன்னை மறந்தாயோ..?
கலங்கும் கண்ணினுள்
கருவிழியும் தேடிட...!
எங்கு போனாயோ..?
என்ன ஆனாயோ...?
உண்மை அறிந்தாயோ...?!

உன்னை தேடும் பாதையில்
பாதகங்கள் ஏராளமாய்...
விருட்சமாகி உள்ளன.
யார் வளர்த்ததோ..? நிழலில்லாத
விருட்சமாய் விண்ணையும்
தொடும் போல வியக்கிறேன்..!!
பாதைகள் மாறியே பலதூரம்
பயணித்தும் உன்னையறியாமல்...

என்னை மறந்து மரணிக்கிறேன்..
நெடுந்தூர பயணத்தின் முடிவில்...!
அமைதியில்லா விடியலில்
அடங்கிப்போன சரிரத்தில்
அமைதியாக பிரியும்
உயிர் மட்டுமே அறியும் போல...!
அமைதியின் விடியலை.

ஞாயிறு, 26 ஜூன், 2011

கவிச்சோலை கவிதைப்போட்டி



நண்பர் எல் . கே அவர்கள் கவிச்சோலையில் முத்தொள்ளாயிரம் சங்கப் பாடல் வரிகளுக்கு புதுக்கவிதை எழுத விடுத்த போட்டி அழைப்பை ஏற்று அடியேனின் வரிகளும் அவையில் பங்கேற்று எமக்கு பெரும் மகிழ்சியை அள்ளிக்கொடுத்துள்ளன

முத்தொள்ளாயிரம் பாடல்
வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை.

இவை அடியேனின் வரிகள்
வீரம் நிறைந்திட்ட போர்ப்படை வீழ்ச்சிகளற்று
தேர்ச்சிகள் பெற்றோன் வீழ்வதாமெதிர்
படைகளன்ரென எண்ணமது கொண்ட
வெண்குடை தாங்கிய தேர்தனைக் கண்டதும்
நிகழ்தனில் அத்தேர்தனை
தரைத்தாழவீழ்த்தி வெண்குடைதனை
பற்றிதம் கால்களால் மிதித்தழித்து
வெற்றிவீருகொண்டு பிளிறும் யானை
தன்னவனைக் காக்கும் எண்ணமத்தில்
சித்திரை முழுநிலவுக் கொண்ட
தோற்றம் கண்டு வெண்குடை தாங்கியொரு
போர்ப் படை வருவதென எண்ணி
வெண்ணிலவை வீழ்த்த வானுயர
துதிக்கையை உயர்த்தி வீருகொண்டதொரு
சேர மன்னனின் யானை ............

விளக்கம்
தங்களை பெரும் வீரம் நிறைந்த மன்னர்கள் என நினைத்து சேரமன்னனை எதிர்த்து வந்த மன்னர்களின் தேரைக் கண்டதும், சேர மன்னனின் யானைகளானது அத்தேரினை அழித்து, அத்தேர்மேல் வீற்றிருக்கும் வெண்குடையை தன் காலால் மிதித்து அழித்து விடும் தன்மை கொண்டது. அத்தகைய யானைப்படையைக் கொண்ட சேரனின் யானையானது வெண்குடையைப் பார்த்ததும் அழிக்க நினைக்கும் பழக்க தோஷத்தால் முழுநிலவன்று நிலவைப் பார்த்ததும், நம் சேரனை எதிர்க்க ஏதோ எதிரிப்படைதான் வந்து விட்டது என நினைத்து அந்நிலவை அழிப்பதற்காய் நிலவை பிடிக்க தன் துதிக்கையை நீட்டுகிறது என்பதாம் இச்செய்யுளின் பொருள்.

வியாழன், 23 ஜூன், 2011

கண்ணிருண்டு கனவுகண்டேன் ....


கண்ணிருண்டு கனவுகண்டேன்
செவி யுணரா ஓசைக்கேட்டேன்
பழியுனர்த்தும் பாஷாணம் கொண்டு
பரியமர்ந்து வாரான் கண்ணே

பட்ட விதை துளிர்க்க எண்ணி
பாதை மாறும் பச்சிளம் கன்று
சட்டை பையில் சாட்சிக் கொன்று
விசிறி நடக்கு விதியாமிங்கு

மதியுண்டோன் வினைத்து விற்க்க
பழியெல்லாம் விதியின் படியில்
சுண்ணாம்பு சேருமிடம் சாருண்ட
மாருமிடம் எவரறியோம் ...

வெள்ளி, 17 ஜூன், 2011

மா மாயை ....!




நாழிகைகள் நரகத்துள் பயணிக்க
தாண்டவமாடும் தேகமது தகனமாகி
நாற்றிசையும் சுட்டெரிக்கும் வட்டறியா
மரணமடி வினவுதங்கே...?

கள்ளுண்டு கலனும் தளும்ப நீருண்ட
நாருமது மாற்றமிலா வேருமது
சுருண்டு கடையேனும் நர்த்தனமிலா
அர்த்த சண்டன கண்டம்

தீருமது வேள்வியிலா சாரமதில்
நீலகண்ட நிலைக்கள்ளான் நினைவுறுத்தி
நாளுமது நகையாலும் சூலத்தின் சூழ்ச்சி
கண்டான் நாவாலும் சிறக்க

சித்தமங்கே சரித்து வாரோன்
ஏற்றமெல்லா சமர்த்துவானேன்
சித்திரம் கண்டதோர் கானகம்
மீண்டுயிர்த்து செழிக்கும்.

சனி, 11 ஜூன், 2011

மனம் மலரிலடங்கி மாயாதோ...!


பாதை வழிகளின் கூடே வலிகளின்
சங்கமம் இடைவிடா தாக்கம் ஏக்கமாய்
இருளியதோ என்னில் ஏனோ மாற்றம்
இருப்பிலடங்கா நெருப்பாய் தகிப்பு

அனுதினமும் அலைகடலில் ஆழ்ந்து
மடிகின்ற ஆயிரம் கனவுகள் எங்கோ
நினைவுகள் படை சூழ போர்களம்
காணும் புரியா புதிராய்

மனம் மலரிலடங்கி மாயாதோ
மண் சுமக்க மடியேந்தும் சுயம்
கண்டிராத ரணம் கோர்வையாகி - உடல்
சுற்றும் போர்வையானதேன்

நன்னின் யாதோ அகமலர்ச் சூடின்
சுகமலர் பிரிந்தே இணைவை நாடி
மாயை மிரட்டும் காரண விருட்சம்
கரை சேர்க்குமோ என்னில் ....!

கனவுகள் கூடி......


அந்திமத் தென்றலோடு
ஆத்தங்கரை அமைதியில்
உடனுடை குடியேறி
என்னுள் கலந்தவளே
நின் அழகை ரசிக்க
நாணத்தால் மேகத்துள்
மறைவதென்ன வெண்ணிலவே......

நடைபோடும் மனமே நாணக்
கோலமிடும் பாதவிரலே
பனித்தூவும் இரவில் உடன்
விழித்திருக்கும் நிலவே
அன்ன விழி பேசும்
வியப்பில் விடியல் காண
மறுக்குதம்மா கனவுகள் கூடி.......

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி