இடையிடையே மெல்லும் வார்த்தைகள்
தவறுதென் வழிகளிலே தடையுடைய
தவமெதற்க்கு ஆயுத்தப்படுத்து அகமுள்ள
அறியதோர் உந்தன் கூர்வாளை
தினமறிவேன் திசைத்தவறேன் திருத்தங்கள்
திருந்த பயணிக்கையில் விருட்சங்கள்
நிழல்தர மறுப்பதென்ன நினைத் தொடர
நிலைப்பதென் தனிமையே
தலையாட தன்னோடே அசைப்போடும்
அகிலமெலாம் அரை நொடியில்
சுற்றிவரும் சிந்தனையின் ஆற்றல்
எவர்த்தருவார் இங்கு
இன்னும் புதைக்கிறாய் ஏனோ வதைகிறாய்
ஆழ்வதும் தாழ்வதும் தானே உந்தன்
தனித்துவமென்றால் யார் உனைத்தாங்க
பாரினில் வேந்தனாய் பயணப்படு ...!