வியாழன், 8 டிசம்பர், 2022

எந்திரம் மந்திரம்


தன்னை அறிந்தவர் தானுல ராகின்
முன்னை வினையோட முந்துவ ராகின்
தின்னம் உறங்கிய தீர்த்தமெய் யாகின்
எண்ண மரு(று)(த்)ந்தது ஏத்துவச் சீராய் (1)

சிந்தை நுழைந்தெந்தன் சித்தம் கலந்தாய் 
விந்தை இதுவென்றாய் வின்னைத் தொடவே
கந்தைக் களைந்தெந்தன் கர்வம் உணர்ந்தேன் 
தந்தை தயையென்றே தங்கத் திளைத்தேன் (2)

சித்தம் வைத்தாய்ச் சிந்தைச் சிதறிட
சுத்தம் மொய்த்தேன் சூடித் திறிந்திட
மொத்தம் தைத்தாய் மூடித் திறந்திட
தத்தம் மெய்த்தேன் தாகம் பருகிடேன் (3)

நினைத்து விட்டேன் உன்னை உரிமையுடன் 
நனைத்து விட்டாய் தன்னை உடையவனே 
வினைத்து விட்டாய் பக்தி பழமெனவே 
அணைத்து கொண்டாய் அண்ணா மலையழகா (4)


அடிமுடித் தேடிட அகப்படாது அறியார்
பிடிபடக் கூட்டினில் பிழைத்தவரும் உணரார்
அடிபட ஆட்கொள அழைத்திடவே வருவார்
அடிமுடிக் கொண்டோனே அகிலமெலாம் அடியார் (5)

கருத்துகள் இல்லை:

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி