திங்கள், 2 அக்டோபர், 2017

இன்று பொருந்துமென ...!

இன்று பொருந்துமென இருந்தாரில்லை 
இன்னல் திரியுமென வளர்த்தாரெல்லை 
அன்று மருந்துமென அருந்தாரில்லை 
அன்னம் அரியுமெனக் கிடந்தாரில்லை 
நின்று நடந்தன விளைத்தாரெல்லை 
நித்தம் கடந்துயர் உடைத்தாரெல்லை 
ஒன்றை உணர்ந்திட அடைந்தாருள்ளே 
ஒன்றாய் உரைந்திட அடைந்தாரெல்லை



திங்கள், 6 பிப்ரவரி, 2017

4.மாய மனதில் துளிர்த்தவை...!

மக்களைக் காக்கும் மாரி மகமாயி 
மன்னவன் கோலை மாற்றும் மயமாக 
சிக்கலைத் தீர்ப்பாய்த் தாயே தயவே;நீ 
சித்திரம் கொண்ட சீற்றம் உனதாக 
சுக்கிலாத் தூளாய்த் தூற்றுத் துவண்டோடும் 
சுந்தரம் மீண்டுத் தோன்றும் அரும்பாக
வக்கிரப் பேயை மாய்த்து மழையாகு
வந்தெமைக் காக்கும் தாயே மகமாயி

காலம் கனிவதிலே கோணங்கள்
கானல் எனப்பதியக் கூறுங்கள்
கோலம் எனத்தணியாக் கோளத்தில்
கோழை எனப்பனிந்தான் கூடத்தில்
வேலன் கனவுகண்ட வேடங்கள் 
வேளை வரமுயன்றும் தேக்கத்தில்
பாலம் படகிலென்றான் ஞானத்தால்
பாராய்ப் பழகுமென்றான் ஞாயத்துள்

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

3.மாய மனதில் துளிர்த்தவை...!

வெந்துதான் தணிந்ததெங்கும் கூடு 
வித்தகன் அணிந்ததவுருச் சாம்பல் 
பந்துதான் பணிந்துவிடும் என்றால் 
பந்தமும் துறந்ததிந்தக் கூட்டை 
சுந்தரம் சுகமருந்தாய்த் தோற்றம்
சுக்குதான் தவமிருந்தோ தேற்ற
விந்தைகள் தயவறிந்தக் கூற்றால்
விஞ்சுதல் பதுமைகளாய்த் தோன்றும்

சனி, 4 பிப்ரவரி, 2017

2.மாய மனதில் துளிர்த்தவை...!

1.நரசிம்ம அரிதாரம் பூச்சிட்டு 
நடக்கட்டும் அவதாரம் ஒன்றென்றே
அரியெண்ணப் பரிகாரம் தந்தாலும் 
அவனுண்ண பலகாரம் தந்தாயே
வரமொன்றும் கொடுப்பானோ என்றாடி
வயலெங்கும் பெருங்காற்று வீசிற்றோ
தரமென்றுத் தரவாகத் தங்கிற்று
தயவென்றுத் தலைதூக்கி வைத்தாடு

2.களவற்ற கண்ணே மணியே 
....குணமுற்றத் தன்னா லறிவாய் 
இளங்கன்றே இன்னார் இதயம் 
....இரும்பென்றக் கொள்கை மாற்று 
களத்தமேடுக் கழனி வாழ்வை 
....வருங்காலம் ஏற்க உணர்த்து 
கருத்துவிரை யும்பா ராது 
....பயங்களைந்து ஏறாய்க் கொழுந்தே ...

3.கற்றறிந்தோர்ச் சிந்தனையில் உதியும் கவியே 
பாக்கியமுண்டாகும் அவர்க்கு வழிபோன என்னை 
நிறுத்திஉள் புகுந்ததேனோ அறியேன் அறியேனே 
உன்னை அறிவார் உள்புகும் அன்னமே 
விட்டுசென்றாலும் தொட்டெனைத் தொடராய் 
தோல்வி யெனதில்லை தோற்றம் கொடுத்தேன் 
கல்லேன் கல்லேன் என்றல்லக் கல்லுவதென்று 
காயாகிப் பழமாகும் கோலம் உகந்ததே நான் 
கல்லாது கடந்துவிட்டேன் கொல்லாது கொள்ளும் 
தாயே என் தமிழன்னாய் நீயே பதில் கூறு ....
Image result for சிந்தனை

வியாழன், 2 பிப்ரவரி, 2017

1. மாய மனதில் துளிர்த்தவை ...!

1. குதிரை ஏறியே குற்றம் 
குரவை ஆடிடும் மேடை 
சதியை ஆற்றிய ஒற்றன் 
சரணம் பாடிடும் மேடை 
உதிரம் ஓடிட மொத்தம் 
உணர்வைத் தூண்டிடும் மேடை
கதியைத் தேடியே சுற்றும்
கவனம் ஆண்டவன் மேடை....

2.உற்றவை ஏற்றுச் செல்ல 
உருத்துதாம் ஊராய்க் கொள்ளார்க்கு 
அற்றவை நேற்றில் கொண்டு 
அளந்திடும் கூற்றில் சோறாக்கும் 
கற்றவர் பூண்டக் கார்யம் 
கவர்ந்திடக் கோர்க்கும் போர்வைக்குள்
பற்றவை தோற்றம் தீயாய்
பறந்தது போற்றும் கோணத்தால்



3.கயிலை நாதனே காளை வீரனே 
கானல் போக்கியக் காலச் சூரனே 
மயிலை வீற்றிர நாளும் தேடினோம் 
மாலைச் சூடிட மாற்றம் வேண்டினோம் 
பயிலும் மாணவர் பாலர்த் தானவர் 
பாலம் போடவே பாதை நாடினோம்
ஒயிலாய் நின்றொரு காட்சித் தந்திட
ஒன்றாய்க் கூடிய தேரில் சாட்சியாய் ..

4.நிரந்தரமே தலைமுறைக்குத் தீர்வு 
நிழலெனவா நடைமுறைக்குச் சோறு 
அறிந்திடடா அவலநிலை ஆட்சி 
அமைந்ததுவே அகிலமெல்லாம் சாட்சி 
புரிதலில்லா அமைச்சரவைக் கூட்டம் 
புதுயுகமாய்ப் பிறக்கவிடா ஆட்டம்
நரியெனவே நடந்துகொள்ளும் காட்சி
நடந்தவையோ நடிகனெனும் சூழ்ச்சி

5.ஆதிசிவன் காளையுடன் வந்துவிட்டான் தமிழனென்றே...! 
அம்மையப்பன் ஆகநம்மை ஆளுகின்றான் தமிழனென்றே...! 
சாதிகளை விட்டெழுந்த வேள்வியிலே தமிழனென்றே...!
சாதகமாய் மாமருந்தைச் சாரமிட்டான் தமிழனென்றே...!
நீதிமுறைத் தாண்டவத்தில் மீளுகின்றான் தமிழனென்றே...!
நீண்டவொரு போர்படையை மீட்டுவிட்டான் தமிழனென்றே...!
பாதியிடம் பார்வதிக்கே பங்களித்தான் தமிழனென்றே...!
பாதையினைச் சீர்படுத்த சீடனுருத் தமிழனென்றே...!

சனி, 14 ஜனவரி, 2017

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்...

தாயாகித் தகப்பனாகித் தானுமானச் சேயுமாகி
தான்தோன்றித் தவக்கடலே இன்னார்க்கும் இல்லார்க்கும்
ஆயாது அருள்புரியும் ஆகாயம் மீதமர்ந்த
ஆதார அலையான ஆதிக்க ஆழ்மனமே
தீயான சுடர்தங்கி நீங்காத தீர்வாகி
திண்டாடும் அழைப்பினிலே சீரான வான்ஒளியே
தேயாத அணுவாகிச் சேதாரம் சேர்த்துண்ட
சீவனே;ஓம் நமசிவாய நாதனருள் போற்றிபோற்றி...

அனைவருக்கும் இனிய

தைத் திங்கள் ...!
தைப் பொங்கல்...!
தைத் திருநாள் ...!
உழவர்த் திருநாள் ...!
தமிழர் திருநாள் ...! வாழ்த்துகள் ...!


நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி