செவ்வாய், 20 செப்டம்பர், 2011

மலரிதழ் மனம் எங்கே ...?

நரனின் பாதகை நவிலும் நடை
நாடகந் தாவிய நாரணன் மாயையோ
நின்நிலை நிகழ்வனச் சாடும்
நீதியின் முகம் காணேன்

தகனமிலா தன்னுடல் தாவும்
தானுமிலா தாகம் தயை புரிய
தினமிலா திகைப்பு திரிக்கொண்டெரிய
தீச்சூடி தீயன அழியுமோ

மலரிதழ் மனமெங்கும் மழலையே
மானுடம் வேடமே...! மணந்தெங்கும்
மிகையிலா பகையாள மாண்டன
மீள விலைக் கூறும்.... 

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கீரிய காரிய மறியேன் ....!

சத்திரமோ சிறகணிச் சித்திரமோ
சாந்தமணி சன்னதியில் நாதனின்
சிந்தனைச் சிந்திய காவியமோ கல்லொன்றில்
சீவிய சிற்பமணிக் கூடோ

கருவிழி தொடர நிறந்தனில் விருட்சம்
கானக சுடராய் நாற்ற மத்தியில்
கிருதய பயனாய் நடந்தொரு கூடாய்
கீரிய காரிய மறியேன்



நதியாய் நாணலாய் விண் மதியாய் 
நாளுயர நாவறண்ட நரனாகி
நிறைத் தவழ நினைத் தொழும்
நீரண்ட நீதியின் வடு ......

கவரும் கலையின் கருவே கனலாய்
கானலின் காதலாய் காவலின் காகிதமே
கிளையின் கிடப்பினில் கிளியாய் கிறங்க
கீழலைக் கீதம் மறவே....



அங்கிலா எண்ணம் உடைத்து கண்ணிலா
காரியக் குடுவை மாறிய மடையுடைய
தேடியவன் சாடி வருவ சூடு
மலரிடத்து மனம் தவழும்Edit

வியாழன், 1 செப்டம்பர், 2011

வினைத் தீர்க்கும் நாயகனே...!


வந்தனம் வந்தனம் சாமியோ
வழிதேடி வந்தேன் நான் சாமியோ
வழிகாட்ட ஓடிவந்த சாமியோ
வணங்கி கும்புடுறேன் சாமியோ

பச்சிளம் குழந்தை தான் இன்னமும்
பள்ளிப் பாலகனாய் எண்ணமும்
பகுத்தறிவு புகட்டிவிடு இன்னமும்
பனைப் போல வளர்ந்திடுமே எண்ணமும்

அவல் பொறி கடலை படையலும்
பிடிகொழுக்கட்டை அரைப்படி சுண்டலும் 
ஆணைமுகன் உன்னை வணங்கியே
விளைக்கதிர் தானியப் படையலும்


சன்னதியில் கண்டதில்லை உன்னையும்
ஓர் உருவம் உனக்கில்லை எங்கிலும்
பல உயிரில் கலந்திருக்காய் பல திக்கிலும்
வினைத் தீர்க்கும் நாயகனாய் ... 


அனைவருக்கும் நல்லருள் புரிய வேண்டும் சாமியே .....!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி