நினைவுகள் நீந்தி செல்கின்றன கடந்த
காலங்களை நோக்கி வழியெல்லாம்
நில்லாச் சுடராய் தாய்மடி தவழ்ந்து
தந்தைக் கரம் பற்றிய மழலையாய்
ஆட்டுவித்தோர் காட்டுவித்த பாதைகளில்
பயணிக்க கொடுத்தோர் கிடைப்பினில்
நெடுந்தொலைவு கடந்தும் நீளும்
பாதைகள் முற்றமிலா
கரை யேறுகனம் நழுவ முகமறியா
எனைத் தழுவும் காட்சிகளின் ஆட்சிதனில்
நிறைந்தோனைத் தொழுது இடைநாளின்
கடைப்படி மறையுந் தருணம்
அன்புள்ளங்கள் எம்மைச் சூழ்ந்து வர
மேற்ப்படியறிய தொடரும் பயணத் துவத்தில்
சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் இச்சிறியவனை
வாழ்த்தி வழி கூறுங்கள்