தவழுதென் மனம் தாய்மையேந்தி
தத்தித் தவழ்ந்து மழலை பேசி
மழைச்சாரல் காற்றுடன் நீர்த்து
பொங்குதென் உள்ளம்
சொல்லிடர் சுருக்கங்கள் நீங்கி
மெல்லிய தாகம் என்னுள் சூழ
அகத்தே நீ உதைக்க புறத்தேக்
காணாத பேரின்ப வரம்
கனவாகி உள்ளில் கருவாகி உன்னில்
உருக்கொண்டேன் தாயே யான்
உலகறிய சுகமான சுமையாய்
நாற்பது வார தவத்தில்
எனை மீட்டெடுத்த தெய்வமே
ஆரத்தழுவி எம்மை அள்ளிக்கொள்
அகம் காத்து புறம் வெல்லப்
புயலாய் மாற்று என்னை