வெள்ளி, 7 ஜனவரி, 2011

எங்கே நீ ?


எங்கும் நிலவுவதில்லை,- நீ
ஏன் இங்கு உலவுவதுமில்லை..?
காலத்தின் வேகத்தில்
உன்னை மறந்தாயோ..?
கலங்கும் கண்ணினுள்
கருவிழியும் தேடிட...!
எங்கு போனாயோ..?
என்ன ஆனாயோ...?
உண்மை அறிந்தாயோ...?!

உன்னை தேடும் பாதையில்
பாதகங்கள் ஏராளமாய்...
விருட்சமாகி உள்ளன.
யார் வளர்த்ததோ..? நிழலில்லாத
விருட்சமாய் விண்ணையும்
தொடும் போல வியக்கிறேன்..!!
பாதைகள் மாறியே பலதூரம்
பயணித்தும் உன்னையறியாமல்...

என்னை மறந்து மரணிக்கிறேன்..
நெடுந்தூர பயணத்தின் முடிவில்...!
அமைதியில்லா விடியலில்
அடங்கிப்போன சரிரத்தில்
அமைதியாக பிரியும்
உயிர் மட்டுமே அறியும் போல...!
அமைதியின் விடியலை.

17 கருத்துகள்:

Chitra சொன்னது…

அடங்கிப்போன சரிரத்தில்
அமைதியாக பிரியும்
உயிர் மட்டுமே அறியும் போல...!
அமைதியின் விடியலை.


.....ஆழமான அர்த்தங்களை, உங்கள் கவிதையில் காண முடிகிறது. அருமை.

arasan சொன்னது…

சார் மிக அருமையா இருக்குங்க ...
தொடர்ந்து கலக்குங்க ...

Ram சொன்னது…

கவித கவித...

Meena சொன்னது…

உடல் இருக்கும் போதே தேடி முடிக்கும் குழு ஒன்றை ஆரம்பிப்போமா?

தினேஷ்குமார் சொன்னது…

Meena said...
உடல் இருக்கும் போதே தேடி முடிக்கும் குழு ஒன்றை ஆரம்பிப்போமா?

நீங்களே சொல்லுங்கள் தோழி உடல் இருக்கும் போது எவ்வுடல் அமைதியை அடைகிறது? அவ்வுடல் எது?

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமை.

சிவகுமாரன் சொன்னது…

நிறைய யோசிக்க வைக்கிறது கவிதை.
அருமை கவிதையும் படமும்

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையா இருக்குங்க.

Philosophy Prabhakaran சொன்னது…

மறுபடியும் போட்டோ மாத்திட்டீங்க போல... இந்த போட்டோவும் நல்லாத்தான் இருக்கு...

Unknown சொன்னது…

புகைப்படம் அருமை.

arasan சொன்னது…

நச்

அன்புடன் மலிக்கா சொன்னது…

அடங்கிப்போன சரிரத்தில்
அமைதியாக பிரியும்
உயிர் மட்டுமே அறியும் போல...!
அமைதியின் விடியலை//

ஆழமான உணர்வுகளை உள்ளடக்கிய வரிகள். அருமை தினேஷ்

செல்வா சொன்னது…

//என்னை மறந்து மரணிக்கிறேன்..
நெடுந்தூர பயணத்தின் முடிவில்...!
அமைதியில்லா விடியலில்
அடங்கிப்போன சரிரத்தில்
அமைதியாக பிரியும்
உயிர் மட்டுமே அறியும் போல...!
அமைதியின் விடியலை.
//

இந்த வரிகள் எனக்கு பிடிச்சிருக்கு அண்ணா !

Unknown சொன்னது…

கலங்கும் கண்ணினுள்
கருவிழியும் தேடிட...!
எங்கு போனாயோ..?
என்ன ஆனாயோ...?
உண்மை அறிந்தாயோ...?!/////

அருமையான வரிகள்...

கவிதை நல்லா இருக்கு தினேஷ்..

ஆனந்தி.. சொன்னது…

ரொம்ப அருமையா இருக்குங்க...

ஆமினா சொன்னது…

வார்த்தைகள் அருமையா இருக்குங்க!!

ரசிக்க வைக்கும் வரிகள்

ஹேமா சொன்னது…

கவிதையின் சாரம் மிகவும் ஆழமா இருக்கு தினேஸ்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி