புதன், 19 ஜனவரி, 2011

சுயம் அழித்த சுயம்பு

உலகில் அனைத்தும் படைத்தே உணர்வுகளால்
உன்னை படைத்தேன் அகம் கொண்ட
சுயமுன்னில் புறத்தே அழிவினை விதைத்தோ
பழியினை ஏற்கும் மானிடா..!

நிலை யில்லா உடல்கொண்டு நிம்மதியின்றி
அலைகிறாயோ ஏன்? நிறம்மாறி பயணிக்கும்
பச்சோந்தி பசிதனில் இச்சைகள் ஆயிரம்
பொறுத்து பொறுத்து பொய்யானதோ...?!

மெய்கள் மறுத்து சிறகொடித்து சிதையும்
சடலமே உன்னில் சலசலக்கும் சங்கீதம்
சங்கதியில்லா சரணம் பல்லவி படைக்க
சகதியில் நனைவது ஏனோ...?

17 கருத்துகள்:

Ram சொன்னது…

நான் நீங்க சொன்னது மாதிரி இல்லப்பா.!!! யாராச்சும் இப்படி இருந்தீங்கன்னா திருந்திடுங்கப்பா.. யாரச்சும் அப்படி இருந்தா உங்களுக்கு பதில் சொல்லுவாங்க...

Chitra சொன்னது…

மெய்கள் மறுத்து சிறகொடித்து சிதையும்
சடலமே உன்னில் சலசலக்கும் சங்கீதம்
சங்கதியில்லா சரணம் பல்லவி படைக்க
சகதியில் நனைவது ஏனோ...?

......யார் மேலேயோ கோபம் என்று மட்டும் புரிகிறது.

ஹேமா சொன்னது…

மனிதனைப் படைத்தவனே பார்த்துப் பயப்படுகிறான்.அருவருக்கிறான் !

Philosophy Prabhakaran சொன்னது…

ஏன் இந்த கொலைவெறி...?

sathishsangkavi.blogspot.com சொன்னது…

உங்க எழுத்தில் கோபம் தெரிகிறது...

அந்நியன் 2 சொன்னது…

பசி,பட்டினி,வறுமை,கொடுமை,கண்ணீர் என பழக்கப் பட்டோர்களுக்கு இந்த கவிதை ஒரு டானிக் சகோ...வாழ்த்துக்கள்

ஆனந்தி.. சொன்னது…

டைட்டில் ரொம்ப ரொம்ப பிடிச்சி இருந்தது தினேஷ்...

karthikkumar சொன்னது…

ஆனந்தி.. said...
டைட்டில் ரொம்ப ரொம்ப பிடிச்சி இருந்தது தினேஷ்.//
ENAKKUM BANGU :)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பொறுத்து பொறுத்து பொய்யானதோ...?!//



அய்யாவுக்கு என்னமோ கிடைக்கலை போல இருக்கே.....

'பரிவை' சே.குமார் சொன்னது…

உங்க எழுத்தில் கோபம் தெரிகிறது...

Unknown சொன்னது…

//நிலை யில்லா உடல்கொண்டு நிம்மதியின்றிஅலைகிறாயோ ஏன்//

அழுத்தமான வரிகள்..

Unknown சொன்னது…

இன்று வள்ளலார் குரு பூஜை... அவரை பற்றி இன்று எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்...

Unknown சொன்னது…

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

வாடினேன் # இன்று வள்ளலார் குரு பூஜை.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கோபமா இருக்கறப்ப கவிதை எழுதாதீங்க....கோபம் வார்த்தைகளில் தெரிக்கிறது..

சக்தி கல்வி மையம் சொன்னது…

கோபம் வார்த்தைகளில் தெரிக்கிறது..

Title SUPER...

சக்தி கல்வி மையம் சொன்னது…

see,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9630.html

comment this article and vote me.

Unknown சொன்னது…

அடுத்த கவிதைக்கு காத்திருக்கிறோம்..

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி