ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

என்னைப்பற்றி சிலவரிகள் 8

வாகனம் ஒரு இரண்டு மணிநேர பயணத்திற்கு பின் கண்விழித்தேன் இன்னும் நண்பர்கள் கண்கள் சோகத்துடனே காட்சியளிக்கப்பட்டடது நானே ஆரம்பித்தேன் சரி நடந்தது நடந்து விட்டது இனியாவது யோசித்து செயல்படுவோம் என்று நண்பர்களும் சரியென்றார்கள் நாளைக்காலை அனைவரும் மாவட்ட ஆட்சிதலைவரை சந்தித்து நடந்தவற்றை கூறுவோம் அவரிடமிருந்து என்ன ஆலோசனை வருகிறதோ அதன்படி செயல்படுவோம் என்றேன் சரியென்று எதிர்குரல் வந்தது பின் அனைவரும் வாகனத்தில் அவரவர் வீட்டுக்கு சென்றோம்.
மறுநாள் காலை நான் என் பெற்றோருடனும் மற்றும் சிலரும் அவரவர் பெற்றோருடனும் மாவட்ட ஆட்சிதலைவரை சந்திக்க அவரது அலுவலகத்தில் கூடினோம் பிற்பகல் 2:00மணிக்குத்தான் அனுமதி கிடைத்தது அனைவரும் சேர்ந்து சந்தித்து நடந்தவற்றை கூறினோம் அவரோ பள்ளிகூட தேர்வு என்றால் நான் முடிவெடுக்க முடியும் எனவே நீங்கள் அனைவரும் சென்னையில் உள்ள BOARD OF TECHNICAL EDUCATION-TAMILNADU அங்கு சென்று உயர் தலைவரை சந்தித்து தாமதிக்காமல் நடந்தவற்றை கூறுங்கள் நானும் முடிந்தவரை அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முர்ச்சிக்கிறேன் என்றார்.
மாலை ஒரு நான்கு மணியை தொட்டது சரி இனியும் தாமதிக்கவேண்டாம் நாளை அதிகாலை சரியாக 4:00 மணியளவில் இரண்டு வாகனங்கள் தயாராக முன்பு புறப்பட்ட இடத்திலிருந்தே புறப்படுவோம் ஒரு வாகனம் மாணவர்களுக்கு மற்றொன்று பெற்றோர்களுக்கு முடிவுவிடுக்கப்பட்டு அனைவரும் பிரிந்தோம். நானும் வீட்டுக்கு வந்தேன் இரவு ஒரு எட்டு மணி இருக்கும் என் மூளையில் ஒரு யோசனை தோன்றியது நாம் ஏன் கல்வித்துறை அமைச்சரை சந்திக்ககூடாது? என்று பெற்றோரிடம் கூறினேன் அவர்களும் சரியான யோசனை என்றுகூறினார்கள் பின் கல்வித்துறை அமைச்சரை தொலைபேசியில் இரவு பத்து மணிக்கு தொடர்பு கொண்டேன் மறுமுனையில் அவருடைய உடனதிகாரி தொலைபேசியில் உரையாடினார் நான் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவனாக கல்லூரியில் நடந்த அனைத்தையும் அரைமணிநேரத்தில் கூறிமுடித்தேன் பின் அவர் மாணவர்களாகிய எங்களை தாமதிக்காமல் நாளை காலை 8:30 மணிக்குள் சென்னை அடையாரில் உள்ள கல்வித்துறை அமைச்சரின் பங்களாவிற்கு வரச்சொன்னார்.
பின் நான் தொலைபேசியை துண்டித்துவிட்டு நண்பன் ஒருவனை தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு இன்று நள்ளிரவு 2:00மணிக்கு ஒரு வாகனமும் 4:00மணிக்கு மறுவாகனமும் புறப்படும் நீ மாணவர்களை 2:00மணிக்கு புறப்படும் வாகனத்திற்கு தயார்படுத்த பெற்றோர்கள் மற்றவாகனத்தில் வருவார்கள் கூறினேன் அலட்சியமான பதில்கள்
என் செவியை தாக்கின சரியாக மணி 11:20ஐ தொட்டிருந்தது வெளியே கிளம்பினேன் வண்டியை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மாணவன் வீடாகச் சென்று புறப்பாடு விஷயத்தை கூறிவிட்டு பெற்றோரை கொண்டுவர ஒருசில நண்பர்களையும் தயார்படுத்திவிட்டு வீட்டுக்கு செல்லும்போது மணி நள்ளிரவு 1:00 தொட்டிருந்தது வீட்டு வாசலில் வாகனமும் வந்து நின்றது வீட்டுக்குள் சென்று முகம்மட்டும் கழுவிவிட்டு புறப்பட தயாரானேன் என்னோடு என் பெற்றோரும் நன்கு பேசத்தெரிந்த என் உறவினர் ஒருவரும் என்னோடு புறப்பட்டனர் வாகனம் புறப்பட்டது வெகுசீக்கிரத்தில் மாணவரையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம்..........

நள்ளிரவு சூரியன்
உதித்ததோ.....
இருள் நீங்கி - எங்கள்
இடர் தீர்த்துவைக்க.........

1 கருத்து:

வினோ சொன்னது…

என்ன ஆச்சு?

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி