வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

என்னைப்பற்றி சில வரிகள் 7

ஏப்ரல்-15-2002
காலை ஏழுமணியளவில் பல்லாவரத்தை அடைந்தோம் அனைவரும் அங்கு ஒரு ஹோட்டலில் சிற்றுண்டியை முடித்தனர் என்னைத்தவிர பின்பு 8:30மணிக்கு புறப்பட தயாரானது வாகனம் சரியாக ஒன்பது மணியளவில் கிண்டியில் உள்ள அலுவலகத்தை அடைந்தோம் வாகனத்தை நிறுத்திவிட்டு நானும் மற்ற சில நண்பர்களும் சேர்ந்து அலுவலகத்திற்குச் சென்று உயர் தலைவரை பார்க்க அனுமதி கோரினோம் அவர் பத்து மணிக்குத்தான் அலுவலகம் வருவார்கள் பின்பு அச்சமயத்தில் வந்து பார்க்கவும் என்றனர் பின் அனைவரும் வாகனத்தில் வந்து அமர்ந்துக்கொண்டு அவர் வருகையை எதிர்கொண்டு காத்திருந்தோம் நான் சற்று அலுவலகம் பக்கமாக சுற்ற தொடங்கினேன் பக்கத்தில் ஒரு சிற்றுண்டி இருந்தது அங்குச்சென்று நானும் உணவருந்தினேன் பின் வாகனத்தின் அருகேச் சென்றேன் மாணவர்கள் ஒரே கூட்டமாக இருந்தனர்.
அங்கு சென்றேன் கல்லூரி முதல்வர் அங்கிருந்தார் அங்கு அவர் கூறியது நான் இப்பதான் உயர் தலைவரை கண்டுவிட்டு வருகிறேன் அவர் உங்களுக்கு உதவுவார் என்று தோணவில்லை என்றார் மாணவர்களுக்கு திக்கென்றது எனக்கில்லை (அவர் பெசிகொண்டிருக்கும் நேரம் சரியாக 9:45மணி) அவர் கூரியவார்தைகள் மேலும் வேருயேதாவது அரசியல் வாதிகளை வைத்து காய்னகர்த்தலாம் என்றார் சரி நீங்கள் எல்லோரும் ஏதாவது மனுகொண்டு வந்திருப்பீர்களே கொஞ்சம் தாருங்கள் படித்துவிட்டு தருகிறேன் என்றார் மதிகெட்ட மாணவர்களில் ஒருத்தர்கூட யோசிக்காமல் கல்லூரிக்கு எதிரானா மனுவை கல்லூரி முதல்வரிடமே காண்பித்தனர்......
அம்மனுவை படித்த முதல்வர் கடுங்கோபத்துடன் கல்லூரிக்கு எதிராக யாராவது செயல்பட்டால் அனைத்து தேர்வுகளும் நீங்கள் எந்த கல்லூரியில் வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் செயமுறைத்தேர்வு எமது கல்லூரியில் மட்டும் தான் எழுதமுடியும் எதிராக எவன் செயல்படுவா னாயினும் எத்துனைமுறை தேர்வு எழுதினாலும் வெற்றிபெற என்கல்லூரியில் வாய்ப்பே இல்லை என்றுகூறி அங்கிருந்து புறப்பட்டார் இதை கேட்ட அனைத்து மாணவர்களும் சற்று குழம்பிய நிலையிலே இருந்தனர் நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்கவில்லை நானோ நீங்கள் வந்தால் வாருங்கள் இல்லையேன் நான் சென்று அனைத்து மனுவையும் உயர் தலைவரிடம் கொடுத்து நடந்ததைகூறி நம் வாழ்க்கைக்கு வழி கேட்கிறேன் என்று கூறி அனைத்து மனுவையும் எடுத்துக்கொண்டு அலுவலகத்தை நோக்கி நடக்கலானேன் சற்றுதொலைவு சென்றிருப்பேன் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் யாரோ இருவர் என்னை தூக்கி வாகனத்தில் ஏற்றினர் வாகனம் படுவேகத்தில் புறப்பட்டது.

எனது நண்பர்கள்தான் கல்லூரி முதல்வர் சொன்ன வார்த்தைகள் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. அதன் காரணமே என்னை வாகனத்தினுள் ஏற்றியது.........
நான் மிகவும் மௌணமானேன் வாகனம் சற்றும் வேகம் குறையாமல் சென்ருக்கொண்டிருன்தது ஒரே ஒரு வரத்தை கூறிவிட்டு உறங்கிப்போனேன் எனக்கு இரண்டாம் வகுப்பு கிடைத்தாலும் முதல்வகுப்பு கிடைத்தாலும் கவலை இல்லை என்னோடு நம்பிக்கை உள்ளது ஆனால் என் நண்பர்களாகிய உங்களை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது என்றேன். வாகனம் விடியற்காலை புறப்பட்ட இடம் நோக்கிவிரைந்துக் கொண்டிருந்தது......

நம்பிக்கை வென்றதோ
நயவஞ்சகம் கொன்றதோ
மனம் வெந்துபோனதோ
குணம் கொண்டுபோனதோ........

2 கருத்துகள்:

Chitra சொன்னது…

நம்பிக்கை வென்றதோ
நயவஞ்சகம் கொன்றதோ
மனம் வெந்துபோனதோ
குணம் கொண்டுபோனதோ........

.....you went through a lot... mmmm....

தினேஷ்குமார் சொன்னது…

வணக்கம்
Chitra said...
நம்பிக்கை வென்றதோ
நயவஞ்சகம் கொன்றதோ
மனம் வெந்துபோனதோ
குணம் கொண்டுபோனதோ........

.....you went through a lot... mmmm..

படித்து தெரிந்தததை விட இகலியுகத்தில் நான் பட்டு தெரிந்தவை அதிகம் சகோதரி

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி