சனி, 29 நவம்பர், 2014

யார் இவனோ ...?


எத்தனை கால் யார் இவனோ 
அத்தனை ஆளுபவன் மகனோ
சித்தனை போல் சத்தம்இலா
சுத்தனை மேலுடுப்பான்

தத்துவமே தனித்துவமாய் சிந்தை
புகுவனமாய் என்றும் புதுயுகமாய்
நித்திரை நீந்தி பொழுதடைவான்
சத்திரமே சமய சித்திரமே

புத்தி புதுவான் பக்தன் புகழ்வான்
சக்தி எனுவான் சடமுறைவான்
நிலை யுணர்வான் தனையுழல்வான்
சிலை யெனுவான் தனியே

தத்தளிப்பான் தானே முத்தெடுப்பான்
கனிய கவர்ந்திடுவான் கானலிலே
தாகம் தீர்வான் காணும் மயிலேறி
கனவடைப்பான் காக்க 

காலமெனும் தேரிலேறி பார்சுற்றி
ஊர்சுற்றி உலகளப்பான் நொடியில்
உடனிருப்பான் மயமெனும் மாயை
மடியில் தவழும் மனமோ..


4 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


கவிதை அருமை நண்பரே,,, வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

காலமெனும் தேரிலேறி பார்சுற்றி
ஊர்சுற்றி உலகளப்பான் நொடியில்
உடனிருப்பான் மயமெனும் மாயை
மடியில் தவழும் மனமோ..

அப்படிப் போடு... கலக்கல்...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

இளமதி சொன்னது…

மாயம் மிகவாம் மனதின் செயல்களே!
காயம் வருத்திடாமற் காண்!

சிறந்த சிந்தனை! அருமை!
வாழ்த்துக்கள் சகோ!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி