செவ்வாய், 4 நவம்பர், 2014

நிச்சயவுயிர் கூடு ...!


நேற்று பிறந்தது போலே நடவதை
காற்று கவர்ந்தது நேரே கனமுடன்
ஆற்றை கடப்பது பாழே நிவர்த்தியின்
தோற்றம் எதுவென தேடு

சோற்றுப் பசியாம் பானைக்கு காற்றே
இடம்புகுந்து வட்டம் போடுது சேற்று
சகதியில் கதிர் மடிந்து எனையுற்று
நோக்குதே கடிந்து பசிக்கு ஒடிந்து

கொல்லிடம் கோருது புல்லிடம் பாரடி
தேவி வறண்டோட வாதம் திறப்புக்கு
கரை புரண்டோட தேக்கம் திறந்திருக்கு
நீதி கொலையாளி ஆனேனாம் நான்

பச்சை வயக்காடு நிச்சயவுயிர் கூடாய்
மனதில் குடியேற மக்கள் திசைமாறும்
மாற்று வழிதேடும் வாட்டும் பசிபோக்க
சேற்றி லுழுவார்கு காணிக்கை நீயாயிரு

பொருத்து புகழ்பாடு பச்சிளம் கூட்டில்
புகுத்து பழம்பாட்டை பூக்கும் புதுயுகமே
காக்கும் வழியனைத்தும் உன் சாமர்த்யம்
உத்தமர் தன்வாழ்வின் ஊற்றே உணர்...


3 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பொருத்து புகழ்பாடு பச்சிளம் கூட்டில்
புகுத்து பழம்பாட்டை பூக்கும் புதுயுகமே
காக்கும் வழியனைத்தும் உன் சாமர்த்யம்
உத்தமர் தன்வாழ்வின் ஊற்றே உணர்...
பசுமையான ஆக்கம்..

'பரிவை' சே.குமார் சொன்னது…

பச்சை வயக்காடு நிச்சயவுயிர் கூடாய்
மனதில் குடியேற மக்கள் திசைமாறும்
மாற்று வழிதேடும் வாட்டும் பசிபோக்க
சேற்றி லுழுவார்கு காணிக்கை நீயாயிரு

கலக்குங்க.... வாழ்த்துக்கள்.

மோகன்ஜி சொன்னது…

ஒலிநயத்துடன் உன்னதக் கவிதை!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி