புதன், 10 நவம்பர், 2010

வதம்


அரிதாரம்பூசா
அவதாரம் பிறக்க

தீராத பசிருசிதனில்
வித்திட்ட விதிதனையே
விளையாட்டாய்
வினையாகும் வீதியிலே
சதி செய்யும் சாதிமத
சங்கடங்களை துறக்க

மனம் கொல்லும்
மானிடராய் தினம்
வெல்லும் பேராசையுனை
கொன்று புதைக்க
வதமொன்று வரவேண்டும்
வதைக்காத வதம்
வேண்டும்

இச்சைகளின் தூண்டுதலே
துகிலுரிப்பு யோதனரை
சுற்றிவந்து வட்டமிட்டு
சூளுரைத்து கொட்டமடக்கி
அடிபணியானின்????
வாளுயர்த்தி
வெட்டி முடக்கு

களவாடும் கரங்களிலே
நெடுநீள வேல்கொடுத்து
உறவாடும் மனங்களிலே
களவாட இடமளித்து
பசிதீர பணியமர்த்து
காவலனாய் களமிறக்கு

காவலனும் கரம்நீட்டா
வரமொன்று கொண்டுவர
நீவிதித்த வழிதனையே
காவலனும் கடைபிடிக்க
மனம் நினைக்க குணம்
மாறா நிலையிருக்க

சீரான வாழ்வளிக்க
மாறாக தவமிருக்கா
வதம் வேண்டும்
வதைக்காத வத(ர)ம்
வேண்டும்

24 கருத்துகள்:

Chitra சொன்னது…

கருத்தாழமிக்க கவிதை. பாராட்டுக்கள்!

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃமனம் கொல்லும்
மானிடராய் தினம்
வெல்லும் பேராசையுனை
கொன்று புதைக்கஃஃஃஃ
நிஜமான வரிகள் சகோதரா வாழ்த்துக்கள்...
இன்லியில் ஏன் இன்னும் இணைக்கல...

சிவராம்குமார் சொன்னது…

அருமையான வார்த்தைப் பிரயோகம்!

மதுரை சரவணன் சொன்னது…

//சீரான வாழ்வளிக்க
மாறாக தவமிருக்கா
வதம் வேண்டும்
வதைக்காத வத(ர)ம்
வேண்டும்//



அருமை... வாழ்த்துக்கள்

Ramesh சொன்னது…

ரசனை. ஆழம். அற்புதம். தொடர்க அனேக வரிகளில் சிக்கியுள்ளேன். நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

எல் கே சொன்னது…

மிகுந்த ஆழம் கொண்ட கருத்து நண்பரே. வாழ்த்துக்கள்

logu.. சொன்னது…

Manathai thodum varigal nanbare..

romba nallarukku.

ஹரிஸ் Harish சொன்னது…

அருமை..தொடருங்கள்..

சுசி சொன்னது…

கருத்துக்களோட நல்லா எழுதி இருக்கீங்க.

தமிழ்க்காதலன் சொன்னது…

இனிய தோழமையே... ஒரு நல்ல எழுத்தாலனை இனம் கண்டுக் கொண்டேன். உம்முடைய எழுத்துக்கள் அருமை நண்பரே. இந்த வரத்தை கைப்பற்றி தொடர்ந்து எழுதுங்கள்.

# மனம் கொல்லும்
மானிடராய் தினம்
வெல்லும் பேராசையுனை
கொன்று புதைக்க
வதமொன்று வரவேண்டும்
வதைக்காத வதம்
வேண்டும்.
......... தனித்துவம் தெரிகிறது.

# களவாடும் கரங்களிலே
நெடுநீள வேல்கொடுத்து
உறவாடும் மனங்களிலே
களவாட இடமளித்து
பசிதீர பணியமர்த்து
காவலனாய் களமிறக்கு.
...... கவிஞனின் உணர்வு புலப்படுகிறது.

# சிறு விண்ணப்பம்....
சூலரைத்து கொட்டமடக்கு
அடிபனியானின்????
வாள்யுயர்த்தி
வெட்டி முடக்கு
...... இந்த வரிகளில் "சூளுரைத்து",
"கொட்டமடக்கி", "அடிபணியானின்",
"வாளுயர்த்தி"
என்றிருந்தால் சரியாய் இருக்கும்
என்பது என் கருத்து.

மிக்க நன்றி.

ஹேமா சொன்னது…

தினேஸ் உங்கள் வார்த்தைப் பிரயோகமும் அதைக் கோர்க்கும் விதமும் அற்புதம் !

Unknown சொன்னது…

//வதமொன்று வரவேண்டும்
வதைக்காத வதம்
வேண்டும்//

பயமா, வலியின் வெளிப்பாடா?

தினேஷ்குமார் சொன்னது…

பாரத்... பாரதி... said...
//வதமொன்று வரவேண்டும்
வதைக்காத வதம்
வேண்டும்//

பயமா, வலியின் வெளிப்பாடா?

பயம் இல்ல நண்பரே மக்கள் படும் வேதனைகளை குரோத ரோதனைகள் இல்லாமல் தீர்க்கவேண்டும் என்பதே என் வெளிப்பாடு

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

///சீரான வாழ்வளிக்க
மாறாக தவமிருக்கா
வதம் வேண்டும்
வதைக்காத வத(ர)ம்
வேண்டும்///

கவிதை அர்த்தமுள்ள விதமாய் அமைப்பு..!

வதைக்காத வரம் வேண்டும்.... அழகான வார்த்தை :-)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மேலும் மேலும் மெருகேறுது உங்க கவிதை,வாழ்த்துக்கள்

DREAMER சொன்னது…

முன்னைய கவிதை 'தவம்', இந்த கவிதை 'வதம்'. கவிதையில் மட்டுமல்லாது, தலைப்பிலும் வார்த்தை ஜாலம். இரண்டும் அருமை நண்பரே..!

-
DREAMER

ஆர்வா சொன்னது…

தினேஷ்... பின்றீங்க போங்க....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஒக்கேனக்கல் நீர்வீழ்ச்சி போல் காட்டாறு போல் பொங்கி பிரவாகமாய் ஓடுது உங்கள் வார்த்தைகள்

ஆமினா சொன்னது…

உபயோகித்த வார்த்தை அருமை!

லேடீஸ் ஸ்பெஷலில் உங்கள் மாதங்களில் காதலி சிந்த்திரையில் ஆரம்பித்து நித்திரையில் அழகாக வார்த்தையை கோர்த்துள்ளீர்கள்!

சூப்பர்

அந்நியன் 2 சொன்னது…

கவிதையை படித்தது ஒருப் படம் பார்த்தததைப் போன்ற பிரமை.

வாழ்த்துக்கள் !

மாணவன் சொன்னது…

"சீரான வாழ்வளிக்க
மாறாக தவமிருக்கா
வதம் வேண்டும்
வதைக்காத வத(ர)ம்
வேண்டும்"
உங்களது எண்ணங்களை எழுத்தின் மூலம் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வாழ்த்துக்கள் தினேஷ், உங்கள் வார்த்தை வீச்சில் அசாத்தியமான முன்னேற்றத்தைக் காண்கிறேன். கவிதை வெகு அருமை!

ருத்ரன் சொன்னது…

அருமையான கவிதைடா, மேலும் தொடரட்டும் உன் படைப்புகள்

Unknown சொன்னது…

தமிழ்மணத்தில் வாக்களித்துள்ளேன் வெற்றிபெற வாழ்த்துக்கள்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி