வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

என்னைப்பற்றி சில வரிகள் 6

என்னை நோக்கி வராங்கன்னா யாராக இருக்கும். ஸாரி நண்பர்களே இதற்க்கு மேலும் சஸ்பென்ஸ் வைக்க கூடாதுன்னுதான் நினைத்த்தேன் முடியமாட்டேங்குது நண்பர்களே இன்றைக்கு முடிக்க நினைத்து முடிக்கமுடியவில்லை எனவே தொடர்கிறேன்........

ஆட்டோவிலிருந்து வந்தவர்கள் வேறுயாரும் இல்லை என்னை பெற்றவர்கள்தான் என்னிடம் நடந்த அனைத்தையும் நான் கூற கேட்டுவிட்டு அவர்கள் கல்லூரிவளாகத்தினுள் சென்றனர் என் தாய் தந்தை இருவரும் தீவிர கம்னிஸ்டு பக்கதர்கள் அவர்கள் உள்ளே செல்ல மாணவர்கள் கூட்டம் அவர்களை எதிர்நோக்கி வந்தது என்ன முடிவெடுத்தார்கள் என வினவினர் மாணவரிடம் நிர்வாகத்திற்கு பயந்த மாணவர்கள் மன்னிப்பு கடிதம் என்று கொஞ்சம் இழுத்தனர்.அவர்கள் மன்னிப்பு கடிதமா சரி மன்னிப்பு கடிதம் கொடுக்கிறீர்கள் அங்கு இருந்து வரும் பதில்கள் ஏறுக்கு மாறாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்றனர் மாணவர்களோ சற்று குழப்பத்தில் ஆழ்ந்தனர்...
எனது பெற்றோர்கள் அனைவரையும் இங்கே நில்லுங்கள் நாங்கள் சென்று நிர்வாகத்திடம் பேசிவருகிறோம் என்று நிர்வாகிகள் உள்ள கூட்ட அறைக்குள் சென்றனர் ஒரு 15நிமிடம் இருக்கும் கூட்ட அறையினுள் உள்ள நிர்வாகிகள் இவ்விருவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தினறி வெளியே வந்தனர். பின் சுமுகமான ஒரு முடிவு எடுக்கப்பட்டது இவர்களுடன் கூடி வரும் திங்கட்கிழமையன்று கல்லூரி நிர்வாக ஊழியர்கள் மூவர் சென்னைக்கு வருவார்கள் என்றும் மாணவர்கள் மன்னிப்பு கடிதம் எல்லாம் எழுதவேண்டாம் என்றும் மாணவர்களும் அவர்களுடன் சென்று நடந்த்தவற்றை அதிகாரிகளிடம் கூறவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன ஞாயிற்றுகிழைமை இரவு பக்கத்து ஊரில் உள்ள நண்பனின் வீட்டிற்கு அனைத்து மாணவர்களும் வந்துவிடவேண்டும் நான் விடியற்காலை 3:00 மணிக்கு வேண் கொண்டுவருகிறேன் என்று கூறி அனைவரும் விடைகொடுக்கமுடியாமல் பிரிந்தோம் நான் என்பெற்றோருடன்.........
மறுநாள் காலை சனிக்கிழைமை தினமலர் நாளிதழில் எங்கள் கல்லூரி மாணவன் ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்து பெற்றோர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர் என்றும் கல்லூரியில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் கல்லூரி மாணவன் பெயர் இடாமல் கொடுத்திருந்தனர் படித்த எனக்கு தூக்கிவாரிப்போட்டது. உடனே சற்றும் தாமதிக்காமல் கல்லூரிக்கு கிளம்பினேன் அங்கு சென்று நண்பர்களை பார்த்து நலம் விசாரித்துவிட்டு நானும் மற்றுமொரு சக நண்பனும் பக்கத்திலுள்ள வழ்க்கறினர் ஒருவரை பார்க்க சென்றோம். வழ்க்கறினரின் வீட்டுக்கு சென்றோம் அவரில்லை மாலைப்பொழுதுதான் வீட்டுக்கு வருவார் என்றனர்....
மாலை ஒரு ஆறு மணியளவில் வழ்க்கறினர் வந்தார் அவரிடம் நடந்தவற்றைக்கூறி நாளிதழை காட்டினோம் அவர் படித்துவிட்டு அவர் கூறியதாவது கல்லூரி ஊழியர்கள் உங்களுடன் வந்தாலும் கல்லுரிப்பக்கம்தான் பேசுவார்கள் எனவே அங்கு உங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்புகுறைவு என்று ஒரு மனு ஒன்றை எழுதிக்கொடுத்தார் கல்லூரி நிரவகத்துக்கு எதிராக இம்மாதிரி மனுவைப்போல ஒவ்வொரு மாணவனும் தனித்தனியே இச்செய்திதாளின் பிரசுரத்தையும் இணைத்து மனுவொன்று எழுதி சென்னையில் உள்ள BOARD OF TECHNICAL EDUCATION-TAMILNADU உயர் தலைவரிடம் கொடுத்து நீதி கேளுங்கள் என்றார் மணி இரவு 9:30ஐ தொட்டது அவரிடமிருந்து விடைபெற்று திரும்ப ஆயத்தமானோம்...
வரும் வழியில் டீகாடை சலூன் என்று ஏறிஇறங்கி நாளிதழை சேகரித்து கொண்டுசென்றோம் இருவரும்.....
ஞாயிற்றுகிழைமை இரவு பத்து மணிக்கு மணாவர்கள் அனைவரும் நண்பனின் வீட்டில் ஒன்ருகூடினோம் பின்பு வழக்கறினரின் ஆலோசனையை கலந்தைந்து அவரின் அறிவுரைப்படி மனுக்கள் தயாறாகிகொண்டிருந்தன நான் விடைபெற்று வேன் கொண்டுவர புறப்பட்டேன்....
திங்கட்கிழைமை விடியற்காலை மூன்று மணி வேன் சென்னை நோக்கி புறப்பட தயாறானது புறப்பட்டும் விட்டது மாணவர்களுடன் இருட்டை கிழித்துக்கொண்டு வாகனம் சென்ருக்கொண்டிருந்தது சென்னையை சென்றடைய நான்கு மணிநேரம் பிடிக்கும்...........

விடியாத இரவில்
விடைதேடும் பயணம்
இரவு விடியுமோ - எங்கள்
இடர் விடியுமோ........

3 கருத்துகள்:

வினோ சொன்னது…

நண்பா அருமையா கொண்டு போறீங்க...
இரவு விடுஞ்சுதா?

Chitra சொன்னது…

விறுவிறுப்பு கூடிக்கொண்டே வருகிறது.

DREAMER சொன்னது…

வணக்கம் தினேஷ்குமார்,
6 பாகமும் ஒரே மூச்சில் படித்து விட்டேன். சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒவ்வொரு பாகத்திலும், கடைசியில் நீங்கள் முடிக்கும் பாணி அருமை..! வாழ்த்துக்கள்..! அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன்..!

-
DREAMER

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி