ஞாயிறு, 2 நவம்பர், 2014

கவலை தீராயோ கடலே...!


அதிகாரம் ஆண்ட கடல்கொண்ட தேசம்
சதிகாரன் தூண்ட விழுங்கிய மீனவர்
தேகம் புரியா பிழையாய் விளையுதே
சோகம் தினம்தினம் திக்குமாறி

கண்டதைக் கொள்ள கயவனாய் அல்ல
அடுப்பெரிய வீட்டில் துடுப்பெடுத்த ஓட்டம்
தள்ளாட்டம் போடும் அலைகளோடு கூடி
அடைகாக்க எண்ணா அநியாயம் அங்கும்

தடைச் சொல்லுவா ரேனோ கடலள்ளும்
கொள்ளையர் தானோ கடமைசிகை கோதி
கதிகாரணம் சொல்லடா அண்டைதேச மென்னடா
அங்கும் வழிக்குபங்கு பிண்டமாய் செல்லுதா

ஆண்டவன் போலின்று ஆயுதம் தாங்கவே
பொல்லாது போகும் பொழிக்கும் மழையே
சிவந்தது காணும் துணுக்குமினி வேண்டா
பொருக்குமுன் பேராபத்தை பேசித்தீர்

போர்காணா வேங்கை உறங்கமாய் உள்ளே
அவரவர்க்கும் நேர்காண வேண்டாம் விதியே
சதியின்கதி மாற்றிக்கொள் கோவணம் மிஞ்சும்
அகிலமே அஞ்சும் அரசாண்ட வம்சம் 


3 கருத்துகள்:

Yarlpavanan சொன்னது…

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

மோகன்ஜி சொன்னது…

இதயத்தைத் தொட்ட வரிகள் தினேஷ்! நல்லவை நடக்கக் காத்திருப்போம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை அருமை தினேஷ்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி