திங்கள், 3 ஜனவரி, 2011

விண்ணிறங்கி வாராயோ...


அறியா பருவம் ஒன்றில்
அரிதாரம் பூசிக்கொண்டு
நாவுரைத்த வசனங்கள்
என் பெயரை மாற்றியதுவே...!

முறுக்கும் மீசைதான் வரைந்து
அடக்க முடியா ஆக்ரோசத்துடன்
நா உரைத்த வீர வசனம்
நானாக நானில்லை நீயாக
மாறியதுவே உணர்வுகள்...!

'அட்டைவாள்' கத்திபிடித்து
'அகங்கொண்ட' வெள்ளையனை
வீராப்புடன் விரட்டியடிக்க
'வீரபாண்டிய கட்டபொம்மனாய்'
நான் மாறிய நொடிபோழுது
அரங்கேற்ற மேடைதனில்...!


உந்தன் சரித்திரம் பேசுதையா
உந்தன் சங்கதியாய் நானுமிங்கு
உன்போல் யாருமில்லை...!?

உடைவாளும் பகையாகுதையா..
பகைக்காமல் பகைக்குதையா
பணம்தானே வழிவகுக்குதையா..

வகையான புதை குழிதனிலே
எட்டப்பனாய் மாறிவரும்
சமுதாயமிங்கு புதைகுழியில்
பாதையமைத்து பயணிக்குதுதையா..

பாதை காட்ட யாருமில்லை
புதிய சமுதாயத்தின் வழிகளிலே
உந்தன் மறுபிறவி வேண்டுமையா..

மனதார வேண்டுகிறேன்.
விண்ணிறங்கி வாராயோ..
விடியல் காண வாராயோ..
முறுக்கு மீசை வீர பாண்டியரே...!
தமிழ் குளம் காக்க வாராயோ...?!

கலியுகம் : அஞ்சாசிங்கம் வீரத்தமிழர் "வீரபாண்டிய கட்டபொம்மன்" மண்ணில் உதித்த நாளின்று முறுக்கு மீசையாரை வணங்கி அவர் பாதம் சமர்பிக்கும் எனது வரிகள் .....

15 கருத்துகள்:

karthikkumar சொன்னது…

வீரபாண்டிய கட்டபொம்மன்" மண்ணில் உதித்த நாளின்று முறுக்கு மீசையாரை வணங்கி அவர் பாதம் சமர்பிக்கும் எனது வரிகள் ..//
வீர வணக்கங்கள்....

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வீர வணக்கங்கள்....

வைகை சொன்னது…

வீரத்தமிழனுக்கு தலைவணங்குவோம்!

Philosophy Prabhakaran சொன்னது…

வீர பாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு தலை வணங்குகிறேன்...

Meena சொன்னது…

கவிதை அருமை

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

வீரத் தமிழனுக்கு
ஆவேசமான வார்த்தைகளில்....
கவிதை சமர்ப்பணம்.....

நல்ல இருக்குங்க...!! :-)

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//மனதார வேண்டுகிறேன்.
விண்ணிறங்கி வாராயோ..
விடியல் காண வாராயோ..
முறுக்கு மீசை வீர பாண்டியரே...!
தமிழ் குளம் காக்க வாராயோ...?!//

வீரத்தமிழன் வீரபாண்டியகட்ட பொம்மனுக்கு தலைவணங்குவோம்!

பெயரில்லா சொன்னது…

கவிதை அருமை

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

good rhyme

ADMIN சொன்னது…

மனதார வேண்டுகிறேன்.
விண்ணிறங்கி வாராயோ..
விடியல் காண வாராயோ..
முறுக்கு மீசை வீர பாண்டியரே...!
தமிழ் குளம் காக்க வாராயோ...?!


அருமை..அருமை..! வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வீரத்தமிழனுக்கு தலைவணங்குவோம்!

சுசி சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

arasan சொன்னது…

அருமையா இருக்குங்க ,...

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

வீர வணக்கம்

தெம்மாங்குப் பாட்டு....!! சொன்னது…

Arumaiyaaga ezhuthi irukkireergal..nanru..!!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி