ஞாயிறு, 8 மார்ச், 2015

"ஞாலம் மின்னுது வென்றாளு ! "


காலை உந்துது தன்னாலே
மாலை வந்தது பின்னாலே
காலம் ஓடுது முன்னாலே
ஞாலம் மின்னுது வென்றாளு - (காலை)

நாளும் எண்ணிட செல்லாதே
நாளை நின்றிட எண்ணாதே
வாளும் உன்னிடம் நில்லாதே
காளை என்றென துள்ளாதே - (காலை)
வாட என்றும ருந்தாவாய்
தேடல் வென்றிட தீர்வாக
காடும் நன்றென கண்டாயு
நாடி வந்திடும் நற்பாகாய் - (காலை)
***********************************************

தன்னை தானடி தந்தேனே
மன்னன் நானென வந்தேனே
இன்னம் ஏனடி சந்தேகம்
உன்னை தாயென கொண்டேனே - (தன்னை)
கண்ணன் யாரென கண்டாயோ
கண்ணில் பேரருள் கண்டாயோ
மண்ணில் மாதவன் வந்தானே
மண்ணை தாயென கொண்டானே - (தன்னை)
சிந்த பேதமை தந்தானா
பந்த போதனை தந்தானா
வந்த பாதையில் வந்தானா
சந்தம் பாடிட தந்தானே - (தன்னை )

4 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
இசைத்திட்டேன் கீதத்தை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

Yarlpavanan சொன்னது…


சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை தினேஷ்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி