ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

எங்கும் நிறைந்தவன் எங்கும்.......!


பொய்யெனும் வில்லேந்தி மெய்யெனும் நாணேற்றி
மாசிலா அம்பெய்த போர்களத்தே போற்றுமின்
ஏற்றுமெனை தாழ்த்தும் தரமே நிரந்தரமே
யாசித்து ஆவாகித்த பூஞ்சுடர்....

 
அங்கென திங்களை சுட்டி நிலானென்
தங்கிடும் சூதனன் வெற்றிட தேரினில்
வட்டிட பாரினில் நிர்பந்த சூழலேன்
சொல்லிடை பூவாகி மெல்லென தீர்வாகி....


மாதவ கோடரி மான்விழ காடேரி
சாதக சூடேரி மீள்வதரி தீர்க்கதண்டம்
தீதில் பகுதியான் வேதர்க்கு வீதியன்
மாதர்க்கு மழலையான் சூதனன்....


ஊழிக் கணையானே ஆழிக் கடிவாளா
நாழி நிறுவோனே ஆதி முதலானே
அச்சு ததிருமானே உச்சு தலைகாணான்
மிச்சமென வடித்த உள்உணர்வடி வாகிநில்....


துரும்பினில் தூய அருளனைக் காண
அரும்பிய மாலை மதமெனும் காரிருள்
மாமதை தேரினில் உண்மை உருவற்று
காணாது எங்கும் மிதிபட்டு வீழினமானேன்....

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை வரிகள்...

தொடர வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என்னாச்சு எழுத்து ரொம்ப சின்னதா இருக்கு...?

'பரிவை' சே.குமார் சொன்னது…

தினேஷின் கவிதைகள் படிக்க படிக்கதான் புடிபடும்...

இதுவும் அந்த வகைதான்... நல்லாயிருக்கு...

எழுத்து ரொம்ப சின்னதா இருக்கு (மனோ அண்ணா சொல்லியாச்சில்ல... அப்புறம் நீ வேறயான்னு கேக்குறது புரியுது... அபுதாபியில இருந்து சந்திக்காத கோபம் இருக்குமில்ல)

அப்புறம் டெரர் கும்மி விருதுகள் விளம்பரம் ரொம்ப நாளா இருக்கு... அது முடிஞ்சு ஒரு வருசத்துக்கு மேல இருக்கும்... எடுத்துட வேண்டியதுதானே...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி