வெள்ளி, 22 மார்ச், 2013

இனியேனும்....? இனிமை தாரும்....!


 நான் வேண்டும் வரம் தா ... ! இறைவா... !
வரம் முழுமைப்பெற வாக்கினிலே நீவா...!
நாவினில் சூடிய... ! உன்னால் நரனாக
எட்டுதிக்கும் என்இனம் படும் பாட்டினில்....?
கேள்வித் தீ மூட்டி... ! கேளாயோ ... ! உந்தன் உள்ளில்
மாறாதே ... ! வடுவங்கு நினைமாற்றி நீட்சிக்கொள்ள
ஆத்திரம் கொண்டு உந்தன் நா ... ! விரட்டும் வரம்தா ...!
நாதனாய் மயங்கி ஆடவிடு...! ஆடவிடு ....!

நாளையை எண்ணி ... ! என்னில் கோர்த்துவிடு  ....


கூட்டினுளும்..! காட்டினுளும் ...! கூட்டமாய் வீரர் ..!
வதையில் விதையாகி...!  செந்தமிழெனும் தீச்சுடராய்...!
வீரம் துளிர்விட ....! துரோகத்தீ ... ! அருகாமல்
தூரத்தே தூற்றி ஆழ்த்தும்...!  பிறைசூடா ... ! 

இனியவனாய் இனியேனும் இன்னாரில் தர்மம் 
காக்கும் செந்தமிழர் குலம் செழிக்க ...! ஆதரவு தாரும்
இனமக்களுக்கு இனியேனும்....?  இனிமை தாரும்....!

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விரைவில் நல்வாழ்வு மலரட்டும்....

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி