திங்கள், 6 பிப்ரவரி, 2017

4.மாய மனதில் துளிர்த்தவை...!

மக்களைக் காக்கும் மாரி மகமாயி 
மன்னவன் கோலை மாற்றும் மயமாக 
சிக்கலைத் தீர்ப்பாய்த் தாயே தயவே;நீ 
சித்திரம் கொண்ட சீற்றம் உனதாக 
சுக்கிலாத் தூளாய்த் தூற்றுத் துவண்டோடும் 
சுந்தரம் மீண்டுத் தோன்றும் அரும்பாக
வக்கிரப் பேயை மாய்த்து மழையாகு
வந்தெமைக் காக்கும் தாயே மகமாயி

காலம் கனிவதிலே கோணங்கள்
கானல் எனப்பதியக் கூறுங்கள்
கோலம் எனத்தணியாக் கோளத்தில்
கோழை எனப்பனிந்தான் கூடத்தில்
வேலன் கனவுகண்ட வேடங்கள் 
வேளை வரமுயன்றும் தேக்கத்தில்
பாலம் படகிலென்றான் ஞானத்தால்
பாராய்ப் பழகுமென்றான் ஞாயத்துள்

கருத்துகள் இல்லை:

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி