சனி, 4 பிப்ரவரி, 2017

2.மாய மனதில் துளிர்த்தவை...!

1.நரசிம்ம அரிதாரம் பூச்சிட்டு 
நடக்கட்டும் அவதாரம் ஒன்றென்றே
அரியெண்ணப் பரிகாரம் தந்தாலும் 
அவனுண்ண பலகாரம் தந்தாயே
வரமொன்றும் கொடுப்பானோ என்றாடி
வயலெங்கும் பெருங்காற்று வீசிற்றோ
தரமென்றுத் தரவாகத் தங்கிற்று
தயவென்றுத் தலைதூக்கி வைத்தாடு

2.களவற்ற கண்ணே மணியே 
....குணமுற்றத் தன்னா லறிவாய் 
இளங்கன்றே இன்னார் இதயம் 
....இரும்பென்றக் கொள்கை மாற்று 
களத்தமேடுக் கழனி வாழ்வை 
....வருங்காலம் ஏற்க உணர்த்து 
கருத்துவிரை யும்பா ராது 
....பயங்களைந்து ஏறாய்க் கொழுந்தே ...

3.கற்றறிந்தோர்ச் சிந்தனையில் உதியும் கவியே 
பாக்கியமுண்டாகும் அவர்க்கு வழிபோன என்னை 
நிறுத்திஉள் புகுந்ததேனோ அறியேன் அறியேனே 
உன்னை அறிவார் உள்புகும் அன்னமே 
விட்டுசென்றாலும் தொட்டெனைத் தொடராய் 
தோல்வி யெனதில்லை தோற்றம் கொடுத்தேன் 
கல்லேன் கல்லேன் என்றல்லக் கல்லுவதென்று 
காயாகிப் பழமாகும் கோலம் உகந்ததே நான் 
கல்லாது கடந்துவிட்டேன் கொல்லாது கொள்ளும் 
தாயே என் தமிழன்னாய் நீயே பதில் கூறு ....
Image result for சிந்தனை

கருத்துகள் இல்லை:

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி