நான் என்ன சொன்னாலும் கேட்பதில்லை
நீ என்ன சொன்னாலும் கோபமில்லை
எக்கேடு கெட்டாலும் எனக்கு இல்லை
தப்பாதுப் போனாலும் கவலை இல்லை
கொட்டிக் கொடுத்தாலும் கோடி எல்லை
வட்டிக் கொடுத்தாலும் மாடி இல்லை
தட்டிக் கொடுத்தாளும் தாய்மை இல்லை
பட்டி அடைத்தானோ பாவம் உள்ளே
சிட்டாட்டம் சிறகடிக்க முடிவதில்லை
பட்டத்துப் படிகட்டே பாழுதெங்கும்
விட்டாள விதியொன்றும் வீதியல்ல
முட்டாளாய்ப் புகழ்தாங்கிப் போவதெங்கே
பட்டாலும் படியேறப் பாகமுள்ளே
பட்டாசு வெடித்தாளும் பாறையல்ல
கட்டாத படியொன்றுக் காணுதுள்ளே
கிட்டாதோ எனஎண்ணிக் கேள்விகுள்ளே
தப்பாட்டம் தலையாட்டிப் போகுதெங்கும்
நிப்பாட்டும் நிலையாய்ந்துப் பாருமண்ணே
செப்பாட்டம் கடத்திட்டுப் போகவில்லை
முப்பாட்டன் முனைந்தவழிப் போனதில்லே...
-மோ.தினேசுகுமார்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக