திங்கள், 2 மார்ச், 2015

நானெங்கும் சிவனைத் தேடி


நானெங்கும் சிவனைத் தேடி
         நாளெங்கும் அலைந்தேன் வாடி
தானெங்கும் நிறைவேன் வா,நீ
         தன்னுள்ளம் புகுவான் ஞானி
நான்வென்று நகரும் மேனி
         நில்லாது இறைக்கும் கேணி
தானென்ற உணர்வை தாண்டி
         தாயுமான சிவனைக் காணும் 

நித்திரை ஆண்டது போதும் 
         நர்த்தனம் ஆடிய நாதா 
சித்திரம் கண்டது போதும் 
         சட்டென சூடிட வாரும் 
சித்தனும் தங்கிட உள்ளம் 
         சிந்தனை தாங்கியே ஆடும்
நித்தமுன் சத்திரம் தாண்டி
         நாடகம் கண்டிட வா,நீ

1 கருத்து:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
ஊழிக்கூத்தனை பற்றி உள்ளம் கனிந்து பாடிய பாக்கள் நன்று இரசித்தேன்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி