புதன், 29 அக்டோபர், 2014

பூலோகம் சொர்க்கம் ...!


நேற்று பிரிந்தென்ன கண்டாய் மனமேயான்
அற்று அறிந்தென்ன கண்டேன் மயமேமாய்
வெற்று நிறைந்தெங்கும் கற்ற பிடிகொண்டு 
விற்று சரமாகும் நிலை கண்டேன்

பட்டது படியேற பக்குவம் பலமாகும் 
இட்டது விதி விளையாட விலையாகும்
கற்றதும் கடன் பெற்றதும் வெற்றுக்கு
தட்டுபட தாகம் அறியும் வழியே

நானாகி நீயாகி நாயகன் தானாகி 
தத்துவம் சித்தரித்த புத்தம் புதுமையாகி
புண்ணியம் பூலோக சொர்க்கம் புரிதலிலா
புன்னகை போர்த்தியே யாகம் 

ஆயிரம் அர்த்தம் புதையுண்ட காலகிடங்கு
ஆளும் தனியனே ஆடும் அவனியில்
காணுங் கருத்தியல் நீள இணைப்பிணை
மெய்யாய் உருகோர்க்கும் பெய்யா மழை

கடந்தது காணாது பொய்யே அவன்
அளந்தது காணாது பொய்யே அவன் 
அறிந்திட காணாது பொய்யே அவன்
பிறப்பிடம் ஆவதுன் மெய்யே ...

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல கவிதை...
சட்டை புதுசா...
நல்லாயிருக்கு...

குட்டீஸ் போட்டோ சூப்பர்....
வாழ்த்துக்கள்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி