வியாழன், 30 அக்டோபர், 2014

கடமை பதுமை...!


நெய்து தரிக்கட்டும் உடை மனிதம்
பெய்து பொழிக்கட்டும் விளை வழியே
எய்து தனக்கெட்டும் தான் கெட்டும் 
கொய்த பழமே இனிக்கும் வினை

விளைத்து பலனிலா வதைத்து கொணர
சிதைத்து விழும் வீனத்தவி வாதம்
களைத்த கருவே நினைத்து விழுதாம்
திலைத்த பருவம் திரித்த வினை

களம் நிறைய கடனும் குறைய
கவனம் இயற்றும் கருவி பிறவி
குடம் நிறையும் குணம் கரையும்
குளம் தெளிய விளைக்கும் 

கால மியற்றும் கடமை பதுமையாய்
நாளு மியங்கு தயங்கா புதுமையே
தாகம் அறிந்து தவிர்ப்பு மருந்திட
மேகம் பொழியும் மழையே 

மருவி மயமாய் நிறுவ அகலும்
பிணியே கனிவு மகவாய் பிறவும்
துணிவை திறவும் வழியே வகு
வாழ்வின் இறுக்க மறுக்கும் 




கருத்துகள் இல்லை:

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி