திங்கள், 10 மார்ச், 2014

அவன் வரைந்த கோலம்...!



மிச்சம் எதுமிலா அச்சம் அதுமிலா
சொச்சம் உருண்டது உண்டாக வாளும்
உணரும் திருநாள் ஒருநாள் அகத்துள்
அழுக்கை அகற்றப் புகுந்தான்

அனைத்தும் மறந்தான் அணைத்து மகிழ்ந்தான்
மனையாளை அற்றதும் மற்றதும் எட்டியே
வேடிக்கை பாடி புகழும் இளவலை
ஈன்ற பொழுது மழையிடி மின்னல்

துள்ளல் எனலாம் துவளும் உடையாள்
அருகில் அவன்பால் அழைக்க அழுகை
பெருக இருக இணைந்தாள் கழன்றோடி
கன்றும் பசுவும் இன்பமது ஊற்றாய்

இனியவன் பிறவி இயற்றும் அருவி
புகழும் மருவி இழைக்கும் கருவி
இனமும் மனமும் கனவின் குருவி
இயற்கை அழகும் இனிதாய் மலரும்

அயர்ந்தும் உறங்குவான் ஆணவம் கூட்டுவான்
அன்பின் உயிரவன் அர்த்தச் சிலையுத்தம்
ஆதியென் பூர்வகுடி பாதியென் பாக்யவிதி
ஆதவன் தூதுவன் ஆண்டவன் சேவகன்

அவனாடும் ஆட்டம் அடங்காத கூத்து
அறியாத பாட்டும் அவனேதும் சேர்த்து
அழகாக கட்டி அளவாட்டம் போடும்
அரிதார சுட்டி அவன்பெயரோ ....

அன்பு நண்பர்களுக்கு இனிய வணக்கம்...!
புதிதாக எழுத்தை துவக்குகிறேன் கவிதை வடிவில் ஒரு கற்பனை கதையை பலமும் வலமும் தாங்களே என்னையும் கரம்பிடித்து அழைத்துச் செல்லுங்கள் நலமுடன்..

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தொடர்ந்து வருகிறோம்...

வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கலியுக வாசம்...
தொடர்ந்து எழுதுங்கள் தினேஷ்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

செந்தமிழன் அவர்களே வருக வருக...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி