சனி, 15 மார்ச், 2014

அவன் வரைந்த கோலம் 3 ...!



உரியவன் உள்புக உன்னத மாகும் 
வசியம் தவசிகள் வேண்ட அவசியம்
ஆகுத பதம் பயிரிடுவான் மேற்கோள்
வியப்பில் அமிழவே செய்தது

தவமாய் தவமிருந்தும் தாராத செல்வம்
கனிவாய் உணர்வறிந்தும் ஊர்வ தறிந்தும்
செயல்வழுக்கா செய்நெறி தாங்குவச ரீர
சிறையில் உறைவான் இறைவன்

குழந்தை குணமே குமரன் நிலையாகி
வென்றது குற்றம் இழைக்கா உயர்வு
அகண்டு விரிந்த விடியலில் சூழும்
சுழற்சியின் ஆக்கம் அகமதி தீர்க்கம்

அவனுடன் உந்த உயிரின் மதிப்பும்
உழவனின் சேர்ப்பும் உவமை கலந்து
கவர்ந்த விழியே வழிகாட்டி செல்ல
சொலவொனா சோலை மயில்

குறுக்கும் நெடுக்கும் நடக்கும் எழிலெனும்
தோற்றம் தனியொரு மதியாகி காணத்
திகழ வரவும் செலவும் நிறைவில்
பருக உழவும் கரம் உணர்ந்ததில்

உள்ளம் இரண்டால் உடையவன் உள்ளான்
இருவரைக் கொண்டே இயங்கும் எமதும்
இயல்பிது நீரில்லா நீந்த இயலும்
எதிரும் புதிரும் அமரும் கருக்கொண்டே...

-மோ.தினேஷ்குமார்-

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சுவாரஸ்யம்... தொடர்கிறேன்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி