புதன், 12 மார்ச், 2014

அவன் வரைந்த கோலம் 2 ...!



இடைபுகுந்த வில்லாய் குமரன் அழைக்க
சுடும் பார்வையொன்றை வீச நினைக்க
சினம் அவிழ்ந்த முகம் சாந்தமாய்
அந்தி பருவத்துள் எட்டி நுழைய

கணை தொடுக்க குமரன் விடையவிழ்த்தான்
பாலன் இணையாய் இயல்பாய் இருவரின்
தேடல் இனியதும் மோதல் கொடியதும்
வெற்றி புதியதும் தோல்வி உரியதுமாய்

புகட்ட புகட்ட தெகிட்டா இனிப்பது
இந்திர தந்திரம் மந்திர எந்திரம்
சிந்திய வெண்பனி தீண்டிடும் புல்வெளி
அப்பன் அளிக்க பருகினான் உள்ளில்

சொல்லால் அமைக்க இயலுமெல்லாம் இல்லா
இயக்கமேது உந்திய கேள்வியில் ஊர்ந்தது
ஊற்றெடுக்க பாக்யம் வியந்து அயர்ந்தால்
புரிவதெது பூசிய வடு

புன்னகை யொன்றை விடுத்து புதிராய்
பதிய புதிய பிரகாசம் ஈன்றவளுள்
வந்தவன் கொண்டது வென்றதெது மில்லா
வகுத்தது வாழ்வழி சேர்க்கும் மிகையேமிகை

பேச்சை தொடர்ந்து அவன் அறியா
புகுந்தான் ஒருவன் விழிதப்ப நேரும்
வழிதப்ப வேண்டா இவனுள் குடியாகி
கூடு விழிக்கும் குணமாய் ...

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை...
அருமை...
தொடருங்கள்....

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி