செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

பொய்யுரை பெய்யுமின் தேக்கமே...!


என்னை கொலைசெய்ய கோடிக்கூர் ஆயுதம்
தேவை எண்ணச் சிலாம்புகள் வர்ணமாய்
கர்ணக் கனவினில் தாக்க புலரும்மெய்
பொய்யுரை பெய்யுமின் தேக்கமே....

மருந்தும் அருந்தும் மருக்கொழுந்தா உற்றதன்
சாயல் உணர்வதன் காயம் விழுப்புண்
தகிக்க விடியலின் தாகம் விருப்பதன்
தோற்றம் விளைவதைப் போற்றும் புகட்டு...

வடிவழகு நாடும் நிலையழகு சூடும் 
மதியழகு மாறும் மனமழகு சாரும்
தினமழகு கூட்டும் குணமழகு தேட
அதனிருள் நீங்கும் நலமே...

நீரோடும் பாதை வகுத்தவர் யாரறியே
நானோடும் பாதை வகுத்த வழியென
போராடும் பொய்க்களம் தானிது தந்திர
எந்திரம் போர்த்திய அந்தரம் ...

நானென்ற நான் தன்னை குறிக்க
நனவென்ற நான் உண்மை உதிர்க்க
நயமென்ற நாண் உள்ளில் புகுத்த
நரனெண்ணும் நான் காணுவேன் நானில்...

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

அடிக்கடி எழுதுங்க தினேஷ்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி