செவ்வாய், 5 அக்டோபர், 2021

கந்தனவன் தேடிடட்டும் ! நாயகனும் கூடிடட்டும் !



அந்தரத்தே ஆடுகின்றான் அப்பனவன் பாரெழிலை
அன்புருகத் தேடுகின்றேன் அர்ப்பணிக்க
வந்திரங்கி ஆடுமென்னில் வக்கனையாய்ச் சோறுமுண்டு
வன்னிமரத் தேகமுள்ளில் வந்தமராய்
மந்திரத்தில் மாயனென்ற மன்னவனே மாதவனே
மங்கையவள் ஈருடலாய் அர்த்தமெய்யாய்
தந்திரத்தைத் தாங்கிநிற்கும் தாணுமானத் தந்தையுமாய்த்
தாயுமானத் தான்தோன்றி வந்தருளாய்
எந்தவித மார்க்கமாக என்னுடனே ஏகமுமாய்
எண்ணற்றப் போகமெனத் தங்கிவிடேன்
கந்தனவன் தேடிடட்டும் நாயகனும் கூடிடட்டும்
கண்ணெனவே காத்திருப்பேன் காலமெலாம்
பந்தமெனப் பாடிவரும் பாசமென நாடிவரும்
பங்குமெனப் பார்வதியும் பாய்ந்துவர
எந்திரமாய் ஏற்றியுரு எண்ணுதலின் மாற்றமென
என்னுயிரில் ஏதுமிலா ஏங்கிதவி(ப்பேன்)

கருத்துகள் இல்லை:

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி