சனி, 2 அக்டோபர், 2021

உயிர்வரை உளந்தனில் !



கட்டுங் கடந்திங்குக் கடத்தியே கடந்துள்
கருவறைக் கரைவரைக் கருபொருள்
வட்ட வலைப்பிண்ணி வருந்தளிர் வணங்கி
வரைமுறை வரும்மறை வருங்களம்
ஒட்ட ஒளிர்ந்தெங்கும் ஒருத்திரி உயர்ந்துள்
உயிர்வரை உளந்தனில் உணர்த்திடத்
தட்டுத் தடுமாறித் தனித்தெனில் தடங்கொள்
தளத்திரைத் தகர்த்தெரித் தழைத்திடும்
பட்டப் படித்தாண்டிப் பகர்ந்தது பழுத்தப்
பழமறிப் பதத்தினில் பயனறி
சுட்டச் சுடரெழில் சுரமெனச் சுகத்தில்
சுழலெனச் சுடுமுனைச் சுடரறி
நட்ட நடவங்கு நலம்பெற நனைந்து
நடைமுறை நடுத்தர நலனென
விட்டு விளைத்தெங்கு விரைந்தன விதியாய்
வினையது விலையென விழித்திடு

1 கருத்து:

தனிமரம் சொன்னது…

அருமை .விலையென விழித்திடுவோம்!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி