தென்ன கத்தானடி உலகையே முன்னால்
தென்ற லாய்த்தீண்டிடும் உடனாய்
எண்ணம் தொட்டாடிட நழுவுமோ தன்னால்
எண்ணி ருந்தாயுவன் முதலாய்
வண்ண மிட்டாடிய மகிமையா! சொல்லாய்
வள்ள லாய்த்தோன்றிடுந் தயவே
கண்ணி லுங்காவிய மயமதே நல்லாய்
கந்த னைத்தந்தனே பரமா
வன்னி யுங்கன்னியுங் கரும்பென மொய்க்க
வச்சி ரத்தேகமே மருந்தாய்
மன்ன வன்தேடிடுங் கணையிலே மெய்யாய்
மந்தி ரத்தாணியும் சருகாய்
ஒன்றெ னாருள்ளிலே உயர்ந்திடும் சீவன்
அர்த்த மெய்யானவா! சிவனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக