திங்கள், 27 ஜூன், 2011

எங்கே நீ?...எங்கே நீ?...


எங்கும் நிலவுவதில்லை,- நீ
ஏன் இங்கு உலவுவதுமில்லை..?
காலத்தின் வேகத்தில்
உன்னை மறந்தாயோ..?
கலங்கும் கண்ணினுள்
கருவிழியும் தேடிட...!
எங்கு போனாயோ..?
என்ன ஆனாயோ...?
உண்மை அறிந்தாயோ...?!

உன்னை தேடும் பாதையில்
பாதகங்கள் ஏராளமாய்...
விருட்சமாகி உள்ளன.
யார் வளர்த்ததோ..? நிழலில்லாத
விருட்சமாய் விண்ணையும்
தொடும் போல வியக்கிறேன்..!!
பாதைகள் மாறியே பலதூரம்
பயணித்தும் உன்னையறியாமல்...

என்னை மறந்து மரணிக்கிறேன்..
நெடுந்தூர பயணத்தின் முடிவில்...!
அமைதியில்லா விடியலில்
அடங்கிப்போன சரிரத்தில்
அமைதியாக பிரியும்
உயிர் மட்டுமே அறியும் போல...!
அமைதியின் விடியலை.

9 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//உன்னை தேடும் பாதையில்
பாதகங்கள் ஏராளமாய்...
விருட்சமாகி உள்ளன.
யார் வளர்த்ததோ..? நிழலில்லாத
விருட்சமாய் விண்ணையும்
தொடும் போல வியக்கிறேன்..!!
பாதைகள் மாறியே பலதூரம்
பயணித்தும் உன்னையறியாமல்...//

அருமையான வரிகள்...

சக்தி கல்வி மையம் சொன்னது…

அருமையான கவிதை,
அசத்தலான வரிகள்..
நன்றி..

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான கவிதை,
அசத்தலான வரிகள்.

உணவு உலகம் சொன்னது…

//பாதைகள் மாறியே பலதூரம்பயணித்தும் உன்னையறியாமல்...
என்னை மறந்து மரணிக்கிறேன்..//
தேடலின் உச்சம்.

Priya சொன்னது…

அழகான வார்த்தைகள் கவிதை நன்றாக இருக்கிறது!

ஹேமா சொன்னது…

தேடுதல் ஏக்கமாய் விரிந்து நிற்கிறது வார்த்தைகளில்.எதைக்குறித்து என்று மறைத்து வைத்து எல்லோருக்கும் பொருந்தும்படியாக இருக்கிறது கவிதை !

வெட்டிப்பேச்சு சொன்னது…

//உன்னை தேடும் பாதையில்
பாதகங்கள் ஏராளமாய்...
விருட்சமாகி உள்ளன.
யார் வளர்த்ததோ..? நிழலில்லாத
விருட்சமாய் விண்ணையும்
தொடும் போல வியக்கிறேன்..!!
//

நல்ல கற்பனை..

வாழ்த்துக்கள்.

Dhanalakshmi சொன்னது…

//என்னை மறந்து மரணிக்கிறேன்..
நெடுந்தூர பயணத்தின் முடிவில்...!//

azhamana varigal......arumai....

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி