பருவ மயில் - அவள்
பார்த்ததும் காதலல்ல
பயங்கர சண்டை
சண்டையிலும் அவள்
முகம் கண்டு
சாந்தம் அடைந்தேன்
வீச்சருவால்
வீச துணிந்த கைகள்
அவள் வாசம்
அறிந்ததோ என்ன
பேசும் கண்விழியில்
பாசம் படர்ந்தன
பட்டென விட்டேன்
கைபிடியை
தாழவிழுந்தது அருவாள்
மட்டுமல என் மனமும்தான்
அவள் பாசவிழிகளில்....
நெற்கதிர் தலை
தூக்க மண்ணின்
பாசம் கண்டு
தலை கவிழ்ந்தனவோ
கதிர் விருப்பத்தில்
தலை கொய்தனவோ
கதிர் அருவாக்கள்.........
நாடு கடத்தப்பட்டு
வீடு திரும்பினேன்
அம்மன் கரகம்
சுமக்கும் பாக்கியம்
பெற்றேன்.......
கரகம் தரையிறங்க
தம்ம்பூலத் தட்டில்
திருநீரிருக்க என்
கைதனில் வழங்கலானேன்
திருநீர்........
நான் சன்னதி
திரும்பும் நேரம்
ஒரு கை
சோதித்த திருநீர்
அவள் கைஎன்றுனர்ந்தேன்
கை குழந்தையுடன்
அவள்.............
காவல் தெய்வமாக
நான் இன்றும்
காதலை மறந்து...........