ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

என்னைப்பற்றி சில வரிகள் 9

வாகனம் விடியலை நோக்கி விரைந்துகொண்டிருந்தது சரியாக காலை 8:00மணிக்கு சென்னை அடையாரிலுள்ள கல்வித்துறை அமைச்சரின் பங்களாவை அடைந்ததது அனைவரும் இறங்கினோம் எங்களுக்கு முன்னால் ஒரு நெடும் வரிசையில் மக்கள் கூட்டம் மனு ஒன்றை ஒவ்வொருவரும் கையில் பிடித்தபடி திக்கென்றது எங்களுக்கு என்னடா இவ்வளவு கூட்டமா விரைந்து வந்தும் விடியாதுபோகுமோ என்று அனைவர் மனதிலும் எண்ணம தோன்றும் நேரம்.
பங்களாவின் உள்ளிருந்து ஒரு குரல் வந்தது பதிக்கப்பட்ட மாணவர்களை அமைச்சர் ஐயா உள்ளே அழைக்கிறார் என்று அனைவரும் உள்ளே செல்லாமல் நானும் மற்றொரு நண்பனும் மற்றும் என் பெற்றோர் மற்றும் எங்களுடன் வந்த உறவினர் ஐவரும் சென்றோம் நான் முன்தினம் இரவில் அமைச்சரின் உடனதிகாரியுடன் கூறியதை தெளிவுடன் தக்க சாட்சியங்களுடன் அமைச்சரிடம் சமர்ப்பித்தோம் அவர் ஒரு அதிகாரக் கடிதம் ஒன்றை முத்திரையுடன் கொடுத்து இக்கடிதத்தை BOARD OF TECHNICAL EDUCATION OF TAMILNADU அங்குள்ள உயர் தலைவரிடம் கொடுக்குமாறு சொன்னார்கள் அவருக்கு நன்றி கூறி அனைவரும் விரைந்தோம் வாகனத்தில் கிண்டியை நோக்கி.
நாங்கள் சென்றதும் மற்ற வாகனமும் கிண்டியை வந்தடைந்திருந்தது அதில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள நான்கு மாணவர்களின் பெற்றோர்களும் சில மாணவர்கள் மட்டுமே வந்திருந்தனர். அனைவரும் சிற்றுண்டியை முடித்துவிட்டு BOARD OF TECHNICAL EDUCATION OF TAMILNADU அலுவலகத்தில் உயர்தலைவரின் வருகையை எதிர் நோக்கி காத்திருந்தோம். அவரும் நேரம் நெருங்கி கொண்டிருக்கையில் வந்துவிட்டார் அலுவலக அறையில் உள்ளார் அனைவருக்கும் உள்ளே அனுமதியில்லை என்று ஒரு சிலர் மட்டும் செல்லலாம் என்றனர் என் உறவினர் அவர் மட்டும் உள்ளே சென்று மாணவர்கள் பதிக்கப்பட்ட விதத்தினைக் கூறி அனைவரும் உயர் தலைவரிடம் பேச CONFERENCE ஹாலில் அனுமதிக்கப்பட்டோம்.
அவரிடம் கல்வித்துறை அமைச்சரின் அதிகாரக் கடிதம் கொடுக்கப்பட்டது கடிதத்தை படித்த மனிதர் கோபம் கலந்தகுரளில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்கு இதுவரை எங்களுக்கு இந்த சம்பவத்தின் செய்தி கிடைக்கவில்லை அனால் நீங்கள் கல்வித்துறை அமைச்சரிடம் சென்று வந்துள்ளீர்கள் பதிக்கப்பட்ட நீங்கள் முதலில் உதவிக்கு எங்களிடமில்லையா வரவேண்டும் என்றார் அச்சமயம் நான் எழுந்து நின்று மாணவர்களாகிய நாங்கள் இங்கு வந்ததையும் கல்லூரி முதல்வரின் மிரட்டலையும் விரிவாக விவரித்தேன்......
அவர் யோசிக்க தயாரானார் பின் கல்லூரியில் நடந்தவற்றை வினவினார் நானும் என் சகமாணவ நண்பர்கள் சிலரும் நடந்தவற்றை கூறினோம் கடுங்கோபத்துடன் அவர் கண்கள் பக்க சுவரை நோக்கின............

கடும் கோபம்
கொண்டவரோ.....
விடை கிடைக்குமோ
இவரிடம்.....
விளைவுகள் தான்
நேருமோ........

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி