செவ்வாய், 24 ஜனவரி, 2012

யார் உனைத்தாங்க...?


இடையிடையே மெல்லும் வார்த்தைகள்
தவறுதென் வழிகளிலே தடையுடைய 
தவமெதற்க்கு ஆயுத்தப்படுத்து அகமுள்ள
அறியதோர் உந்தன் கூர்வாளை 

தினமறிவேன் திசைத்தவறேன் திருத்தங்கள்
திருந்த பயணிக்கையில் விருட்சங்கள் 
நிழல்தர மறுப்பதென்ன நினைத் தொடர
நிலைப்பதென் தனிமையே

தலையாட தன்னோடே அசைப்போடும்
அகிலமெலாம் அரை நொடியில்
சுற்றிவரும் சிந்தனையின் ஆற்றல்
எவர்த்தருவார் இங்கு 

இன்னும் புதைக்கிறாய் ஏனோ வதைகிறாய்
ஆழ்வதும் தாழ்வதும் தானே உந்தன்
தனித்துவமென்றால் யார் உனைத்தாங்க 
பாரினில் வேந்தனாய் பயணப்படு ...!

9 கருத்துகள்:

Chitra சொன்னது…

தலையாட தன்னோடே அசைப்போடும்
அகிலமெலாம் அரை நொடியில்
சுற்றிவரும் சிந்தனையின் ஆற்றல்
எவர்த்தருவார் இங்கு


....... அருமையாக எழுதுறீங்க.... வாழ்த்துக்கள்!

rajamelaiyur சொன்னது…

அழகிய வரிகள்



இன்று மாணவர்களுக்காக பதிவில் ..

Thoduvanam சொன்னது…

"தினமறிவேன் திசைத்தவறேன் திருத்தங்கள்
திருந்த பயணிக்கையில் விருட்சங்கள்
நிழல்தர மறுப்பதென்ன நினைத் தொடர
நிலைப்பதென் தனிமையே"
நீங்களே விருட்சமான பின் நிழல் எதற்கு ?
ரொம்ப அருமையான வரிகள் .வாழ்த்துக்கள்

Admin சொன்னது…

தலையாட தன்னோடே அசைப்போடும்
அகிலமெலாம் அரை நொடியில்
சுற்றிவரும் சிந்தனையின் ஆற்றல்
எவர்த்தருவார் இங்கு.

நல்லதொரு கவிதை தோழர் வாழ்த்துகள்..

உணவு உலகம் சொன்னது…

நிறைய மாற்றங்கள் உங்கள் எழுத்தினில். எளிமை நிறைந்து வரும் தங்கள் கவிதை எங்களைக் கவர்கிறது. நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எல்லா வரிகளும் நல்லா இருக்கு ! பாராட்டுக்கள் ! நன்றி சார் !

கீதமஞ்சரி சொன்னது…

தன்னம்பிக்கை மிளிரச் செய்யும் அற்புத வரிகள். பாராட்டுகள்.

ஆழ்வதும் தாழ்வதுமா? - ஆள்வதும் தாழ்வதுமா? எது சரி?

சென்னை பித்தன் சொன்னது…

//அகிலமெலாம் அரை நொடியில்
சுற்றிவரும் சிந்தனையின் ஆற்றல்
எவர்த்தருவார் இங்கு //
கோனார் துணையின்றிப் புரிந்துகொண்டேன்!
நன்று.

முத்தரசு சொன்னது…

ஐயா புலவரே

நல்லா இருக்குயா நல்லாவே இருக்கு உமது கவி புலமை

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி