செவ்வாய், 13 ஜனவரி, 2015

பச்சை சேலை கட்டி வா நீ ...!


பச்சை சேலை கட்டி வா,நீ 
வயகாட்டு சோலையம்மா 
பக்கம் வந்து சொக்கி நிற்க 
ஆகாத தலைமுறை நான் 

எட்டு கட்டி மெட்டு கட்டி 
எகத்தாளம் விட்டு வெட்டி 
காக்கூழும் அரைக்கஞ்சும் 
மல்லாட்டை துவையலுந்தா 

சொல்லச் சொல்ல நா அருந்த 
தேடிச் செல்ல பாதை இல்லா 
பரிதவிக்கும் மனசு ஆறுதல் 
யார் சொல்ல யார் வெல்ல 

பசுவுக்கும் கன்று நான் பணம் 
படைத்த எண்ணம் பளிங்கு நாட 
திண்ணம் பழக்கம் வந்த திசையை 
பழிக்கும் எந்தன் குணமே குறை 

சொல்லி மாளாது சோகம் தீராது 
சோற்றில் பிடித்தவழ கனவாகுமா 
இன்று பொழுதும் ஒருபிடிச் சோறும் 
ஏலத்தில் எடுத்த வாழையிலை 

எனக்கென்ன உனக்கென்ன 
கெட்டா தடுப்பாயா கேட்டா 
கொடுப்பாயா எல்லாம் விட்ட 
வழி வயலுந்தன் சோலையம்மா 

பச்சரிசி பொங்கலும் பசும்பாலும் 
பொங்கணும் பன்னீர் கரும்பினிக்க 
வாழ்ந்தோரை வணங்கி நிற்கும் 
வழி தவறிய தலைமுறை நான் 

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முடித்த விதமும் அருமை...

UmayalGayathri சொன்னது…

அருமை சகோ

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமை! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

yathavan64@gmail.com சொன்னது…

அன்பு தமிழ் உறவே!
வணக்கம்!

இன்றைய வலைச் சரத்தின்,
திருமதி R..உமையாள் காயத்ரி அவர்களின்
வலைச்சரத்தில் - ஒரு - கதம்ப - மாலை.


சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகள்!

வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி