சனி, 3 ஜனவரி, 2015

இறவாத மெய்கள் இனம்கண்ட பொய்கள்...!


கதிரவன் ஆட்சியே காலமாய் சோலை 
உதிர்க்கும் மலரெழுதும் சாட்சி கனவில் 
சதிராடும் கானல் களவுதான் போலும் 
எதிராடும் நாணல் நகை 

உறங்காத வாழ்க்கை உலவுதே தேசம் 
திறவாத கண்கள் கலவுதே நேசம் 
இறவாத மெய்கள் இனம்கண்ட பொய்கள் 
புறங்காண ஏக்கம் மழை

நிலவென தொட்டு நிலமதில் விட்டு 
உலகென சுட்டி உலவவே மொத்தம் 
சலனமும் சுத்தம் சடுகுடு சித்தம் 
கலக்கமற்ற காத்தல் சுகம் 

காவியம் ஏதடா காதலை கேளடா 
தாவிய பேதமும் தாக்கிய கோணலே 
காவியும் சேதமே சாதகம் சேர்க்குமா 
தேவியின் போதனை சொல்

சூட்சுமம் உன்னையே சூழ்ந்தது உண்மையே
சூழ்நிலை தன்னையே சார்ந்தது உண்மையே
சூழ்ச்சிகள் தன்னகம் சேர்த்தது உண்மையே
சூத்திரம் காரணம்தான் சூடும்  

2 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமான சிந்தனை...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி