செவ்வாய், 11 மார்ச், 2014

அவன் வரைந்த கோலம் 1...!



காலைக் கதிரவன் சுடர் வீச
சுகந்த மனம் சுமந்த வரவே
எனினும் கனியா கனிகள் பலவே
அயர்ந்த கிரக்கம் அடைந்தே

புலப்படும் நாளின் திகைப்பு அறியா
அகப்படும் ஆளுமை சூழ்ந்த உலகம்
சுயமிலா சூத்திரம் தங்கிய மாயை
மழலையை சூழ்ந்த வசந்தம்

காலஓட்டம் காற்றில் கரைய கதையை
துவக்கும் சமயம் அகப்பட ஆதவன்
சுற்றமெங்கும் சூழ அமைதியான நாடகம்
அரங்கேற ஆடுபவன் ஆட்டம்

திருக்குமரன் அன்பாய் குமரன் எனவே
குழுமிய வட்டத்துள் வாலிபம் எட்டும்
வயதுதான் கிட்டகிட்ட கீழ்வானம் செல்ல
நடைபோடும் நாயகன் ஆட்சி

களத்தமேடு காதல் உருவே சமைத்த
உணவும் சகிதமாய் அள்ளி பகிர்ந்தால்
பாக்யம் வயறு நிரம்ப சிறிதுறக்கம்
தட்ட விழிமூடிய வேலை

விளைந்த பயிர் முளைந்த தடம்
களைந்த கிளை கவர்ந்த வரப்புநீர்
ஓட்டம் வரம்பில்லா பாயும் புலியென
அர்த்தம் அரிதாரம் பூசியது

அறிந்தானா ஆரம்பம் ஆகாயம் நீயென்றான்
அதற்கென்ன ஆதாரம் என்றால் பாக்யம்
இடைபிடித்து இன்பவலை வீச அருகெதிரே
ஓடிவந்த குமரன் அப்பாவை அழைத்தான்...

- மோ.தினேஷ்குமார்-

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நாயகன் ஆட்சியை அறிய தொடர்கிறேன்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

அவன் வரைந்த கோலம் எங்களுக்குள்ளும்...
அடுத்த பதிவுக்காய் ஆவலாய்....

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி