புதன், 6 மார்ச், 2013

சர்வேசா........!

அடி ! அம்மாடி நீயெந்தன் முன்னோடி 
நானிசைய நாவழையும் தாகம் தலையாட்டி
தேரடியை பாராய் பவமணியும் பாரம்
பராபரமே நாற்புரம் சூடா மலராய்

முழுமை அறியாமல் மூழ்கி தவிக்க
நிறையா மதியும்மதி ஆழும் மயக்கமதில்
மாயனெந் தன்மாயை ஆளும்மா றுதல்காணே
நேருடல் வேரிட ஆறுதல் ஆனேன்

மருவிமா யாவி குருவிகூடு தாவி
மகுடியிலி சைக்குதென் மாயை மறுபிடி
தாங்க மையலுன்னை மீட்டதா வணியில்
தலைமலர் பாவண்ணம் பாட

நானாடும் நாட்டிய மேடையுடன் தானாட
தள்ளாடும் தாளகெதி திண்டாடும் பாதமலர்
சொல்லாடும் சிங்கார பாலமுத பாவை
பரியமர சாலையுந்தன் சாரமே சர்வேசா........!

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையாக முடித்துள்ளீர்கள்...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

nice..

சக்தி கல்வி மையம் சொன்னது…

thalaivare padikka lettaanaalum arumai. nanri ..

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி