ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

இனிவருவேன் வாசம்நாடி...!





 ஊர்விடிய ஓர்வழியாய் நாதனிடம் நாடி
நலமெனவோ நாள்காட்டி தீக்காய மீட்டி
சுடரவனே சூழுமினி சூழலினை மாற்றி
நடைபோட வைத்தவன் தேடினின் மாயம்



 உதிர்ந்த மலரங்கே பேச மனமங்கே
மாலையொன்று கோர்க்க தினம்வந்து தீயாய்
எழுத்தை திரிதனில் மூட்ட முடிவாய்
மலைமுகடு போலங்கும் வீழ்ந்தேன் வீனே


நேற்றுவரை தோல்வியெந்தன் வாசல் இயலாக
காற்றுவரும் நேரமென்னை தூற்று கனியட்டும்
நாளை கனவிருண்டு பாரமங்கே காரியமாய்
காலை உதயம் எமக்கென வேண்டும்தா

 
நாடகக்கார னென்று நகைத்தேன் தேகத்துள்
ஊடகமொன்று பெட்டிக்குள் ளடங்காத சித்திரமாய்
ரத்தின மாலையிட்டு எத்துனை வேடங்கள்
சத்திரத்து சோறுண்ணும் சாரதிக்குள் நீதி


இனிவருவேன் வாசம்நாடி சிலையெல்லாம் சில்லென
வீருகொண்டெழ வீதியில் நாட்டிய மாடிடுவேன்
கட்டிய மூட்டையில் மீதியில்லாது நாதிய
தாண்டவம் மீண்டுவிழ நீர்க்குமென் ஆதி 
 

கருத்துகள் இல்லை:

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி