புதன், 20 பிப்ரவரி, 2013

மறையெந்தன் கூடே...!

 
அன்றென்ன காணேன் அகமுடை நின்றன்ன
தாநீர் மழைதருந் தீயனதீண்டா தாகையான்
கண்ணமிடை அன்னமலர் தாங்கிநின் ரானைவிதி
ஓங்கி துதித்தானே ஓரன்மன் காணே............
அணியனா ஆருதல்இ டுவனா கெடுவன
ஆற்றி தடுவன காட்டினில் கூடினின்
ஆடும் நெடுவனன் தோற்றத்தில் யாகின
யாவும் அடங்கிடும் சாரமுள்ளே........
தடவரை தாண்டி எதுவரை ஓடும்
தடமரை தேடி யுடுத்தும் அணியாய்
மணியே மரகத மாணிக்க சித்தம்
தொடுவுரை காட்டும் உனையே............
 
புரியா புதிரொன்று கூறேன் அறியா
மறையெந்தன் கூடே நிறையா மடமென்றும்
காணேன் கனவிடும் ஈர்ப்பினி யாளும்
இரவணி போர்த்திய தேகம்....
 

கருத்துகள் இல்லை:

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி